மதன மோக ரூப சுந்தரி – 4

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Sex Stories In Tamil – என்ன பதில் சொல்வது நான்..? சற்று முன்புதான் என் கார் ஆக்சிடன்ட் ஆகி, இன்று எனக்கு ஒரு கருப்பு தினம் என்று எண்ணி இருந்தேன்.. உதவி கேட்க இங்கே வந்தேன்.. உலகமகா பேரழகியை சந்தித்தேன்.. உடனடியாக அவள் காதல் சொன்னாள்.. இப்போது திடுதிப்பென்று காமம் அனுபவிக்கிறாயா என்று கேட்கிறாள்..? அவளுடைய அன்பு என்னை வியக்க வைத்தது என்றால், அவளுடைய அழகு என்னை திகைக்க வைத்தது. ஆதலால்,

“ம்..” என்றேன் ஒற்றை சொல்லாக.

அவள் என் முகத்தை பார்த்து புன்னகைத்தவாறே தன் ஆடைகளை ஒவ்வொன்றாய் களைய ஆரம்பித்தாள். நான் காதலும், காமமும் பொங்கும் கண்களோடு அவளுடைய அழகை ரசிக்க ஆரம்பித்தேன். எல்லா உடைகளையும் களைந்துவிட்டு முழு நிர்வாணமானாள். அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டாள். என்னை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டி, ‘வா’ என்று அழைத்தாள். நான் அவள் மீது கவிழ்ந்தேன்.

அந்த மெல்லிய மெழுகுவத்தி வெளிச்சத்திலும் அவளுடைய உடல் தகதகவென தங்கம் போல மின்னியது. வலம்புரி சங்கை போல வாளிப்பான கழுத்து.. கோபுர கலசங்கள் போல உருண்டு திரண்ட மார்புகள்.. உடுக்கை போல குறுகிய இடுப்பு.. வீணைக்குடங்கள் போல விரிந்துகொண்ட புட்டங்கள்.. கோடு கிழித்த மாதிரி குட்டி தொப்புள் குழி.. வெட்டுப்பட்ட வெண்ணெய்க்கட்டி மாதிரி பளபளப்பான பெண்மைப்புடைப்பு..

நான் அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்துக் கொண்டே, என்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தேன். நிர்வாணமானேன். சுந்தரி என்னை ஆசையாக தழுவிக் கொண்டாள். பவுர்ணமி நாள் பாம்புகள் போல எங்கள் நிர்வாண உடல்கள் பின்னிக்கொண்டன. எது யாருடைய கை.. எது யாருடைய கால்.. என்று உணர முடியாத அளவுக்கு ஒருவர் உடலோடு அடுத்தவர் உடல் பிணைந்துகொண்டு கிடந்தது.

எனது தின்னென்ற மார்பு, சுந்தரியின் மெத்தென்ற மார்புப்பந்துகளை அழுத்தி நசுக்கின. எனது உதடுகள் ‘படக் படக்’ என்று அவளுடய உதடுகளை கவ்வி கவ்வி சுவைத்தன. அவளுடய இரண்டு உள்ளங்கைகளும் என் முதுகெங்கும் ஊர்வலம் சென்றன. எனது ஆணுறுப்பு அவளுடைய பெண்ணுறுப்பை உரசி உரசி பார்த்தது. ரகசிய உறுப்புகள் ரெண்டும் உரசிக்கொள்ள, உடலெங்கும் தீப்பிடித்த மாதிரி எரிந்தது. காமவெறி கூடிக்கொண்டே சென்றது. அந்த வெறி தந்த போதையுடன் நான் கேட்டேன்.

“உள்ள விடவா சுந்தரி..?”

“ம்ம்.. சீக்கிரம்…!!”

நான் குனிந்தேன் எனது ஆணுறுப்பை எடுத்து அவளுடைய பெண்ணுறுப்பு துளையில் வைத்தேன். இடுப்பை அசைத்து உள்ளே தள்ளினேன். கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக.. எனது முழு உறுப்பும் உள்ளே செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். முழுவதும் உள்ளே நுழைந்ததும் ஒருவித திருப்தியும், சுகமும் கலந்து ஒரு உணர்ச்சி. நிமிர்ந்து சுந்தரியின் முகத்தை பார்த்தேன். பக்கென்று அதிர்ந்து போனேன். குப்பென்று வியர்த்தது மாதிரி ஒரு உணர்வு.

ஒரு வினாடிதான்..!! ஒரே ஒரு ஒற்றை வினாடிதான்..!! சுந்தரியின் அழகு முகம் மிகவும் கோரமாக மாறி, பின் பழைய மாதிரி ஆனது. கோரமென்றால்.. அந்த மாதிரி ஒரு கோரமான முகத்தை நான் பார்த்ததே இல்லை..!! முகம் எல்லாம் அழுகிப் போய்.. எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு..!! வேணாம்…!! ப்ளீஸ்…!! பார்த்த எனக்கு “பஹீர்ர்ர்…!!” என்று இருந்தது. என்னுடைய அதிர்ச்சி என் முகத்தில் தெரிய, சுந்தரி கேட்டாள்.

“என்னப்பா…!! என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரியாயிட்டீங்க..?”

“ஒ..ஒன்னும் இல்லை சுந்தரி..!! உ..உன் ஃபேஸ்..!!!”

“என் ஃபேஸ்க்கு என்ன…? நல்லாத்தான இருக்கு..!!”

“ஆ…ஆமாம்..!! நல்லத்தான் இருக்கு…!!”

“எதையாவது நெனச்சு பயந்துட்டீங்களா..?”

“ஆ…ஆமாம்…!!”

“சரி வாங்க…!! என் மேல படுத்துக்கங்க..!! கட்டிப் புடிச்சுக்காங்க.. பயம் போயிடும்..!!”

நான் அவள் மீது அப்படியே கவிழ்ந்து படுத்துக் கொண்டேன். சுந்தரி என்னை இறுக்கி அனைத்துக் கொண்டாள். என் காது மடலிலும், கழுத்திலும் முத்தம் கொடுத்தாள். முதுகுத்தண்டை ஒரு மாதிரி மசாஜ் செய்துவிட்டு என்னை ஆசுவாசப் படுத்தினாள். என்னுடைய படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. ஆக்சிடன்ட் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல், நான்தான் எதையோ நினைத்து பயந்திருக்கிறேன். சகஜமாக நான் மாறிக்கொண்டு இருக்கும்போது, சுந்தரி என் காதோரமாய் கிறக்கமாக சொன்னாள்.

“ம்ம்ம்… ஆரம்பிங்க…!!”

நான் இடுப்பை தூக்கி இயங்க ஆரம்பித்தேன். நிதானமாக, ஆசையாக, காதலாக இயங்கினேன். எனது உறுப்பை உருவி உருவி, சுந்தரியின் உறுப்புக்குள் திணித்தேன். குனிந்து அவளுடைய உதடுகளில் முத்தமிட்டுக் கொண்டே, என் இடுப்பை அசைத்தேன். சுந்தரி ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தாள். என் முதுகை பிடித்து பிசைந்துகொண்டு, தன் கால்களை அகலமாக விரித்துக் கொண்டு, என் ஆண்மையின் அடிகளை ஆசையாக தன் பெண்மையில் வாங்கிக் கொண்டாள்.

உடம்பெல்லாம் சுகம் என்றால் சுகம்… அப்படி ஒரு சுகம்..!! அந்த மாதிரி ஒரு சுகத்தை நான் அனுபவித்ததே இல்லை.. கண்களை செருகி, மெய்மறந்து அனுபவித்துக் கொண்டிருந்தேன். சுகத்தில் துடிக்கும் என் முகத்தை பார்த்தவாறே, சுந்தரி எனக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் அனுபவித்தோம் என்று தெரியவில்லை. களைத்துப் போய் அப்படியே தூங்கிப் போனோம்.

காலையில் நான் எழுந்தபோது அருகில் சுந்தரியையும் காணோம். மாயாவையும் காணோம். வீடு சப்தமில்லாமல் ஒருவித மயான அமைதியுடன் இருந்தது. நான் கட்டிலில் இருந்து மெல்ல எழுந்தேன். இரண்டு மூன்று முறை ‘சுந்தரி… சுந்தரி…’ என்று அழைத்து ஏமாந்தேன். வியப்பாக இருந்தது. கீழே செல்லலாம் என்று படியிறங்க ஆரம்பித்தேன். பாதி தூரம் இறங்கியபோதுதான் சுவற்றில் மாட்டியிருந்த அந்த போட்டோ மீது என் பார்வை படிந்தது. நான் என் வாழ்நாளின் உச்சபட்ச அதிர்ச்சியை ஒன்றாக உள்வாங்கினேன்.

சுவரில் சுந்தரியின் போட்டோ..!! அருகிலேயே மாயாவின் போட்டோ..!! பிறப்பு, இறப்பு தேதிகளுடன்..!! அவர்கள் இருவரும் இரண்டு வருடங்கள் முன்பே இறந்து போயிருந்தார்கள். நான் அப்படியே அரண்டு போனேன். உடம்பெல்லாம் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. அப்படியென்றால்..? அப்படியென்றால்..? செத்துப்போன ஆவியுடனா நேற்று உறவு கொண்டேன். எனக்கு பயமின்சாரம் உடலெங்கும் ஹை-வோல்டேஜில் பாய்ந்தது.. நோ…!! இந்த வீடு சரியில்லை…!! இங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து…!! உடனடியாக இடத்தை காலி செய்யவேண்டும்.

நான் பட்டென்று பரபரப்பானேன். தபதபவென்று படிகளில் இறங்கினேன். பயத்தில் கால்கள் பின்னிக் கொண்டன. படிக்கட்டுகளில் விழுந்து ‘கட.. கட.. கட..’ வென உருண்டேன். ஒவ்வொரு படியாக உருண்டு, ஹால் தரையில் வந்து விழுந்தேன். நான் வந்து விழுந்த இடத்தில் சாக்பீசால் மார்க் செய்யப்பட்டிருந்தது. கொலையான உடலை சுற்றி போலீஸ் போடுமே.. அந்த மார்க்..!! ஒரு பெரிய உருவம்..!! அருகிலேயே ஒரு சின்ன உருவம்..!!

எனக்கு மனசுக்குள் கிலி கிளம்பியது. மயக்கம் வருவது போல இருந்தது. கண்கள் செருகின. ம்ஹூம்..!! கூடாது…!! எந்த நேரத்திலும் அந்த மோகினிப்பிசாசு வந்துவிடுவாள்.. அதற்குள் இங்கிருந்து ஓடிவிடவேண்டும். நான் மீண்டும் ஓடினேன். அந்த நீண்ட ஹால் நெட்டுக்க வெறிபிடித்த மாதிரி பதறியடித்துக்கொண்டு ஓடினேன். ஹாலை கடந்து வரவேற்பறையில் நுழையும்போது.. மீண்டும் கால் இடறி.. பொத்தென்று அந்த டீப்பாயில் போய் விழுந்தேன். நான் நேற்று குடித்து முடித்து வைத்திருந்த கப் கீழே விழுந்து நொறுங்கியது. கப்பில் மிச்சமிருந்த திரவம் தரையில் விழுந்து சிதறியது. கருஞ்சிவப்பு நிறத்தில்..!!

அந்த கருஞ்சிவப்பு திரவம்..!! என்ன அது…? ரத்தமா…? எனக்கு ‘ஜிலீர்ர்….’ என்று முதுகுத்தண்டில் ஐஸ்கட்டி சொருகிய மாதிரி ஒரு சிலிர்ப்பு…!! ரத்தமா அருந்தினேன்..? கடவுளே…!! என் முகத்துக்கு அருகே பறந்து வந்து அந்த நியூஸ் பேப்பர் விழுந்தது. “மகளை கொன்று தாயும் தற்கொலை..!!” கொட்டை எழுத்துக்களில்…!! எழுந்தேன். கதவை திறந்துகொண்டு திடுதிடுதிடு வென ஓடினேன். திரும்பியே பார்க்கவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த காட்டு முற்செடிகள், கற்றாழை செடிகள்.. எல்லாவற்றிலும் விழுந்து.. எழுந்து.. ஓடினேன். கண்ணுமண்ணு தெரியாத ஓட்டம்..

தூரத்தில் எனது காரை சுற்றி இப்போது ஒரு பெருங்கும்பல் நிற்பது தெரிந்தது. ஒரு போலீஸ் ஜீப்பும், ‘ஒய்ங்… ஒய்ங்… ஒய்ங்…’ என்று சைரன் சுழன்ற ஒரு ஆம்புலன்சும் அருகிலேயே நின்று கொண்டிருந்தன. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அனுபவித்த வேதனை முடிவுக்கு வந்த மாதிரி ஒரு திருப்தி. கும்பலை நெருங்கினேன். ‘ஹலோ.. நாந்தாங்க இந்த கார் ஓனர்..!!’ என சொல்லிக்கொண்டே நான் கும்பலை விலக்கி உள்ளே செல்ல முயன்றேன். யாரும் எனக்கு வழிவிடவில்லை. எல்லோரும் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்கள். எனக்கு எரிச்சலாக இருந்தது. அப்படியே கத்தவேண்டும் போல இருந்தது.

அப்போதுதான் அந்த கும்பல் திடீரென்று விலகியது. உள்ளே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். நான் அதை குழப்பமாக பார்த்தேன். அந்த ஸ்ட்ரெச்சரில்.. அந்த ஸ்ட்ரெச்சரில்.. நான் படுத்து கிடந்தேன்….!!! உடலெங்கும் சிவப்பு சிவப்பாய் ரத்தம்…!! கழுத்து அறுபட்டு.. ரத்தம் உறைந்த நிலையில்.. பிளந்திருந்தது..!!

எனக்கு இப்போது காலுக்கு கீழே பூமி பிளந்துகொண்டது போல இருந்தது..? என்ன நடக்கிறது இங்கே…? நடப்பதெல்லாம் நிஜமா..? இல்லை கனவா..? அப்படி என்றால்..? அப்படி என்றால்..? நான்… நான்… நேற்றைய ஆக்சிடண்டில் இறந்துவிட்டேனா…? வெறும் ஆவியாகத்தான் நேற்று இரவில் இருந்து அலைகிறேனா..? அதனால்தான் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையா..? அவ்வளவு நேரம் கைகாட்டியும் ஒரு வாகனம் கூட நிற்காமல் சென்றதா..? சுந்தரியும், மாயாவும் ஆவி என்பதால்தான் அவர்களின் கண்ணுக்கு மட்டும் தெரிந்தேனா..? அந்த பீடி புகைத்த பெரியவர்..? அந்த ஆளும் ஆவியா..?

நினைக்க.. நினைக்க.. எனக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது.. அப்படியானால் இந்த உலகில் இனி நான் கிடையாதா..? வாழ்க்கை முடிந்து போயிற்றா..? உயிர் என்பது அப்படி பொசுக்கென்று போய்விடும் சமாச்சாரமா..? நான் செய்வதறியாது.. பைத்தியம் மாதிரி.. அந்த ஸ்ட்ரெச்சர் பின்னால் என்னுடைய உடம்பை பார்த்துக் கொண்டே சென்றேன். ஒரு போலீஸ் வாக்கிடாக்கியில் பேசிக்கொண்டே வந்தார்.

“ஆமாம் சார்.. கார் கிளாஸ் உடைஞ்சு கழுத்தை கட் பண்ணிருக்கு..!! ஆள் ஸ்பாட்லயே காலி…!!”

அதுதான் நேற்று முழுவதும் எனக்கு கழுத்து வலிப்பது மாதிரி இருந்ததா..? நான் பரிதாபமாய் என் கழுத்தை தொட்டு பார்த்தேன்.

“விக்டிம் பேரு அசோக்.. பெங்களூர்ல சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்காரு..!! ம்ம்ம்… இன்பார்ம் பண்ணிட்டோம் சார்…!!”

அவர்கள் என் உடலை அந்த ஆம்புலன்சில் ஏற்றினார்கள். ஆம்புலன்ஸ் உடனே கிளம்பியது. எனக்கு துக்கம் தொண்டையை அடைப்பது மாதிரி இருந்தது. பிறந்ததில் இருந்து என் கூடவே இருந்த என் உடலை.. இன்று யாரோ எடுத்து செல்கிறார்கள்..!! ‘என் உடம்பு..!! என் உடம்பு..!!’ நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் பின்னால் அலறிக்கொண்டே ஓடினேன். ‘நோ…!! நோ…!!’ என பெருங்குரல் எடுத்து அலறினேன். என்னுடைய அலறல் யாருக்குமே கேட்கவில்லை. ‘ஓ…!! என்று கதறி அழுதபடி ஓடினேன். ஒரு சொட்டு கண்ணீர் கூட என் கண்ணில் இருந்து வரவில்லை.

– தொடரும்

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.