கண்ணாமூச்சி ரே ரே – 47

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Sex Stories In Tamil – “இதுவரை எல்லா பொண்ணுகளையும் நானா போய்த்தான் தூக்கிட்டு வந்திருக்கேன்.. செவப்பு ட்ரஸ், விக்லாம் போட்டுக்கிட்டு.. அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு..!! இந்த அகல்விழி ஒருத்திதான் தானா வந்து தனியா எங்கிட்ட மாட்டுனவ..!! பாவம்.. கல்யாணம்னு சொல்லிட்டு சந்தோஷமா வந்தா.. இங்க கருமாதி நடக்கப் போறது தெரியாம..!! ஹாஹாஹாஹா..!!”

“……………………………………”

“ஆனா சும்மா சொல்லக்கூடாது.. எனக்கு நாலஞ்சு நாள் செம கம்பனி குடுத்தா..!! வாழணும்னு அவ்வளவு ஆசை.. உசுரை விட்டுடாம அஞ்சுநாள் இழுத்துட்டு கெடந்தா..!! ஹாஹா..!!”

மணிமாறனின் வார்த்தைகளில் புதைந்திருந்த குரூரம், ஆதிராவை வெடவெடக்க வைத்தது.. அவளது இதயத்துடிப்பின் வேகம், இப்போது எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!!

“பாக்கலாம்.. நீ எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறன்னு..!!” இளிப்புடன் சொல்லிக்கொண்டே, ஆதிராவின் புஜத்தை பற்றி தூக்கினார்.

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

மிரண்டுபோய் சப்தம் எழுப்பிக்கொண்டே, விழுக்கென்று துள்ளி, அவரது பிடியில் இருந்து நழுவினாள் ஆதிரா.. மணிமாறனின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. உதட்டில் ஒரு மிருதுவான புன்னகையை கசியவிட்டவாறே, புறங்கையை வீசி, ஆதிராவின் கன்னத்தில் ‘ரப்ப்ப்..’பென்று ஒரு அறைவிட்டார்..!! அவ்வளவுதான்.. ஆதிரா சுருண்டுபோய் தரையில் வீழ்ந்தாள்..!!

வீழ்ந்தவளை அள்ளி நாற்காலியில் விசிறினார்.. அவளது எதிர்ப்பு இப்போது வெகுவாக குறைந்து போயிருந்தது.. உடலின் சக்தி உறிஞ்சப்பட்டவளாய் சோர்ந்துபோய் காட்சியளித்தாள்.. மயக்கம் வருவதுபோல அவளுக்குள் ஒரு உணர்வு..!! நிலைகொள்ளாமல் தள்ளாடிய தலையை திருப்பி.. அருகில் நின்ற மணிமாறன் என்ன செய்கிறார் என்று பார்த்தாள்..!!

அந்த மரமேஜையின் மீது இரண்டு ட்ரேக்கள் இருந்தன.. அந்த இரண்டு ட்ரேக்கள் நிறையவும் கூர்தீட்டப்பட்ட சில கருவிகள்.. ஆணிகள், ஊசிகள், உளி, குறடு, கத்தி, சுத்தியல், அரம், திருப்புளி..!! எதைத் தேர்வு செய்யலாம் என்பது போல எல்லாவற்றையும் தடவிப்பார்த்த மணிமாறன்.. பிறகு அந்த உளியை கையில் எடுத்துக்கொண்டு, ஆதிராவின் பக்கமாக திரும்பினார்..!! அவளுக்கோ முதுகுத்தண்டில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!” பதறியடித்து துள்ளினாள்.

மணிமாறன் அவளுடைய கழுத்தை கொத்தாகப் பற்றினார்.. நாற்காலியோடு சேர்த்து அவளை அழுத்தி பிடித்தார்.. நகரமுயன்ற அவளது கால்களை, தனது காலால் மிதித்து நசுக்கினார்..!! ஆதிரா குலைநடுங்கிப் போனாள்.. அவளது இமைகள் மிரண்டுபோய் விரிந்துகொண்டன.. அவளது மார்புகள் ரெண்டும் ‘சர்ர் சர்ர்ர்’ரென்று விம்மி பதறின..!!

“என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி.. எங்க ஓடிறலாம்னு நெனைக்கிற..?? ம்ம்..??”

மணிமாறன் சொல்லிக்கொண்டே அந்த உளியை அவளது கண்ணுக்கருகே கொண்டுசெல்ல.. ஆதிரா படக்கென இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.. ‘ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்..’ என்று முனகினாள்.. மூச்சிரைத்தாள்.. துடித்தாள்..!!

மணிமாறன் இரண்டு விரல்களால் ஆதிராவின் இமைகளை விரித்து பிடித்தார்.. வேறு வழியில்லாமல் திறந்துகொண்ட அவளது விழிக்கருகே உளியை நீட்டினார்.. நெருக்கமாக கொண்டு சென்றார்..!! பீதி நிறைந்திட்ட ஆதிராவின் கருவிழி.. கூர் தீட்டப்பட்ட பளபளப்புடன் அந்த சிறுஉளி.. இரண்டுக்கும் இடையே சில மில்லி மீட்டர்களே இடைவெளி..!!

“உனக்கும் தாமிராவுக்கும் ஒரே மாதிரியான கண்ணு.. நல்லா பெருசா.. அழகா.. கோலிகுண்டு மாதிரி..!!”

கருவிழிக்கு வெகுஅருகே நீட்டப்பட்டிருந்த உளியை, ஆதிரா மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளது நாசிக்கருகே சட்டென அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. அத்தனை நேரம் அந்த அறையை நிறைத்திருந்த துர்நாற்றம் நீங்கி, சரசரவென ஒரு இனிய நறுமணம் அங்கே பரவுவதை, உடனடியாக அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. அது.. அந்த வாசனை.. மனதை மயக்குகிற மகிழம்பூவின் வாசனை..!!

மணிமாறனோ அந்த வாசனை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்..!!

“ஆங்.. வந்ததுல இருந்தே உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன்..!! உன் தங்கச்சி தாமிரா இருக்காள்ல.. அவ..” அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவரது பேச்சை தடைசெய்கிற வகையில்..

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!” அறைக்கு வெளியே இருந்து அந்த சப்தம்.. ஏதோ காட்டுவிலங்கின் உறுமல் மாதிரி..!!

மணிமாறன் சற்றே நிதானித்தார்.. ஆதிராவை பிடித்திருந்த பிடியை கொஞ்சம் தளர்த்தியவர், காதுகளை கூர்மையாக்கி அந்த சப்தத்தை கவனித்தார்..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

அந்த சப்தம் இப்போது இன்னுமே தெளிவாக கேட்டது.. ஆனால் அது என்ன சப்தம் என்று மணிமாறனுக்கு பிடிபடவில்லை..!! தொடர்ந்து அந்த சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. ஓரிரு வினாடிகள் யோசித்த மணிமாறன், பிறகு கையிலிருந்த உளியை பட்டென ட்ரேயில் போட்டார்..!! கையுறைகளையும், கழுத்தில் கட்டியிருந்த துணியையும் அவிழ்த்து மேஜையில் விசிறினார்.. மெல்ல நடந்து சென்று படிக்கட்டு ஏறினார்.. கதவை திறந்து வெளியில் பார்வையை வீசினார்..!! அவ்வாறு பார்வையை வீசிய அடுத்தநொடியே.. வெளியே அவர் கண்ட காட்சியில் அப்படியே பக்கென அதிர்ந்து போனார்..!!

அந்த கதவிலிருந்து நீண்டிருந்த நீளமான காரிடாரில்.. அங்கிருந்து சற்றே தூரமாக.. காரிடாருக்கு குறுக்குவாட்டில் படுத்திருந்தது அந்த காட்டுப்புலி..!! அந்த புலிக்கருகே.. காரிடாரின் மையமாக.. தலையை குனிந்தவாறு நின்றிருந்தது, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!!

அசைவெதுவும் இல்லாமல் அந்த உருவம் அப்படியே உறைந்துபோய் நின்றிருக்க.. அதன் காலடியில் படுத்திருந்த புலிதான் வாயை அகலமாக திறந்து உறுமிக் கொண்டிருந்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!”

கண்ணால் காண்பதை மணிமாறனால் நம்பவே முடியவில்லை.. அதிர்ச்சியில் திக்கித்துப்போய் அசையாமல் நின்றிருந்தார்..!! அந்த புலி இப்போது எழுந்தது.. தலையை சுழற்றி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒருமுறை கர்ஜித்தது.. வரிவரியாய் இருந்த உடம்பை ஒருமுறை குலுக்கிவிட்டுக்கொண்டது.. இவரை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது..!!

மணிமாறன் இப்போது சற்றே சுதாரித்துக் கொண்டார்.. ஏதோ விபரீதம் என்று உணர்ந்துகொண்ட அவரது மூளை பட்டென சுறுசுறுப்பானது.. அறைக்கதவை சாத்திவிட சொல்லி அவருக்கு ஆணையிட்டது..!! அதேநேரத்தில்.. நடந்து வந்துகொண்டிருந்த வரிப்புலி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அறையை நோக்கி ஓடிவர ஆரம்பித்தது..!! சட்டென தரையில் இருந்து எழும்பி, சரக்கென ஒரே பாய்ச்சலாய் பாயவும்.. மணிமாறன் கதவுகளை படக்கென சாத்தவும் சரியாக இருந்தது..!! கதவுகள் மூடிக்கொள்வதற்கு முன்பாக.. அந்த புலியின் ஒற்றைக்கால் மட்டும் உள்ளே நீண்டு.. அதன் கூரிய நகங்கள் மணிமாறனின் முகத்தை பிறாண்டியன..!!

“ஆஆஆஆஆஆ…!!”

கதவை மூடிய மணிமாறன், தடுமாறிப்போய் கீழே சரிந்தார்.. படிக்கட்டில் கடகடவென உருண்டு தளத்தில் வந்து விழுந்தார்..!! ஆதிராவுக்கு எதுவும் புரியவில்லை.. உள்ளே வந்து விழுந்த மணிமாறனை குழப்பமும், திகைப்புமாக பார்த்தாள்..!!

“த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்..!!!”

அந்த புலி சற்றும் சளைக்காமல்.. அறைக்கதவின் மீது திரும்ப திரும்ப பலமாக மோதிக்கொண்டே இருந்தது.. முட்டி முட்டியே கதவை திறந்துவிட முயன்றது..!! வலுவற்ற அந்த கதவும் எந்த நேரமும் திறந்துகொள்வது போல.. தளர்ந்துகொண்டே சென்றது..!!

அத்தனை நேரம் மிக நிதானமாக இயங்கிக்கொண்டிருந்த மணிமாறன் இப்போது படக்கென சுறுசுறுப்பானார்.. அவசரம் தொற்றிக் கொண்டவராய் எழுந்து ஓடிவந்தார்.. மரமேஜையின் ட்ராவை இழுத்தார்.. உள்ளிருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்தார்.. பதற்றத்தில் நடுங்குகிற விரல்களோடு தோட்டாக்களை நிரப்பினார்..!! ஒருசில தோட்டாக்கள் அவரது கையிலிருந்து நழுவி.. தரையில் விழுந்து ‘டங்.. டணார்ர்ர்..!!’ என்று சப்தம் எழுப்பின..!! ஆதிரா எல்லாவற்றையும் அதிர்ச்சியாக, மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

“ப்பட்டாடார்ர்ர்ர்…!!!!!”

கதவு திறந்துகொண்டது.. கைத்துப்பாக்கியுடன் மணிமாறன் திரும்பினார்.. வாசலில் தோன்றிய புலி, அங்கிருந்தே ‘சர்ர்ர்ர்’ரென இவர் மீது பாய்ந்தது..!! புலியோடு சேர்ந்து தரையில் சரிந்தார் மணிமாறன்..!!

“ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!”

புலியை பார்த்த அதிர்ச்சியில், ஆதிரா மிரண்டுபோய் சப்தம் எழுப்பும்போதே.. பதட்டத்துடன் துப்பாக்கியின் விசையை இழுத்தார் மணிமாறன்..!!

“ட்ட்டுமீல்..!!!”

பெரும் சப்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.. வெளிப்பட்ட தோட்டா புலியை தாக்காமல், சுவரை பெயர்த்தது..!!

“க்க்க்கர்ர்ர்ர்ர்..”

கோபமாக உறுமிய புலி தனது வலுவான காலை தூக்கி மணிமாறனை ஓங்கி அறைந்தது.. அறைந்த வேகத்தில் ஐந்தடி தூரத்தில் போய் விழுந்தார் மணிமாறன்.. அவரது கையிலிருந்த துப்பாக்கி எங்கோ பறந்தது..!! வெலவெலத்துப்போன மணிமாறன் சரக்கென எழுந்தார்.. படிக்கட்டில் அவசரமாய் ஏறி தடதடவென வெளியே ஓடினார்..!!

நடந்ததை பார்த்த ஆதிரா திக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள்.. கத்தக்கூட தோன்றாமல் வாயடைத்துப்போய் உறைந்திருந்தாள்..!! அந்த புலி இப்போது மெல்ல ஆதிராவின் பக்கம் திரும்பியது.. கூர்மையான பற்களை வெளிக்காட்டி “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று ஒரு கர்ஜனை செய்தது..!!

பிறகு.. அவளை கண்டுகொள்ளாமல் திரும்பி, மெதுவாக படியேறியது.. வாசலை அடைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து ஓடியது.. சற்று தொலைவில் ஓடுகிற மணிமாறனை நாலுகால் பாய்ச்சலில் விரட்ட ஆரம்பித்தது..!! நீளமான வராண்டா.. முகத்தில் பீதியுடன் ஓடுகிற மணிமாறன்.. அவரை வெறியுடன் விரட்டுகிற காட்டுப்புலி.. இருவரையும் ஓடவிட்டு அவர்களுக்கு பின்னால், காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கியுடன் நிதானமாக நடந்துசெல்கிற அந்த உருவம்..!!

அறைக்குள் இருந்த ஆதிராவுக்கு ஐந்தாறு வினாடிகள் கழித்தே மூச்சு வந்தது.. கடைசி ஓரிரு நிமிடங்கள் நடந்த சம்பவங்களை கிரஹித்துக் கொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.. காட்டுப்புலி ஒன்று வீட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்துவதை, நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது..!!

அவளுடைய மூளை இப்போது சற்றே சுறுசுறுப்பாகவும்.. அடுத்து என்ன செய்யலாம் என்று அவசரமாக யோசித்தாள்.. அந்த கயவனிடம் இருந்து தப்பிக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினாள்..!! அப்போதுதான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அறைக்குள்ளேயே வந்து புலி செய்த அட்டகாசத்தில், அலமாரி மீது ஏற்றப்பட்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி, இப்போது தரையில் வீழ்ந்து சுடர்விட்டுக் கொண்டிருந்தது..!!

உடம்பை முறுக்கி ஒரு துள்ளு துள்ளி, நாற்காலியை விட்டு தரையில் விழுந்தாள் ஆதிரா.. கை கால்களை உதறி உதறி, அந்த மெழுகுவர்த்தியின் அருகே நகர்ந்தாள்..!! தனது பின்புற கைக்கட்டை எரிகிற தீச்சுடரில் காட்டினாள்.. செல்லோடேப் இளக ஆரம்பித்தது.. ஆதிராவின் கையும் நெருப்பில் பொசுங்கியது.. வாய்விட்டு அலறவேண்டும் போல இருந்தது.. முடியவில்லை.. வேதனையை பொறுத்துக்கொண்டு கையை நெருப்பில் வாட்டினாள்..!!

கைகளுக்கு சுதந்திரம் கிடைத்ததுமே, வாயில் ஒட்டியிருந்த செல்லோடேப்பை அவசரமாய் பிய்த்து எடுத்தாள்.. அத்தனை நேரம் அடக்கி வைத்த வலியையும், கிலியையும் வெளிப்படுத்துகிற மாதிரி..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!” என்று அண்ணாந்து பார்த்து வாய்விட்டு அலறினாள்.

ஒருசில விநாடிகள்தான்.. பிறகு மீண்டும் ஒரு பரபரப்பு வந்து அவளை தொற்றிக்கொண்டது..!! கால்க்கட்டை கைகளாலேயே சரசரவென பிரித்தாள்.. படிக்கட்டை அடைந்து தபதபவென மேலேறினாள்.. காரிடாரில் வெளிப்பட்டு தடதடவென ஓடினாள்..!! வீட்டைவிட்டு வெளியேறுகிற வழி எதுவென்று தெரியவில்லை.. புடவையை ஒருகையால் உயர்த்தி பிடித்துக்கொண்டு, உத்தேசமாக அந்தவழியில் ஓடினாள்..!!

காரிடாரை விட்டு வெளியேவந்து இடப்புறமாக திரும்ப..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

எங்கிருந்தோ பறந்து வந்து, இவள் காலடியில் விழுந்தார் மணிமாறன்.. அவருடைய முகம், உடம்பெல்லாம் ரத்த விளாறுகள்.. அவரை தொடர்ந்து பாய்ந்து, அவர் மீதே வந்து விழுந்தது அந்த புலி..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!” – மிரண்டுபோய் புறங்கையால் வாய்பொத்தி அலறினாள் ஆதிரா.

புலியை உதறித்தள்ளி, கடகடவென தரையில் உருண்டார் மணிமாறன்.. “க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று புலி ஆவேசமாக சிலிர்க்க, அவர் தடுமாற்றமாக எழுந்தார்.. ஒற்றைக்காலை இழுத்து இழுத்து வேறுதிசையில் ஓடினார்.. புலி இப்போது நிதானமாக அவரை பின்தொடர்ந்தது..!! எத்தனையோ உயிர்களை, புன்னகை தவழ்கிற முகத்துடன், கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவர்.. இப்போது தனது உயிரை காப்பாற்றிக்கொள்கிற உத்வேகத்தில், கிலிபிடித்த முகத்துடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்..!!

ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!! வீட்டின் பிரதான கதவு சற்று தொலைவில் தெரிந்தது.. அந்தக்கதவை நோக்கி வேகமாக ஓடினாள்..!! அவள் அவ்வாறு ஓடும்போதே.. அவ்வப்போது ‘சர்ர்ர் சர்ர்ர்’என இடையில் புகுந்து ஓடினார் மணிமாறன்.. அவர்பின்னால் உறுமிக்கொண்டே பாய்ந்தது வரிப்புலி..!! ஆதிரா ‘ஆஆ.. ஆஆ..’ என்று அவ்வப்போது பதறியடித்து கத்திக்கொண்டே.. புலியின் பாய்ச்சலுக்கு விலகி, ஏதாவது சோபா அலமாரி என்று பதுங்கி பதுங்கியேதான் அந்தக்கதவை சென்றடைய முடிந்தது..!!

பிரதான கதவு தாழிடப்பட்டிருந்தது.. ஆதிராவால் திறக்க முடியவில்லை..!! கைகள் ரெண்டையும் அகலவிரித்து, ‘படார்ர்ர் படார்ர்ர்’ என கதவை ஓங்கி தட்டினாள்..!!

“ஹெல்ப்ப்ப்.. ஹெல்ப்ப்ப்..!!!! யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..!!!” என்று அழுகையோடு அலறினாள்.

வீடு இப்போது ரணகளம் ஆகியிருந்தது.. அழகாக அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக இறைந்து கிடந்தன.. உயிருக்கு போராடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார் மணிமாறன்.. அவரை விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருந்தது அந்த காட்டுவேங்கை..!! கதவை தட்டி தட்டி சோர்ந்துபோன ஆதிரா.. வேறென்ன செய்வதென்று எதுவும் புரியாமல்.. அந்தக்கதவில் சாய்ந்தவாறு அப்படியே தரையில் சரிந்தாள்..!! தனது நிலையை எண்ணி.. வாய்விட்டு ‘ஓ’வென்று கத்தினாள்..!!

அவள் அவ்வாறு கத்திக்கொண்டிருக்கும்போதே..

“ஆஆஆஆஆஆ..!!”

என்று அலறியபடியே ஓடிவந்து கதவில் மோதி உருண்டார் மணிமாறன்.. ஆதிராவுக்கு மிக அருகேதான் விழுந்து கிடந்தார்..!! பத்தடி தூரத்தில்.. சோபாவில் விருட்டென ஏறிய புலி.. அப்படியே நாலுகால் பாய்ச்சலாக இவர்களை நோக்கி பாய்ந்தது..!! பதறிப்போன ஆதிரா இருகைகளாலும் முகத்தை பொத்திக்கொள்ள.. அந்த புலி சரியாக மணிமாறனின் கழுத்தை வந்து கவ்வியது.. அவரை அப்படியே அலாக்காக தூக்கி அந்தரத்தில் விசிறியெறிந்தது..!!

“ச்ச்சலீர்ர்..!!!!!!”

கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே போய் விழுந்தார் மணிமாறன்.. ஒருநொடி கூட தாமதிக்காமல் அவர் பின்னாலேயே பாய்ந்தது காட்டுப்புலி..!!

ஆதிராவின் படபடப்பு குறைய சற்று நேரமானது..!! மார்புகள் சர்சர்ரென விம்மி பதற.. கொஞ்சம் கொஞ்சமாய் கைகளை விலக்கி கண்கள் திறந்து பார்த்தாள்..!!

“ஆஆஆஆ.. ஆஆஆஆ..!!”

வீட்டுக்கு வெளியே மணிமாறனின் அலறல்.. சன்னமாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது..!! ஆதிரா மெல்ல எழுந்தாள்.. பொறுமையாக அடியெடுத்து வைத்தாள்.. உடைந்துபோன ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள்..!!

இரவு நேரத்து மங்கலான வெளிச்சம்.. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த கோரைப்புற்கள்.. அந்தப்புற்களில் அங்குமிங்கும் சோர்வாக உருண்டோடிய மணிமாறனை.. பாய்ந்து பாய்ந்து குதறிக்கொண்டிருந்தது அந்த புலி..!! “க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்கர்ர்ர்ர்ர்..” என்று உறுமியது.. அவர்மேலே விழுந்து கால்களால் பிறாண்டியது.. வாயால் இறுகக்கவ்வி தூக்கி விசிறியது.. சற்று தள்ளிப்போய் விழுபவர் மீது, சர்ரென மீண்டும் பாய்ந்தது.. தலையை ஆட்டி ஆட்டி கடித்து குதறியது..!! Pundai Nakkum Sex Stories In Tamil

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000