மதன மோக ரூப சுந்தரி – 1

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – முதன்முறையாக ஒரு த்ரில்லர் செக்ஸ் கதை முயற்சி செய்திருக்கிறேன். கொஞ்சம் திகில், கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் சென்டிமன்ட் என்று கதை நன்றாகவே வந்துள்ளது. கிளர்ச்சி ஏற்படுத்தும் கதை அல்ல. வேறொரு விதமான உணர்வில் உங்களை ஆழ்த்த முயன்றிருக்கிறேன். பொறுமையுடன், நிதானமாக வாசித்து பாருங்கள். நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள். – ஸ்க்ரூட்ரைவர்

அந்த நள்ளிரவில், பெங்களூர் டூ ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு. அவ்வப்போது வாகனங்கள் ஒளியை தெளித்தவாறு ‘க்யீயீயீங்ங்….’ என்ற பெரும் சப்தத்துடன் அதிவேகத்தில் வந்து, பின் அதே வேகத்தில் பார்வையில் இருந்து மறைந்தன. தவளைகள் என்று நினைக்கிறேன். ‘கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..’ என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தன. முதுகுத்தண்டில் ஐஸ் வைத்தமாதிரி அந்த சூழ்நிலை எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். நான் வந்த கார் மரத்தில் மோதி நொறுங்கியிருப்பது நிலவு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. எனக்கு அந்த கார் மிகவும் பிடிக்கும். பிசினஸ் ஆரம்பித்து, என்னுடைய உழைப்பில் நான் வாங்கிய முதல் கார் அது. அதே பிசினஸ் விஷயமாக ஹைதராபாத் செல்லும் வழியில் இப்படி அந்த காரின் ஆயுள்காலம் முடிந்து போனது வருத்தமான விஷயம்.

மிகவும் ஒரு கஷ்டமான கோணத்தில் கார் அந்த மரத்தின் கிளைகளோடு மோதி சிக்கியிருந்தது. நான் கொண்டுவந்த செல்போன் கூட எதோ ஒரு இடுக்குக்குள்ளே சிக்கி தொலைந்து போயிருந்தது. என்னுடைய நிலையை மற்றவர்களுக்கு சொல்ல எந்த வழியும் இல்லாமல் தனியாக நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதன் முறையாக மிகவும் ஹெல்ப்லெஸ்ஸாக உணர்ந்தேன்.

உதவி கேட்பதற்காக சாலையில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே கையை நீட்டி மறித்துக் கொண்டிருந்தேன். ஆனால் யாருக்குமே என் மீது இரக்கம் வரவில்லை. நான் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருப்பதாகவே யாரும் காட்டிக் கொள்ளவில்லை. வேகத்தை சிறிதும் குறைக்காமல் ‘சர்ர்… சர்ர்… சர்ர்…’ என்று போய்க்கொண்டே இருந்தார்கள். எனக்கு எரிச்சலாக வந்தது. மனிதர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து போயிருப்பது தெளிவாக புரிந்தது.

ஒரு அரை மணி நேரம். நான் கையை ஆட்டி.. ஆட்டி.. களைத்துப் போனேன். அனைவரும் என் முகத்தில் பளீர்.. பளீர்.. என்று வெளிச்சத்தை தெளித்துவிட்டு, பட்டென்று கடந்து சென்றார்களே ஒழிய, ஒருவர் கூட என் மேல் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தவில்லை. நொந்து போனேன். சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மைல்கல் மீது பைத்தியம் பிடித்த மாதிரி அமர்ந்திருந்தேன். கழுத்து சுளுக்கிக்கொண்ட மாதிரி கடுமையாக வலித்தது. கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டேன். அழவேண்டும் போல இருந்தது. அப்போதுதான் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை கவனித்தேன்.

வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா என்று சொல்ல வேண்டும். இல்லை.. இல்லை.. அரண்மனை என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக, பழங்கால ஸ்டைலில் கட்டியிருந்தார்கள். உள்ளே இருந்து மஞ்சள் நிறத்தில் மங்கலாக வெளிச்சம் வெளியே கசிந்து கொண்டிருந்தது. உடனே எனக்கு பட்டென்று அந்த யோசனை தோன்றியது. அங்கு சென்று உதவி கேட்டால் என்ன..? ஒருவேளை அந்த வீட்டில் டெலிபோன் இருந்தால், யாருக்காவது போன் செய்து உதவி கேட்கலாமே..?

நான் பட்டென்று மைல் கல்லில் இருந்து குதித்து இறங்கினேன். அந்த பங்களா இருந்த திசையை நோக்கி இருளில் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டிற்கு செல்லும் பாதை சரியாக இல்லை. இல்லையென்றால் நான் சரியான பாதையில் செல்லவில்லை எனலாம். வழிநெடுக புதர் மண்டிக் கிடந்தது. காட்டு முற்செடிகளும்.. கற்றாழை செடிகளும்.. எக்கச்சக்கமாய் வளர்ந்து, நிறைந்து கிடந்தன. வினோதமான கற்றாழை வாசனை, அந்த சூழ்நிலைக்கு ஒரு வித அமானுஷ்ய எபெக்டை கொடுத்தது. நான் முதுகுத்தண்டில் ஒரு வித பய சிலிர்ப்புடனே நடையை போட்டேன்.

மெல்ல மெல்ல முன்னேறினேன். முற்செடிகளில் மிதித்து விடாதவாறு, கவனமாக காலடிகளை எடுத்து வைத்து நகர்ந்தேன். சுற்றிலும் நிசப்தம். காய்ந்த சருகுகளில் நான் காலெடுத்து வைக்கும் ‘சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்..’ ஒலியையும், காட்டுத்தவளைகள் எழுப்பிய ‘கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..’ ஒலியையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்த என் முன்னால் திடீரென்று அந்த ஆள் வந்து நின்றான். எங்கிருந்துதான் வந்தான் என்றே தெரியாத மாதிரி, அந்த ஆள் படக்கென்று வந்து நிற்க, நான் அப்படியே பதறிப் போனேன்.

வயதான ஆள். ஒரு ஐம்பது, அறுபது வயது இருக்கும். தலை, மீசை, தாடி எல்லாம் தும்பைப்பூ மாதிரி நரைத்துப் போயிருந்தன. அவனுடைய முகத்தில் ஒருவித அசாத்தியமான அமைதி. வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது. துண்டோ, போர்வையோ போற்றி முக்காடு போட்டிருந்தான். பீடி வெளிச்சத்தில் அவனுடைய சலனமில்லாத, குத்திட்ட கண்கள் என் பார்வையில் பட்டபோது, எனக்கு உடலெல்லாம் ‘ஜிலீர்ர்ர்….’ என்று ஒரு சிலிர்ப்பு…!! நடுங்கினேன்.

“இந்த நேரத்துல எங்க தம்பி போறீங்க..?” அந்த ஆள் ஒரு எந்திரம் போல உணர்ச்சியே இல்லாமல் கேட்டான்.

எனக்கு உடனே பேச்சு வரவில்லை. வாய் குழறியது. தட்டுத் தடுமாறி சொன்னேன்.

“அ…அது.. அது… என் கார்… கார் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு…!! ரோட்டுல போற கார், பஸ் யாரும் நிக்க மாட்டேன்றாங்க..!! அதான் அதோ ஒரு வீடு தெரியுதில்ல..? அங்கே போய் ஏதாவது உதவி கேக்கலாம்னு போறேன்..!!”

அந்த ஆள் பொறுமையாக பின்னால் திரும்பி தூரத்தில் தெரிந்த வீட்டை பார்த்தான். அப்புறம் என் பக்கமாக திரும்பினான். அவனுடைய கண்கள் அப்படியே நிலைகுத்திப் போய் இருக்க, உதடுகளை மட்டும் கொஞ்சமாய் திறந்து சிரித்தான். என்னை மேலும் கீழும் ஒருமாதிரி ஏளனமாய் பார்த்தான். பின்பு அதே உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

“உதவிதான..? போங்க.. கெடைக்கும்…!!”

சொல்லிவிட்டு அந்த ஆள் அசையாமல் அப்படியே நிற்க, நான் நகர்ந்து ஒதுங்கிக் கொண்டேன். தயங்கி தயங்கி அந்த ஆளை கடந்து நடந்தேன். எனக்கு உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துப் போன மாதிரி ஒரு உணர்ச்சி. ஒரு பத்து பதினைந்து எட்டு எடுத்து வைத்ததும், மீண்டும் அந்த ஆளை திரும்பி பார்த்தேன். அந்த ஆள் இன்னும் அதே இடத்தில் அப்படியே அசையாமல் நின்றிருந்தான். அவனுடைய தலையை சுற்றி பீடி புகை குபுகுபுவென கிளம்பி, காற்றோடு கலந்துகொண்டிருந்தது. பார்த்த எனக்கு உடலில் ஒரு வித இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. பட்டென்று திரும்பி, அந்த பங்களாவை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடத்தில் அந்த வீட்டை அடைந்தேன். அருகில் வேறு எந்த வீட்டையும் காணோம். தனி வீடாக இருந்தது. சுற்றிலும் மின்சாரம் செத்துப் போய் இருள் மண்டிக் கிடந்தது. வீட்டுக்குள் மெழுகுவத்தி வெளிச்சம்தான் எரிந்தது. வீட்டை சுற்றி பத்தடி உயரத்திருக்கு காம்பவுண்டு சுவர். அதே உயரத்தில் பெரிய, இரும்பாலான கிரில் கேட். அந்த கிரில் கேட் எங்கும், பச்சையாய் கொடிகள் சுற்றி.. படர்ந்து.. சுருண்டு.. எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது.. நிஜமாகவே உள்ளே யாராவது இருக்கிறார்களா..?

கொஞ்சம் தயங்கிய நான் பின்பு தைரியமாக உள்ளே நுழைந்தேன். கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததும், சில வவ்வால்கள் ‘படபடபட…’ வென சிறகடித்து பறந்து சென்றன. கேட்டில் இருந்து பங்களாவின் கதவை அடையவே எனக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டது. அவ்வளவு தூரம். போகும்போது அந்த பங்களாவை விநோதமாய் பார்த்துக் கொண்டே சென்றேன். முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பழங்கால வீடு. சுற்றிலும் உயர உயரமாய் மரங்கள் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன. நான்கைந்து அடுக்குகள் கொண்ட பிரம்மாணடமான வீடு. அங்கங்கே சதுரம் சதுரமாக கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. அந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மெல்லிய மெழுகுவத்தி வெளிச்சம் வெளியே கசிந்து கொண்டிருந்தது. இங்கே டெலிபோன் எல்லாம் இருக்குமா..? சந்தேகம்தான் என்று தோன்றியது.

பங்களாவின் கதவை அடைந்தேன். கதவில் கைவைத்து ‘டொக் டொக்.. டொக்.. டொக்..’ என்று தட்டினேன். உள்ளே இருந்து ஒரு சத்தத்தையும் காணோம். ஒரு பத்து வினாடிகள் காத்திருந்து விட்டு மீண்டும், டொக்.. டொக்.. டொக்கினேன்.. இப்போது உள்ளே இருந்து சத்தம் கேட்டது. ‘ஜல்ல்ல்.. ஜல்ல்ல்.. ஜல்ல்ல்..’ என்ற ஒரு பெண்ணின் கொழுசு ஒலி.. முதலில் தூரமாய் கேட்ட சப்தம், பின்பு மெல்ல மெல்ல அருகில் வந்தது.. அந்தப் பெண் கதவை நெருங்குவது புரிந்தது. கதவின் தாழ் நீக்கப்படும் சப்தம். பின்பு ‘க்றீச்ச்…’ என்ற காதை கிழிக்கும் ஒலியுடன் கதவு திறந்து கொண்டது. நான் ஆர்வமாக உள்ளே பார்வையை வீசினேன்.

அவள் நின்றிருந்தாள். அடர்சிவப்பு நிறத்தில் பட்டுப்புடவை அணிந்திருந்தாள். கை, கால், இடுப்பு, கழுத்து, நெற்றி என்று நிறைய நகைகள் அணிந்திருந்தாள். தலையில் சரம் சரமாய் மல்லிகைப்பூ சூடியிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த திரி விளக்கு, அவளுடைய முகத்தை மிகவும் பிரகாசமாக காட்டியது. அவள் முகத்தை ஏறிட்ட நான், அவளுடைய அசத்தும் அழகில் அப்படியே சொக்கிப் போனேன்.

இந்த பாழடைந்த பங்களாவுக்குள் இப்படி ஒரு பேரழகியா..? தரையில் வந்து துடிக்கும் மீன்களை போல என்ன ஒரு கண்கள்..? உருண்டையாய், கூர்மையாய் என்ன ஒரு நாசி..? பவளத்தை பிளந்து வைத்தாற்போல என்ன ஒரு அதரங்கள்..? வலம்புரி சங்கை நினைவுபடுத்தும் என்ன ஒரு கழுத்து..? கோவில் சிலைகளை ஞாபகம் கொள்ள செய்யும் என்ன ஒரு தேகக்கட்டு..? அவளுடைய அழகு தந்த அதிர்ச்சியில் நான் பேச மறந்து நிற்க, அவளே கேட்டாள்.

“யார் நீங்க..? என்ன வேணும்..?”

“நா..நான்.. நான் பெங்களூர்ல இருந்து வர்றேன்..!! ஐ ஆம் எ பிசினஸ்மேன்.. ”

“ம்ம்..”

“நான் ஓட்டிட்டு வந்த கார், மரத்துல மோதி ஆக்சிடன்ட் ஆயிடுச்சு..!! ரோட்ல போற யாரும் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்றாங்க..!! அதான் உங்ககிட்ட ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்..!!”

நான் சொல்லி முடிக்கும் முன்பே அவளுக்கு ஒரு மாதிரி சிரிப்பு வந்தது. கையால் வாயை மூடி சிரிப்பை அடக்கிக் கொள்வது மாதிரி தோன்றியது. எனக்கு அது சற்று எரிச்சலை ஏற்படுத்தியது.

“சிரிச்சீங்களா..?” என்றேன்.

“ம்ஹூம்..!! இல்லையே…? ம்ம்… மேல சொல்லுங்க…!!”

நான் கொஞ்ச நேரம் அவளுடைய முகத்தை பார்த்துவிட்டு, அப்புறம் தொடர்ந்தேன்.

“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா..?”

“என்ன ஹெல்ப் எதிர்பார்க்குறீங்க..?” அவள் அழகாக புன்னகைத்தபடி கேட்டாள்.

“இங்க.. இங்க டெலிபோன் இருக்கா..? ஒரு போன் பண்ணனும்..”

“டெலிபோன் இருக்கு.. ஆனா வேலை செய்யாது..!!”

“ஏன்..?”

“தெரியலை.. டெலிபோன் டிப்பார்ட்மென்ட்-காரங்களத்தான் கேக்கணும்..!!”

“இந்த ஏரியாவுல சுத்தமா கரன்ட்டே இல்லாத மாதிரி இருக்கே..? எப்பவுமே இப்படித்தானா..?”

“தெரியலை.. எலக்ட்ரிசிட்டி டிப்பார்ட்மென்ட்-காரங்களத்தான் கேக்கணும்..!!” Jattiyai Kalatti Nakkum Tamil Kamakathaikal

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000