கண்ணாமூச்சி ரே ரே – 41

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – அடுத்தநாள் காலை ஆரவாரமாக விடிந்தது.. அகழி கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது..!! கோயிலை சுற்றிலும் மாக்கோலமும், மாவிலை தோரணங்களும்.. கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியில் கோவிந்தராஜனின் கணீர் குரல்..!!

“சின்னஞ்சிறு பெண் போலே.. சிற்றாடை இடை உடுத்தி.. சிவகங்கை குளத்தருகே.. ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்..!!”

வெள்ளையும் காவியுமாய் புதுவர்ணப் பூச்சோடு கோயில் சுவர்கள் பளபளத்தன.. பக்கத்திற்கு ஒன்றாய் பச்சை வாழையுடன் கோயிலின் வாயில்..!! வாயிலில் இருந்து நீண்ட சாலையில் புதிது புதிதாய் நிறைய கடைகள் முளைத்திருந்தன.. பலூன் கடை, பாப்கார்ன் கடை, வளையல் கடை, வாழைப்பழ கடை.. எல்லா கடைகளின் முன்பாகவும் மக்கள் கூட்டம்..!! குழந்தைகளை ஏற்றிக்கொண்டு குடை ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. கன்னியரை சைட்அடிக்கிற காளையர் கூட்டம் ஒன்றும், ராட்டினத்துக்கு போட்டியாய் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தது..!!

ஆண்டு முழுதையும் ஒருவித அழுத்தத்திலேயே கழிக்கிற அகழி ஜனங்கள்.. இறுக்கம் தளர்ந்து சற்று சிரிக்க நினைக்கிற இரண்டு தினங்கள் இவை..!! வஜ்ரேஸ்வரி அம்மனுக்கு பங்குனிப் பொங்கல்.. வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற உற்சவம்.. வேறூருக்கு பிழைக்க சென்றிருப்பவர்கள்கூட சொந்தஊருக்கு வந்தடைகிற சமயம்..!! போன வாரமே காப்பு கட்டியாயிற்று.. இந்த இரண்டு தினங்கள் இன்னும் விசேஷமானவை..!!

ஊர்மக்களில் கணிசமான விழுக்காட்டினர் புத்தாடை அணிந்து வலம்வந்தனர்.. எல்லோர் முகத்திலும் ஒரு இயல்பான மலர்ச்சியை காணமுடிந்தது..!! பெரியவர்களை காட்டிலும் சிறுசுகளிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.. கோயிலுக்கு முன்பு கொட்டிவைத்திருந்த மணலில், கும்மாளமாக குதித்து விளையாடின குழந்தைகள்..!!

அந்த குழந்தைகளிடம் இருந்த உற்சாகத்தின் ஓரளவு.. தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்த ஆதிராவிடமும் காணப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..!! நேற்றுமுழுதும் மனதை சூழ்ந்திருந்த குழப்பமேகம், இன்று சற்றே கலைந்து விலகியிருந்தது.. ஷவரில் கொட்டிய வெதுவெதுப்பான நீரை அண்ணாந்து வாங்கிக்கொண்ட அவளது முகத்திலும் ஒருவித தெளிவை உணரமுடிந்தது..!! ஊரில் திருவிழா என்ற உள்ளுணர்வுதான் அவளது அந்த உற்சாகத்தின் ஊற்றுக்கண்..!! சிறுவயது முதலான திருவிழா தொடர்பான நினைவுகள் எல்லாம்.. அவளையும் அறியாமல் அவளது மனதுக்குள் முண்டியடித்து கிளம்பின..!!

குளித்துமுடித்த ஆதிரா, உள்பாவாடையை மார்புகளுக்கு மேலாக உயர்த்திக்கட்டி முடிச்சிட்டாள்.. கூந்தலை ஒரு டவல் சுருட்டியிருக்க, இன்னொரு டவலால் தோள்களை மறைத்துக் கொண்டாள்..!! கசக்கிப் பிழிந்த உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு பாத்ரூம் கதவை திறந்தாள்.. திறந்ததுமே பக்கென ஒரு திகைப்புக்கு உள்ளானாள்..!! வெளியே.. வாசலை அடைத்துக்கொண்டு சிபி நின்றிருந்தான்.. அவனது உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை..!! அவனை எதிர்பார்த்திராத ஆதிரா அவ்வாறு திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே.. சிபி படக்கென கதவைத்தள்ளி உள்ளே நுழைந்தான்.. மனைவியின் புஜத்தினை பற்றியிழுத்து முரட்டுத்தனமாக அவளை அணைத்துக் கொண்டான்..!!

“ஐயோ.. என்னத்தான் இது..??” ஆதிரா சிணுங்கியவாறே நெளிந்தாள். அவன் அணைப்பில் இருந்து விடுபட முயன்றாள்.

“தூங்குறப்போலாம் அப்படியே வந்து ஒண்டிக்கிற.. குளிக்கிறப்போ மட்டும் தனியா விட்டுட்டு வந்துடுற..??” பிடித்தபிடியை விடாமல் சிபி குறும்பாக சொன்னான்.

“ஓ.. வேற என்ன பண்ணனுமாம்..??”

“ம்ம்..?? என்னை கூப்பிட்ருக்கலாம்ல..?? குட்டிப்புள்ளயை குளிப்பாட்டி விட்ருப்பேன்ல..??”

“ம்க்கும்.. ஆசைதான்..!! ஏன்.. நைட்டு போட்ட ஆட்டம் பத்தலையாக்கும்..??”

“யானைப்பசிக்கு சோளப்பொரியை விட்டெறிஞ்சுட்டு.. பத்தலையான்னு வேற கேக்குறியா..?? இங்க கொழுப்பு இருந்தா இப்படிலாம் பேச சொல்லுமோ..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் பின்புறத்தை அழுத்தி ஒரு பிடி பிடிக்க, அவள் விழுக்கென்று கிடந்து துள்ளினாள்.

“ஐயோ.. விடுங்கத்தான்.. காலங்காத்தாலேயே..??”

“ஏன்.. காலங்காத்தால ரொமான்ஸ் பண்ணக்கூடாதா..?? ஏதாவது சட்டம் போட்ருக்காங்களா..??”

“ம்ம்..?? நைட்தான எல்லாம் ஆச்சு.. அப்புறம் என்ன.. காலைலேயே..??”

“நைட் நல்லா சாப்பிட்டுட்டுத்தான் தூங்குறோம்.. காலைல எழுந்ததும் பசிக்கிறது இல்லையா..?? அந்த மாதிரித்தான்..!!”

“ஓஹோ.. லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா.. இதுக்குலாம் இப்போ டைம் இல்ல.. கோயிலுக்கு கெளம்பனும்..!!”

“கெளம்பலாம் கெளம்பலாம்..!! அதுக்கு முன்னாடி.. வீட்லயே ஒரு ஸ்பெஷல் தரிசனம் பார்த்து, அர்ச்சனைலாம் முடிச்சுட்டு அப்புறமா கெளம்பலாம்..!!” சிபி போதையாக சொல்லிக்கொண்டே, ஆதிராவின் உள்பாவாடையை உயர்த்த முயல,

“ச்சீய்ய்ய்ய்..!!!” அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள் ஆதிரா.

“விடுங்கத்தான்.. நான் போகணும்..!!” என்று கெஞ்சினாள்.

“ம்ஹூம்..!! அதுக்குலாம் நீ சரிப்பட்டு வருவியான்னு பாக்காம.. இன்னைக்கு உன்னை வெளில அனுப்புறதா இல்ல..!!”

“எதுக்குலாம் சரிப்பட்டு வருவனா..??”

சிபி இப்போது ஆதிராவின் காதருகே ஏதோ கிசுகிசுக்க, அவள் அப்படியே முகத்தை சுளித்தாள்.

“ஐய்ய்ய்ய்யோ.. கருமம்..!!!!!”

“வா.. ட்ரை பண்ணிப் பாக்கலாம்..!!”

“இப்போ விடப் போறீங்களா இல்லையா..??” ஆதிரா சற்று கடுமையாக கேட்டாள்.

“சான்ஸே இல்ல..!!” சிபி பிடிவாதமாக இருந்தான்.

கணவனின் செய்கையில் கடுப்பாகிப்போன ஆதிரா.. இப்போது தனது கைகளில் ஒன்றை நீட்டி.. சுவற்றோடு பொருந்தியிருந்த அந்த குமிழை பிடித்து சரக்கென திருகினாள்.. உடனே ஷவரில் இருந்து சர்ர்ர்ரென நீர் பீய்ச்சியடித்தது..!! ஆதிராவை கதகதப்பாக அணைத்துக்கொண்டிருந்த சிபியின் முதுகில்.. சடசடசடவென குளிர்ந்தநீர் கொட்டவும்.. ‘ஹேய்ய்ய்ய்..!!’ என்று கத்தியவாறு உடலை முறுக்கி உதறினான்.. அவனது உடும்புப்பிடியை சற்றே தளர்த்தினான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கணவனின் அணைப்பில் இருந்து அவசரமாய் நழுவி, கதவு திறந்து வெளியே ஓடினாள்..!! வெளியில் சென்று திரும்பி பார்த்து..

“யார்கிட்ட..??” என்று நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள். தொடர்ந்து..

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” என்று எளிறுகள் தெரிய சிரித்தாள்.

முகத்தில் வழிந்த நீரை இருகையாலும் துடைத்தெடுத்த சிபி.. கனைக்கிற மனைவியையே கடுப்புடன் பார்த்தான்..!! அசையாமல் நின்று, கொட்டுகிற ஷவரில் நனைந்தவாறே.. ஆதிராவை போலியாக எச்சரித்தான்..!!

“இளிக்கவா செய்ற..?? இன்னைக்கு நைட்டு எல்லாத்துக்கும் சேர்த்து இருக்குது..!!”

“ஹாஹா.. பாக்கலாம் பாக்கலாம்..!!”

சிரிப்புடனே சவால் விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஆதிரா.. மாடிப்படியேறி தங்களது அறைக்கு விரைந்தாள்..!! கணவனின் குறும்பை நினைத்து.. அவளது மனதுக்குள் ஒரு பூரிப்பு.. உதடுகளில் ஒரு வெட்கம் கலந்த புன்னகை..!!

அறையை அடைந்ததும் கதவை சாத்தி தாழிட்டாள்.. உடுத்தியிருந்ததை களைந்துவிட்டு வேறு உடை அணிந்துகொள்ள ஆரம்பித்தாள்..!! சந்தன நிறத்து ப்ராவால் தனது மார்பழகை மறைத்து மூடியவள்.. இரண்டு கைகளையும் பின்பக்கம் செலுத்தி ஹூக் மாட்ட முயன்றாள்..!! ப்ரா மிகவும் இறுக்கமாக இருந்தது.. கொக்கியை கோர்க்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.. ‘அடுத்த சைஸ் மாத்தணும்’ என்று வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..!! உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு.. உடம்பை சற்றே முன்னுக்கு தள்ளி.. முகத்தை நிமிர்த்தி மேலே பார்த்தவாறு.. ஹூக்கை மாட்டிக்கொள்ள முயன்றவள்.. ஒருகணம் அப்படியே உறைந்துபோய் நின்றாள்..!!

எதேச்சையாகத்தான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அலமாரியில் நீட்டிக்கொண்டிருந்த அந்த புத்தகம்.. அன்று தாமிராவின் அறையில் இருந்து எடுத்துவந்திருந்த புத்தகம்.. கருப்பு அட்டையுடனும், ‘கண்ணாமூச்சி ரே ரே’ என்கிற தலைப்புடன்..!! அன்று அந்த புத்தகத்தின்மீது சிந்திய சிவப்பு மை.. அதன் அட்டையில் விரவி, இப்போது காய்ந்துபோய் காட்சியளித்தது..!! அன்று ஏனோ ஆதிராவின் கவனத்தை அது கவரவில்லை.. இன்று கவர்ந்தது.. அந்த சிவப்புமையின் பரவல், சீரான ஒரு ஓவியமாக அவளுக்கு தோன்றியது..!!

ஹூக்கை மாட்ட மறந்துபோய், கையை நீட்டி அந்த புத்தகத்தை எடுத்தாள்.. அட்டையின் மீது கூர்மையாக பார்வையை வீசினாள்..!! ஏதோ ஒரு மலருடைய இதழ்களைப்போல.. மை அந்த அட்டையில் படர்ந்திருந்தது.. சற்றே வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு மலர் எனலாம்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மூளைக்குள் சுருக்கென்று ஒரு மின்னல் வெட்டு..!!

‘இந்த மாதிரியான இதழமைப்பு கொண்ட மலரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே..?? எங்கே..??’

என்கிற ரீதியில் மனதுக்குள்ளேயே பேசியவள்.. தனது நெற்றியைப் பற்றி பிசைந்து கொண்டாள்.. நினைவுக்கு கொண்டுவர முயன்றாள்..!! ‘எங்கே.. எங்கே.. எங்கே..’ என்று திரும்ப திரும்ப கேள்விகேட்டு.. தனது மூளையை தட்டியெழுப்பி சுறுசுறுப்பாக்கி.. மறந்துபோனதை மனதுக்குள் எடுத்துவர முயன்றாள்..!!

“டக்.. டக்.. டக்.. டக்..!!” – அறைக்கதவு அவ்வாறு தட்டப்பட்டதும் ஆதிராவுக்கு கவனம் கலைந்து போயிற்று.

“யாரு..??” என சற்று எரிச்சலாகவே கேட்டாள்.

“நாந்தான்க்கா..!!” – அறைக்கு வெளியிருந்து தென்றலின் குரல்.

“ம்ம்.. சொல்லு..!!”

“ரூம் கிளீன் பண்ணனும்க்கா..!!”

“ஓ.. ஒருநிமிஷம் இரு..!!”

“சரிக்கா..!!”

ஆதிரா அந்த புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்தாள்.. அவசர அவசரமாய் ஹூக் மாட்டிக் கொண்டாள்.. ஆரஞ்சு நிறத்திலான அந்த பட்டுப்புடவையும், அதற்கு பொருத்தமானதாய் ஒரு ரவிக்கையும் அணிந்துகொண்டாள்..!! அவளது கூந்தலை இன்னும் பூந்துவாலை சுருட்டியிருக்க.. அப்படியே நடந்து சென்று கதவை திறந்தாள்..!! கதவு திறந்து வெளியே பார்வையை வீசியவளின் முகத்தில்.. உடனே ஒருவித ஆச்சர்யம் கலந்த பூரிப்பு..!!

வெளியே தென்றல் நின்றிருந்தாள்.. என்றுமில்லாத ஒரு புதுவித அழகுடன் இன்று ஜொலிஜொலித்தாள்..!! இளமஞ்சள் நிறத்தில் புடவை.. நேர்த்தியாக பின்னப்பட்ட கூந்தல்.. பவுடர் போட்டு பளிச்சென்றிருந்த முகம்.. லிப்ஸ்டிக் தீட்டி பளபளத்த உதடுகள்.. கை, கழுத்து, காதில் எல்லாம் புதிதாய் அணிகலன்கள்..!! இப்போதுதான் மொட்டிலிருந்து அவிழ்ந்துகொண்ட மலர்போல.. புத்துணர்வோடும், புதுப்பொலிவோடும் தோற்றமளித்தாள்..!!

“வாவ்…!!!!!” வாய்விட்டே ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் ஆதிரா.

“என்னக்கா..??” தென்றல் புரியாதவளாய் கேட்டாள்.

“சூப்ப்ப்ப்பரா இருக்குற தென்றல்..!!!”

“ஹையோ.. போங்கக்கா..!!” – தென்றலிடம் இப்போது ஒரு வெக்கம்.

“ஹேய் நெஜமாத்தான்.. அப்படியே ஜொலிக்கிற போ..!! ம்ம்ம்ம்ம்ம்… ஸேரி ரொம்ப அழகா இருக்கு..!! புதுசா..??”

“ஆமாம்க்கா..!! அண்ணன் இப்போ ஊர்ல இருந்து வர்றப்போ வாங்கிட்டு வந்தான்..!!” Kanji Kudikkum Tamil New Sex Stories

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000