கண்ணாமூச்சி ரே ரே – 44

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Tamil New Sex Stories – அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.. ஈரமான கோரைப்புற்களில் வெற்றுக் கால்களை பதித்து வேகமாக ஓடினர்..!! சரியான திசையில்தான் ஓடுகிறோமா என்பதைக்கூட அவர்கள் அறியவில்லை.. கண்ணில்பட்ட திசையில், எதிர்ப்பட்ட மரங்களுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள்..!! மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய உடையுடனும்.. மார்புக் கூட்டுக்குள் பதறித் துடிக்கிற இருதயத்துடனும்..!!

“ஆஆஆஆஆ..!!!!”

ஓடியவர்கள் திடீரென அலறியவாறு அப்படியே ப்ரேக் அடித்து நின்றார்கள்..!! அவர்கள் ஓடியதிசையில் எதிர்ப்புறம்.. ‘சர்ர்ர்ரரக்க்க்’ என்று குறுக்காக வந்துநின்றது அந்த உருவம்..!! பலமாக வீசிய காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கி.. முகத்தை மறைத்திட்ட முடிக்கற்றைகளில் சொட்டுகிற மழைநீர்..!!

மூன்று பெண்களும் ஒருநொடி கூட தாமதிக்கவில்லை.. பக்கவாட்டில் திரும்பி விர்ரென்று வேகமெடுத்து ஓடினர்.. அந்த உருவம் தங்களை பின்தொடர்கிறதா என்று திரும்பிப் பார்க்கக்கூட மூவருக்கும் அச்சம்..!! உயிர்பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்..!!

இந்தப்பாதை சற்றே சீரற்ற பாதை.. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன.. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின.. இறைந்து கிடந்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன..!! உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல்.. உயிரை காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன்.. அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப்போய் ஓடிக்கொண்டிருந்தனர்..!! அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக.. அண்டிக்கொண்டனர் மூவரும்..!!

நுரையீரல் வெளியே வந்துவிடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு.. இருதயம் ‘திடுக்.. திடுக்..’ என்று அடித்துக் கொண்டதில், மார்புகள் ‘சர்ர்.. சர்ர்..’ என மேலும் கீழும் ஏறியிறங்கின.. அட்ரினலின் அதீதமாக சுரந்து, நாடிநரம்பெல்லாம் தாறுமாறாய் ஓடியது.. குளிராலும் குறிஞ்சி பயத்தாலும், உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடத்து நடுங்கியது..!! மூச்சு விடுகிற சப்தம்கூட வெளியே வரக்கூடாதென.. வாயை இரு கைகளாலும் இறுகப் பொத்திக்கொண்டு.. மூன்று பெண்களும் மரத்துக்கு பின்புறமாக பம்மியிருந்தனர்..!!

அரை நிமிடம்.. பிறகு வாசுகி மட்டும் சற்றே தைரியம் பெற்று.. தனது தலையை மெல்ல வெளியே நீட்டி.. தாங்கள் ஓடிவந்த பாதையை பார்த்தாள்.. பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு..!! அந்த உருவம் அவர்களுக்கு பக்கத்திலேதான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தது.. ‘ச்சோ’வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.. வேறொரு திசையை வெறித்தவாறு..!! விரிந்த விழிகளுடன் அந்த உருவத்தையே மிரட்சியாக பார்த்தாள் வாசுகி..!!

அந்த உருவம் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப.. வாசுகி படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..!! சுறுசுறுப்பாக யோசித்தாள்.. அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.. ‘தஸ்.. புஸ்..’என்று மூச்சிரைப்புடன், கிசுகிசுப்பான குரலில் தோழிகளிடம் சொன்னாள்..!!

“சொ..சொல்றதை கவனமா கேளுங்கடி.. மூணு பேரும் ஒன்னா இருந்து, அவகிட்ட மொத்தமா மாட்டிக்க வேணாம்.. ஆ..ஆளுக்கொரு பக்கமா ஓடலாம்.. ஒருத்தியை பலிகுடுத்து மிச்ச ரெண்டுபேர் தப்பிச்சுக்கலாம்.. எ..என்ன சொல்றிங்க..??”

“ம்ம்.. ச..சரிடி..!!”

பயத்துடனும், பதைபதைப்புடனும் ஒப்புக்கொண்டனர் மற்ற இருவரும்..!! அழுகை வந்தது அவர்களுக்கு.. வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதனர்..!! பீதி நிரம்பிய அவர்களது கண்கள்.. பொலபொலவென கண்ணீரை உகுத்தன..!!

இப்போது சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்.. அவர்கள் அண்டியிருக்கிற மரத்தைநோக்கி மெல்ல நகர்ந்தது.. மரத்துக்கு அந்தப்பக்கம் அவர்களுடைய சன்னமான பேச்சுக்குரல் இங்கேயே கேட்டது..!! கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக நகர்ந்து.. மரத்திற்கு மிகஅருகே நெருங்கிவிட்டது அந்த உருவம்.. இரண்டு மூன்று அடி இடைவெளிதான்..!!

அப்போதுதான் அது நடந்தது.. மரத்துக்கு பின்புறம் இருந்து சரக்கென வெளிப்பட்டனர் மூன்று பெண்களும்.. வெளிப்பட்ட வேகத்தில் வெவ்வேறு திசையில் சர்ரென ஓட்டமெடுத்தனர்..!! அங்கிருந்து கிளம்பிய மூன்று சாலைகளில்.. ஆளுக்கொரு சாலையென சிட்டாக பறந்தோடினர்..!!

அந்த உருவம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை..!! சற்றே திகைத்துப்போய்.. வெடுக்வெடுக்கென மூன்று திசைகளையும் மாறிமாறி திரும்பிப் பார்த்தது..!! அப்போதுதான்..

“ஆஆஆஆஆஆ..!!!” என்று தென்றலின் அலறல்.

தறிகெட்டு ஓடிய தென்றல் தரையில் விழுந்து கிடந்தாள்.. மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர், அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது.. தடுமாறிப்போய் கால்கள் ரெண்டும் பின்னிக்கொள்ள கீழே விழுந்து உருண்டிருந்தாள்..!!

“ஆஆஆஆஆஆ..!!!” கொட்டுகிற மழையில் காலை பிடித்துக்கொண்டு கத்தினாள்.

மூன்று திசைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம், இப்போது சற்றே நிதானித்தது.. தென்றல் விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தது.. அந்த திசையில் மெல்ல நகர்ந்தது..!!

அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து..!! வேறு திசையில் ஓடிய மற்ற இரு பெண்களும்.. அகழி செல்கிற சாலையில் ஆளுக்கொரு இடத்தில் இணைந்தனர்..!! பிறகு அதே சாலையில் தனித்தனியே ஓடியவர்கள்.. ஓரிடத்தில் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர்..!! பார்த்ததுமே ஓடிவந்து அணைத்துக் கொண்டனர்.. ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுதனர்..!! தாங்கள் சேதாரமில்லாமல் தப்பித்துவிட்டாலும்.. தங்களது தோழி மாட்டிக்கொண்டாளே என்கிற பதைபதைப்பில் இருவருக்கும் நெஞ்சடைத்தது..!!

“அரிசிமூட்டை பாவம்டி.. குறிஞ்சிகிட்ட மாட்டிக்கிட்டா..!!!” அழுது அரற்றினாள் மேகலா..!!

‘பாவம்னு இவளை சொல்லல.. குறிஞ்சியை சொன்னேன்..!!’ என்று அவள் சற்றுமுன் கேலியாக சொன்னது இப்போது நினைவுக்கு வர.. அவளது அழுகை இன்னுமே அதிகமாக பீறிட்டது..!!

“அழாதடி.. வா.. மொதல்ல ஊருக்குள்ள போய் சொல்லலாம்..!!” சற்றே துணிச்சலாக சொன்ன வாசுகி, அடுத்தவினாடியே உள்ளுக்குள் உடைந்துபோய் உதடுகள் தழதழத்தாள்..!!

‘அவளை அப்டியே புடிச்சு மலைலயிருந்து தள்ளி விடுடி..!! ஊருக்குள்ள கேட்டா குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டான்னு சொல்லிரலாம்..!!’

சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பேசிய வார்த்தைகள், இப்போது மீண்டும் அவளது காதுக்குள் ஒலிக்க.. ‘ஓ’வென்று அவளுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது..!! அப்படியே கால்கள் மடங்கிப்போய்.. தரையில் வீழ்ந்து.. முதுகுப்புறம் விம்ம விம்ம.. குலுங்கி குலுங்கி அழுதாள்..!! மேகலாவும் இப்போது தரையில் அமர்ந்து, தோழியை அணைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அவளது முதுகை தடவிக்கொடுத்தாள்..!!

இருட்டுக்குள் அவ்வாறு அமர்ந்திருந்த அவர்களது முகத்தில்.. திடீரென ஒரு வெளிச்ச வெள்ளம் பாய்ந்து, கண்களை கூசச்செய்தது.. ஒருவித பதற்றத்துடனே இருவரும் எழுந்துகொண்டனர்..!! அந்த சாலையில், சிறிது தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.. அந்த காருடைய முகப்புவிளக்கின் வெளிச்சம்தான் அது..!! காருக்குள் இருந்தவர்களை இவர்களால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. ஆதிராவும், சிபியும்..!! அத்தனை நேரம் கோயிலில் கழித்துவிட்டு.. அப்போதுதான் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்..!!

“அக்காஆஆஆ..!!” என்று கத்திக்கொண்டு, காரைநோக்கி ஓடினார்கள் வாசுகியும் மேகலாவும்.

“அ..அத்தான்.. வண்டியை கொஞ்சம் நிறுத்துங்க..!!”

ஆதிரா பதற்றமாக சொல்லவும், சிபி சரக்கென ப்ரேக் போட்டு காரை நிறுத்தினான்..!! ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்ட இருவரும்.. காரில் இருந்து அவசரமாக இறங்கினார்கள்..!! தங்களை நோக்கி மிரட்சியாக ஓடிவந்த பெண்களிடம்..

“எ..என்னம்மா.. என்னாச்சு..??” ஆதிரா பதட்டத்துடன் கேட்டாள்.

அழுகையும், மூச்சிரைப்புமாக நடந்ததை விளக்கினார்கள் வாசுகியும், மேகலாவும்..!! அவர்கள் சொன்னதை கேட்க கேட்க.. அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் ஆதிராவும், சிபியும்..!! நடந்ததை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது.. அதையும்மீறி அந்தப்பெண்களின் முகத்தில் கொப்பளித்த அதீத பயமும், மிரட்சியும்.. அவர்களது வார்த்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது..!!

ஆதிரா விக்கித்துப்போய் நின்றிருந்தாள்.. ‘காலையில்தானே அந்த அப்பாவிப்பெண்ணை வாயார வாழ்த்தினோம்’ என்கிற நினைவு வர.. துக்கம் தொண்டையை அடைத்து, வாயை ஒருகையால் பொத்திக் கொண்டாள்..!!

“இ..இப்போ.. எ..என்னத்தான் பண்றது..??” கணவனிடம் கவலையாக கேட்டாள். சிபி சற்று தெளிவாகத்தான் இருந்தான்.

“டென்ஷன் ஆகாத ஆதிரா.. ரிலாக்ஸ்..!! அவசரப்பட்டு நாமளா எந்த முடிவுக்கும் வரவேணாம்.. தென்றல் தப்பிச்சிருக்க கூட சான்ஸ் இருக்கு.. நான் சிங்கமலை போய் அவளை தேடிப்பாக்குறேன்.. நீ இவங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. வனக்கொடிக்கும், கதிருக்கும் இன்ஃபார்ம் பண்ணு..!!”

“ஐயோ வேணாம்த்தான்.. நீங்க போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு..!!”

“எனக்கு ஒன்னும் ஆகாதுடா.. தேவையில்லாம பயப்படாத..!!”

“ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!”

“ப்ச்.. புரியாம பேசாத ஆதிரா.. நாம லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் தென்றலுக்கு ஆபத்து..!! உடனே போய் தேடிப்பாக்குறது நல்லது..!!”

“அ..அப்போ.. என்னையும் உங்ககூட கூட்டிட்டு போங்க..!!”

“நீ எதுக்குடா அங்க..?? நான் மட்டும் போயிட்டு வரேன்..!!”

“இல்லத்தான்.. உங்களை தனியா அனுப்ப எனக்கு இஷ்டம் இல்ல.. நானும் வர்றேன்..!!”

மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரமில்லாமல்.. அவளையும் உடன்அழைத்துச் செல்ல சம்மதித்தான் சிபி..!! கிளம்புவதற்கு முன்.. வனக்கொடிக்கும், கதிருக்கும் உடனடியாய் விஷயத்தை தெரிவிக்குமாறு வாசுகியிடம் சொன்னான்.. தென்றலை இறுதியாக அவர்கள் பார்த்த இடத்தை பற்றி விசாரித்துக் கொண்டான்.. எந்த இடத்திற்கு சென்று தேடுவது என்று உத்தேசமாக முடிவு செய்துவிட்டே காரை கிளப்பினான்..!!

மலைப்பாதையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு.. தார்ச்சாலை முடிவடைந்த இடத்தில் சிபி காரை நிறுத்தினான்.. டாஷ்போர்ட் திறந்து டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டான்..!! இருவரும் காரில் இருந்து இறங்கி, கதவை அறைந்து சாத்தினார்கள்.. இருள் அப்பியிருந்த வனப்பகுதிக்குள் ஒருவித அவசரத்துடன் நடந்தனர்..!! மழை இப்போது ஓரளவுக்கு ஓய்ந்திருந்தது.. சில்லென்று மெலிதாக சிதறிய தூறல் மட்டுமே..!!

“தென்றல்.. தென்றல்..!!” ஆதிரா தென்றலின் பெயரை பதைபதைப்புடன் அழைத்தவாறே சென்றாள்..!!

மசமசப்பான வெளிச்சத்துடன் மரங்களின் பிம்பங்கள் மட்டுமே ஆங்காங்கே அடர்ந்து தெரிந்தன.. கையிலிருந்த டார்ச்சால் இருட்டுக்குள் வெளிச்சக்கீற்றை பாய்ச்சியவாறே நடந்தான் சிபி.. அவனுடன் நடந்த ஆதிராவின் இருதயமோ ‘திக் திக்.. திக் திக்..’ என்று பதறிக்கொண்டிருந்தது..!! சூழ்நிலையை சுற்றிலும் ஒரு அமானுஷ்ய நிசப்தம்.. காய்ந்த சருகுகள் மீது அவர்களது காலடி பதிகிற சப்தம் மட்டுமே..!!

“சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்.. சர்ர்ர்ரக்..!!!”

இளம்பெண்கள் மூவரும் அந்த உருவத்திடம் இருந்து மிரண்டு, பக்கவாட்டில் ஓடிய அந்த பாதையில்.. இப்போது சிபியும் ஆதிராவும் சென்றுகொண்டிருந்தனர்..!! அவர்கள் ஒளிந்துகொண்ட அந்த அகன்ற அடிப்புறம் கொண்ட காட்டுமரம்.. அந்த இடத்தில் சற்று நின்று டார்ச்சை சுழற்றினான் சிபி.. தரையிலிருந்து மேல் கிளம்பி, பாதையில் படர்ந்திருந்த அந்த மரவேர் கண்ணில் பட்டது.. அந்த திசையில் மெல்ல நடந்தான்.. அவனுக்கு இரண்டடி இடைவெளி விட்டு ஆதிரா பின்தொடர்ந்தாள்..!!

“தென்றல்.. தென்றல் தென்றல்..!!”

அதே திசையில் மேலும் சிறிது நேரம் நடக்க.. அந்த மலைச்சரிவை வந்தடைந்தார்கள்..!! சரேலென்று செங்குத்தான மலைச்சரிவு.. அந்த சரிவின் அடியாழத்தில் சலசலப்புடன் ஓடுகிற குழலாற்றின் சப்தம்..!! மலைச்சரிவை ஒட்டியே குறுகலாக சென்ற அந்த பாதையில்.. சற்றே கவனமாகவும், நிதானமாகவும் நடந்தார்கள் இருவரும்..!! சிபி பாதையில் வெளிச்சத்தை தெளித்துக்கொண்டே..

“பாத்து வா ஆதிரா.. மழை பெஞ்சு ஈரமா இருக்குது.. வழுக்குது..!!” என்று மனைவியிடம் சொன்னபோதுதான்..

“ச்ச்சலீர்ர்ர்..!!!!!” ஆதிராவின் காலில் ஏதோ தட்டுப்பட்டு ஓசை கிளப்பியது.

அது என்னவென்று தலையை தாழ்த்தி பார்த்தாள்.. குனிந்து கையில் எடுத்தாள்.. அது.. ஒரு ஒற்றைக்கால் கொலுசு..!! அதை பார்த்ததுமே ஆதிராவுக்கு பட்டென்று தெரிந்து போனது..!!

“தென்றலோட கொலுசு அத்தான்..!!”

“ஓ..!! அப்போ.. இந்தப்பக்கமாத்தான் அவ போயிருக்கனும்..!!”

அதே பாதையில் இப்போது சற்று விரைவாக நடந்தார்கள்.. தென்றலை தேடுவதை தீவிரப் படுத்தினார்கள்..!! இருட்டாக இருந்த மலைச்சரிவின் பரப்பில்.. சிபியின் கையிலிருந்த டார்ச்லைட்டின் வெளிச்சவட்டம் படிந்து.. ஓரிடத்தில் நில்லாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது..!!

“டார்ச்சை குடுங்கத்தான்..!!”

ஒருவித பதற்றத்துடன் ஆதிரா அவ்வாறு திடீரென கேட்கவும்.. என்னவென்று புரியாமலே அவளுடைய கையில் டார்ச்லைட்டை திணித்தான் சிபி..!!

“என்னாச்சு ஆதிரா..??”

“ஏதோ அசைஞ்ச மாதிரி இருந்தது..!!”

“எங்க..??”

கணவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து செங்குத்தாக கீழிறங்கிய பள்ளத்தில்.. சற்றே ஆழமாக, தூரமாக.. வெளிச்சத்தை தெளித்தாள் ஆதிரா..!! கொஞ்சம் உற்றுப் பார்க்கவும்தான் அது தெரிந்தது.. பாறை இடுக்கில் இருந்து வெளிப்பட்டு, காற்றில் மெலிதாக அசைந்துகொண்டிருந்த அந்தத் துணி.. இளமஞ்சள் நிறத்திலான துணி..!!!!

ஆதிராவின் முகத்தில் இப்போது பட்டென ஒரு மலர்ச்சி.. மனதில் ஒருவித நம்பிக்கையுடன் உற்சாகமாக கீழ்நோக்கி கத்தினாள்..!!

“தென்றல்.. தென்றல்..!!!”

அடுத்த வினாடியே கீழிருந்து பதில் வந்தது.

“அக்காஆஆஆ..!!!!” Sunni Amukkum Tamil New Sex Stories

– தொடரும்

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.