கண்ணாமூச்சி ரே ரே – 43

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – அன்று மாலை ஐந்தரை மணி.. சிங்கமலையை ஒட்டிய ஆளரவமற்ற வனப்பகுதி..!! வானில் திரண்டிருந்த மேகக்கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டுமரங்களும்.. சூரியனின் வெளிச்சத்தையும், வெப்பத்தையும் சுத்தமாக வற்றிப்போக வைத்திருந்தன..!! மெலிதாக படர ஆரம்பித்திருந்த மாலைப்பனி.. காற்றின் ஈரப்பதத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது..!! இங்குவரை கேட்ட கோயில் ஒலிப்பெருக்கியின் சன்னமான சப்தத்தை தவிர.. சூழ்நிலையை சுற்றிலும் ஒரு கெட்டியான நிசப்தம்..!!

அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்ற அந்த குறுகலான ஒற்றையடி மலைப்பாதையில்.. அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்தனர் அந்த மூன்று இளம்பெண்கள்.. தென்றலும் அவளது பள்ளித்தோழிகள் இருவரும்..!! பாவாடை சட்டையும், ரெட்டை ஜடையுமாக முன்னால் நடப்பவள் வாசுகி.. பச்சை தாவணியும், ஒற்றை பின்னலுமாய் இடையில் செல்பவள் மேகலா..!! இருவரையும் சிறிது இடைவெளி விட்டு பின்தொடர்கிற தென்றல்.. இப்போது பொறுமையற்றவளாய் தோழிகளிடம் கேட்டாள்..!!

“ஏய்.. எங்கடி கூட்டிட்டு போறீங்க என்னை..??”

“………………………..”

“சொல்லுங்கடி.. கேக்குறேன்ல..??”

“ப்ச்.. கொஞ்சநேரம் வாயை மூடிட்டு கம்முனு வாடி..!!” வாசுகி எரிந்து விழவும்,

“ஏய் மேகலா.. நீயாவது சொல்லுடி.. எங்க போயிட்ருக்கோம் இப்போ..??” அடுத்தவளிடம் கேட்டாள் தென்றல்.

“ஏன் அவசரப்படுற..?? இன்னும் அஞ்சு நிமிஷத்துல உனக்கே தெரியப்போகுது..!!” மேகலா சாந்தமாகவே பதில் சொன்னாள்.

“ப்ச்.. உங்க ரெண்டுபேருக்கும் என்ன லூஸா..?? திருவிழான்னு ஊரே அங்க கோயில் முன்னாடி கெடக்குது.. நீங்க என்னடான்னா.. இந்த நேரத்துல.. காட்டுக்குள்ள..” தென்றல் சொல்லி முடிப்பதற்கு முன்பே, முன்னால் சென்றுகொண்டிருந்த வாசுகி இப்போது திரும்பி பார்த்து சொன்னாள்.

“ஊரே கோயில் முன்னாடி கெடக்குதுல.. அதான்..!! இதைவிட்டா நமக்கு வேற சான்ஸே கெடைக்காது..!!”

“அ..அப்படி என்னடி பண்ணப் போறீங்க..??” தென்றலின் கேள்வியில் இப்போது எக்கச்சக்க குழப்பமும், அதே அளவு ஆர்வமும்.

“வா.. சொல்றோம்..!!”

அடுத்த ஐந்தாம் நிமிடம்.. அந்த மலைச்சரிவில் இருந்த மறைவான பாறைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தனர் மூன்று மங்கையரும்..!! தென்றலுக்கு இன்னுமே என்னவிஷயம் என்று தெளிந்திருக்கவில்லை.. ஆர்வமிகுதியால் அரித்தெடுத்தாள் அவளது தோழிகளை..!!

“இப்பயாச்சும் சொல்லுங்கடி.. இங்க எதுக்கு வந்து உக்காந்திருக்கிங்க..??”

“அடச்சீய்.. அவசரத்துக்கு பொறந்தவளே..!! அப்படியே பறக்காதடி.. சொல்றோம் இரு..!!” எரிச்சலாக சொன்ன வாசுகி, மேகலாவிடம் திரும்பி

“ம்ம்.. எடுத்து காட்டுடி..!!” என்றாள். மேகலா இப்போது தென்றலை ஒரு குறும்புப் பார்வை பார்த்தவாறே,

“ஏய் அரிசிமூட்டை.. இப்போ நான் காட்டப்போறதை பாத்து, அப்படியே நீ வாயை பொளக்கப்போற..!!” என்றுவிட்டு, தனது மார்புகளை மூடியிருந்த தாவணியை, படக்கென கீழே எடுத்துப்போட்டாள்.

“எ..என்னடி பண்ற..??” – தோழியின் கழுத்துக்கு கீழ் வெறித்த தென்றலின் முகத்தில் ஒரு மிரட்சி.

“டொட்டடய்ய்ங்ங்க்..!!!!” கண்சிமிட்டிய மேகலா, விம்மிக்கொண்டிருந்த தனது ரவிக்கைக்குள் கையை விட,

“ஏய் ச்ச்சீய்ய்ய்..!!!!” கத்தியே விட்டாள் தென்றல். கண்கள் இரண்டையும் கைகள் இரண்டாலும் பொத்திக்கொண்டாள்.

“அடச்சைய்.. அது இல்லடி..!! இது வேற..!! இங்க பாரு..!!”

மேகலா அவ்வாறு கடுப்பாக சொன்னதும்தான்.. தென்றல் அவளது கண்களை மெல்ல திறந்தாள்..!! விரிந்திருந்த மேகலாவின் கைகளில் அவள் சொன்ன அந்த இது.. கோல்ட்ஃப்ளேக் சிகரெட் பாக்கெட்டும், கொளுத்துவதற்கென்று ஒரு தீப்பெட்டியும்..!! அவற்றை பார்த்ததுமே தென்றல் அப்படியே வாயைப் பிளந்தாள்.. சற்றுமுன் மேகலா சொன்னது போலவே..!!

“அடிப்பாவிகளா..!!! பீடி குடிக்கத்தான் இவ்வளவுமா..??”

“என்னது..??? பீடியா..??? அப்டியே போட்டன்னா..!! பில்ட்டர் சீரட்டுடி இது..!!” வாசுகி முகத்தை சுளித்தவாறு டென்ஷனாக சொன்னாள்.

“எதோ ஒரு கருமம்..!! இதை குடிக்கத்தான் இம்புட்டுதூரம் இந்த காட்டுக்குள்ள வந்தீகளாக்கும்..??”

“ஹ்ம்ம்.. என்ன பண்றது.. நடுவீட்ல வச்சு குடிக்கனும்னு எனக்கும் ஆசைதான்.. எங்கம்மாக்காரி வெளக்கமாத்தாலேயே சாத்துவாளே..!!”

“ஏன்.. இப்போ மட்டும் சாத்தமாட்டாளா..??”

“அவளுக்கு தெரிஞ்சாத்தான சாத்துவா..??”

“நான்தான் இப்பப்போய் போட்டு குடுத்துடுவன்ல..??” தென்றல் கேஷுவலாக சொல்லவும், வாசுகிக்கு சுர்ரென்று கோவம் வந்தது.

“அடிங்.. போட்டு குடுப்பியா..?? ஏய் மேகலா.. அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!”

“ஹாஹா.. பாவம்டி..!!”

“போட்டுக் குடுப்பேன்றா.. இவளைப்போய் பாவம்ன்ற..??”

“பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!! இந்த அரிசிமூட்டையை தூக்கி சொமக்குற நெலமை அந்த குறிஞ்சிக்கு வரவேணாம்.. பாவம்.. ஹாஹாஹாஹா..!!” மேகலா சொல்லிவிட்டு சிரிக்க, வாசுகியும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

தென்றலோ தோழிகள் இருவரையும் கடுப்புடன் முறைத்தாள்.

“ம்க்கும்..!! இவளுகளுக்கு அப்படியே மனசுக்குள்ள இலியானான்னு நெனைப்பு.. நீங்கமட்டும் என்ன கொறைச்சலாவாடி இருக்கீக.. குந்தானிகளா..!!”

“ஹாஹா.. கோச்சுக்காதடி…!! இந்தா..!!” சொல்லிக்கொண்டே வாசுகி ஒரு சிகரெட்டை எடுத்து தென்றலிடம் நீட்ட, அவள் உடனே முகத்தை சுளித்தாள்.

“ஐயே.. எனக்கு வேணாம்..!!”

“வேணாமா..?? அப்புறம் எதுக்குடி எங்ககூட வந்த..??”

“நான் எங்கடி வந்தேன்..?? நீங்கதான் ஒண்ணுமே சொல்லாம இழுத்துட்டு வந்திங்க..!!”

“அ..அது.. எங்களுக்கு ஆசை இருக்குற மாதிரி, உனக்கும் ஆசை இருக்கும்னு நெனச்சோம்..!!”

“ஆசைப்படுறதுக்கு அப்படி என்ன இருக்கு இந்த கருமத்துல..??”

“என்னடி இப்படி சொல்லிட்ட..?? பயலுக எப்பப்பாத்தாலும் இதைத்தான வாய்லவச்சு பக்குபக்குன்னு இழுத்து, குப்புகுப்புன்னு பொகை விட்றாய்ங்க..?? எத்தனை நாள் ஆசை தெரியுமா எனக்கு..?? அப்படி என்னதான் இதுல இருக்குன்னு இன்னைக்கு பாத்துடனும்..!! நீ குடிக்காட்டா போ.. நாங்க குடிக்க போறோம்..!!” ஆசையாக சொன்ன வாசுகி, அந்த சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு, மேகலாவிடம் திரும்பி,

“ஏய்.. பத்தவைடி..!!” என்றாள்.

மேகலா தனது வாயில் ஒரு சிகரெட்டை பொருத்திக் கொண்டாள்.. தீக்குச்சி உரசி வாசுகிக்கு பற்றவைத்துவிட்டு, தனது சிகரெட்டுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டாள்..!! தென்றல் ஒரு கையால் மூக்கை இறுகப் பொத்திக்கொள்ள.. வாசுகியும், மேகலாவும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார்கள்.. ஆரம்பித்ததுமே, ஆர்வக்கோளாறில் அதிக அளவு புகையை சர்ரென உள்ளிழுத்து..

“லொக்.. லொக்.. லொக்..!!” என கண்களில் நீர் வருமளவிற்கு இருமினார்கள்.

“எ..என்னடி இது.. நல்லாவே இல்ல..!!” முகத்தை அஷ்டகோணலாக்கியவாறு சொன்னாள் மேகலா.

“ஆரம்பத்துல அப்படித்தாண்டி இருக்கும்.. குடிக்க குடிக்க நல்லாருக்கும்..!!” ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அவளை என்கரேஜ் செய்தாள் வாசுகி.

“ஏய்.. சீக்கிரம் குடிச்சு முடிங்கடி.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. மழை வேற வர்ற மாதிரி இருக்குது..!!”

இயல்பாக சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த தென்றல்.. எதேச்சையாக பார்வையை வேறுபக்கம் சுழற்றியபோதுதான்.. அந்த உருவம் அவளது கண்களில் பட்டது..!! அங்கிருந்து சற்றே தூரமாக.. அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அசைவேதுமில்லாமல் தனியே நின்றிருந்த.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! இவர்கள் மூவரையுமே வெறித்துப் பார்ப்பது போன்றொரு தோற்றம்..!!

அந்த உருவத்தை பார்த்ததும் தென்றலுக்கு அப்படியே முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.. பயரத்தம் பாய்ந்ததில் அவளது இருதயம் தறிகெட்டு துடிக்க..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!” என்று பெரிதாக அலறினாள். அலறியவேகத்தில் தடுமாறி விழப்போனவளை வாசுகி தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.

“ஏய்ய்ய்.. என்னடி ஆச்சு..??”

“கு..குறிஞ்சி.. குறிஞ்சிடி..!!” தென்றல் திணறலாக சொன்னாள். அவளது முகத்தில் கொப்பளித்த அந்த அதீத மிரட்சி, மற்ற இரு பெண்களுக்குமே உடனடியாய் ஒரு பதற்றத்தை கிளப்பியிருந்தது.

“எ..எங்க..??”

“அ..அதோ.. அங்..”

சொல்லவந்ததை முடிக்காமலே நிறுத்தினாள் தென்றல்.. அவள் கைநீட்டிய திசையில் இப்போது அந்த உருவத்தை காணவில்லை.. காட்டுமரங்கள்தான் காற்றுக்கு மெலிதாக தலையசைத்துக் கொண்டிருந்தன..!! பயந்துபோய் திரும்பிப்பார்த்த தோழிகள் இருவரும் குழம்பிப்போனார்கள்..!!

“எ..எங்கடி.. யாரையும் காணோம்..??”

“அ..அங்க.. அங்கதான்டி நின்னுட்டு இருந்தா.. அதோ.. அந்த மரத்துக்கு பக்கத்துல..!!”

“வெ..வெளையாடாத தென்றல்..!!”

“அடச்சீ.. வெளையாடலடி.. நெஜமாத்தான் சொல்றேன்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! உடம்பு பூரா செவப்பு அங்கிய போத்திக்கிட்டு.. ஒத்தையா அங்க நின்னுட்டு இருந்தா.. நம்மளயே உத்த்த்து பாத்துக்கிட்டு இருந்தா.. அப்டியே கொலை நடுங்கிப்போச்சு எனக்கு..!!” படபடவென சொன்னாள் தென்றல்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ‘டமார்ர்ர்’ என்று விண்ணில் ஒரு இடிமுழக்கம்.. ஊசிச்சிதறல்களாய் சிலுசிலுவென மழைத்தூறல்..!! மூன்று பெண்களின் முகத்திலுமே இப்போது ஒரு கிலி பரவுவதை காணமுடிந்தது.. மூன்று பேருடைய நெஞ்சுமே பக்பக்கென அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.. தென்றலிடம் மட்டும் சற்று அதிகப்படியாகவே அந்த படபடப்பு..!!

சிகரட்டை பிடித்திருந்த விரல்கள் நடுநடுங்க, மேகலா இப்போது சொன்னாள்..!!

“கெ..கெளம்பிறலாம்டி..!!”

வாசுகியும், மேகலாவும் கையிலிருந்த சிகரெட்டை படக்கென விசிறியெறிந்தனர்.. மூவரும் மலைச்சரிவில் விருட்டென ஏறி, நடக்கிற பாதையை அடைந்தனர்.. அகழி இருக்கிற திசையை நோக்கி அவசர அவசரமாக நடந்தனர்..!! சில்லென்று சிதறிய மழைத்தூறலை மீறி, நெற்றியில் வியர்வை அரும்பியது அவர்களுக்கு.. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு..!! அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி.. எல்லா திசைகளையும் ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டே விரைந்தனர்..!!

“ப..பயமா இருக்குடி வாசுகி..!!” உடைந்துபோன குரலில் சொன்னாள் மேகலா.

“அடச்சீ.. ஒன்னும் இல்லடி..!!” அவளுக்கு தைரியமூட்டினாள் வாசுகி.

திடீரென்று.. அவர்களுக்கு வெகுஅருகில்.. ‘ஸரஸரஸர’வென காய்ந்த சருகுகள் மிதிபடுகிற சப்தம் கேட்டது..!! அந்த சப்தத்தை கேட்டதும்.. அப்படியே ‘ஹக்க்க்க்’ என்று நெஞ்சடைத்துப்போய், மூன்று பெண்களும் அசையாமல் உறைந்து நின்றனர்..!! பயத்தில் விரிந்த விழிகளும், மிரட்சி அப்பிய முகமும், ஏறியிறங்குகிற மார்புப்பந்துகளுமாக.. சப்தம் வந்த திசையை மெல்ல திரும்பிப் பார்த்தனர்..!!

“ஸர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்க்க்…!!!” – யாரோ ஒரு மரத்தின் மறைவில் இருந்து இன்னொரு மரத்தின் மறைவுக்கு ஓடினார்கள்.

“ஆஆஆஆஆ..!!” வாயில் கைவைத்து அலறினாள் தென்றல்.

“யா..யாரு.. யாரது..???” சற்று துணிச்சலாக கத்தினாள் வாசுகி.

அதேநொடியில்.. வானத்தில் ‘திடும் திடும்’ என அடுத்தடுத்து இடியோசை.. ‘பளிச் பளிச்’ என மின்னல் வெளிச்சம்..!! மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, ‘ச்ச்சோ’வென்று மழைகொட்ட ஆரம்பித்தது.. நின்றிருந்த பெண்களை சடசடவென நனைத்தன மழைத்துளிகள்..!!

“எ..எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. போ..போயிறலாம்டி..!! இ..இங்க நிக்கிற ஒவ்வொரு..”

வாய்க்குழறலாக பேசிய மேகலா, சொல்லவந்ததை முழுதாக முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள்.. அவளது பார்வை இப்போது ஓரிடத்தில் நிலைகுத்திப் போயிருந்தது.. ஓவென்று திறந்திருந்தன அவளது உதடுகள்.. அவளது முகத்திலும், கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி..!!

“எ..என்னடி..??”

வாசுகியின் கேள்விக்கு மேகலாவிடமிருந்து பதில் இல்லை.. வாயும் நெஞ்சும் அடைத்துப்போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்..!!

இப்போது தென்றலும், வாசுகியும்.. மேகலாவின் பார்வை சென்ற திசைபக்கமாக.. மெல்ல மெல்ல தங்களது முகத்தை திருப்பினர்..!! அங்கே.. அவர்களுக்கு மிக மிக நெருக்கமாக.. ஒழுங்கின்றி வளர்ந்திருந்த ஒருபுதருக்கு பின்புறமாக.. கொட்டுகிற மழையில் சொட்டச்சொட்ட நனைந்தவாறு.. அந்த உருவம்..!! உடல்முழுதையும் போர்த்திய சிவப்பு அங்கி.. முகம்முழுதும் வழிகிற கருங்கூந்தல்..!!

“க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..!!” என்று அந்த உருவத்திடம் இருந்து வருகிற சப்தம்.

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!!!!!!!!!!!!!!!”

அவ்வளவுதான்..!! அலறியடித்துக் கொண்டு ஓடினர் இளம்பெண்கள் மூவரும்..!! மாலைநேரத்து மங்கலான வெளிச்சம்.. மழைபெய்து வழுக்குகிற மலைப்பாதை.. ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டுமரங்கள்.. உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர்..!! கண்மண் தெரியாமல்.. கால்கள் சென்ற திசையில்.. உடம்பெல்லாம் வெடவெடக்க.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்..!! Pundai Nakkum Tamil Hot Stories

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000