மதன மோக ரூப சுந்தரி – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri – அவள் ஒருமாதிரி கேலியாக சொன்னாள். நான் சற்று எரிச்சலானேன். கேலி பேசுபவளிடம் வேறு என்ன கேட்பது என்று குழம்பிக் கொண்டு இருக்கும்போது அவளே சொன்னாள்.

“ஏன் வெளிலேயே நிக்குறீங்க..? உள்ள வாங்க..!!”

“இல்லைங்க பரவால்லை…” நான் தயங்க,

“பரவால்லை.. உள்ள வாங்க.. ரொம்ப தூரம் கஷ்டப்பட்டு நடந்து வந்திருப்பீங்க.. குடிக்க ஏதாவது தர்றேன்..!!”

“ஐயயோ.. அதெல்லாம் ஒன்னும் வேணாங்க.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..?’

“சிரமம்லாம் ஒன்னும் இல்லை.. இட்ஸ் ஓகே.. கம் இன்..!!”

நான் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். உள்ளே கிடந்த சோபாவில் அமர சொன்னாள். அமர்ந்து கொண்டேன். அவள் உள்ளே சென்றாள். நான் வீட்டை சுற்றி முற்றி பார்த்தேன். மிகவும் வசதியான வீடு. வீடு முழுவதும் பெரிய பெரிய ஓவியங்களும்.. சாண்டலியர் விளக்குகளும்.. அங்கங்கே ஏற்றப் பட்ட பெரிய சைஸ் மெழுகுவர்த்திகளும்.. அந்த மங்கலான வெளிச்சத்திலேயே என்னால் அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை முழுவதுமாய் உணர்ந்து கொள்ள முடிந்தது. வீட்டில் அவளை தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. வியப்பாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே அவள் கையில் ஒரு கோப்பையுடன் வெளியே வந்தாள். என்னிடம் நீட்டினாள். சுட சுட இருந்தது. காபி என்று நினைத்து வாயில் வைத்து உறிஞ்சினேன். சுவையாக இருந்தது. ஆனால் காபி இல்லை என்று புரிந்தது. கோப்பைக்குள் குனிந்து பார்த்தேன். கருப்பு நிறத்தில், திக்காக இருந்தது அந்த பானம்.

“காபி இல்லையா..? என்ன இது..?” நான் குழப்பமாக அவளை கேட்க, அவள் சிரித்தாள்.

“என்னனு தெரியலையா..? கண்டுபிடிங்க பாப்போம்..!!”

நான் சற்று யோசித்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.

“தெரியலைங்க.. நீங்களே சொல்லுங்களேன்..? என்னது..?”

“என்னவா இருந்தா என்ன..? டேஸ்ட் புடிச்சிருக்கில்ல…?”

“ம்ம்.. புடிச்சிருக்கு..!!”

“அப்ப சாப்பிடுங்க..!!”

நான் கப்பை உறிஞ்ச ஆரம்பித்தேன். அவள் முகத்தில் புன்னகையுடனே என்னை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் உறிஞ்சிக் கொண்டே மெல்ல கேட்டேன்.

“உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா..?”

“எதுக்கு கேக்குறீங்க..?”

“சும்மாதான்.. புடிக்கலைன்னா விட்டுடுங்க..!!”

“அப்டிலாம் ஒன்னும் இல்லை..!! அப்பா அம்மா வச்ச பேர் கொஞ்சம் நீளம்.. எல்லாரும் சுருக்கமா சுந்தரினு கூப்பிடுவாங்க..!!”

“ஓ..!! சுந்தரி…!! நல்லாருக்கு பேர்…!! ம்ம்ம்ம்… நீங்க… இந்த வீட்ல.. நீங்க மட்டும் தனியாவா இருக்கீங்க..?”

“ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?”

“உங்களுக்கு பயமா இல்லை…?”

நான் சொன்னதும் அவள் ‘கல கல கல’ வென விழுந்து விழுந்து சிரித்தாள். ‘பயமா.. எனக்கா…?’ என்று என்னை பார்த்து ஒரு மாதிரி கேலியாக, கைநீட்டி கைநீட்டி சிரித்தாள். அமைதியாய் இருந்த அந்த பிரதேசத்தை அவளுடைய சிரிப்பொலி ஜிலீர்… ஜிலீர்… என்று வன்மையாக தாக்கியது. அவள் அந்த மாதிரி சிரிப்பது எனக்கு ஒருவித கிலியை ஏற்படுத்தியது. முதுகுத்தண்டு ஒருமுறை ஜிவ்வென்று.. சிலிர்த்து அடங்கியது.

“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க..?”

“ம்ம்ம்… ஒன்னும் இல்லை… எனக்கு பயமெல்லாம் கிடையாது.. நான் ரொம்ப தைரியமானவ..!! வேணும்னா நீங்க என் தைரியத்தை டெஸ்ட் பண்ணி பாக்கலாம்.. கொஞ்சம் என் மேல கை வச்சு பாருங்க ..!!” அவள் சிரிப்பு கொஞ்சம் கூட குறையாமல் அப்படி சொல்ல, எனக்கும் சிரிப்பு வந்தது.

“என்னங்க நீங்க…? நான் சும்மா பேச்சுக்கு கேட்டேன்.. அதுக்கு போய் மேல கை வைக்க சொல்றீங்களே..?”

“ம்ம்.. அப்போ உங்களுக்கு பயம்.. எனக்கு பயம் இல்லைன்னு ஒத்துக்குங்க..!!”

“ஒத்துக்குறேன்.. எனக்கு பயம்தான்..!!” என்று கைகள் ரெண்டையும் தூக்கி ஒத்துக் கொண்டேன். புன்னகைத்தவாறே அவளுடைய குழந்தைத்தனமான அழகு முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தேன். பிறகு கொஞ்சம் தயங்கிவிட்டு சொன்னேன்.

“ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே..?”

“ம்ம்.. சொல்லுங்க…!!”

“நீங்க.. நீங்க… ரொம்ப அழகா இருக்கீங்க..!!”

“ம்ம்.. நெஜமா..?”

“சத்தியமா.. நான் நெறைய அழகான பொண்ணுங்களை பாத்திருக்கேன்..!! ஆனா.. ஆனா.. உங்களை மாதிரி ஒரு அழகியை நான் பாத்ததே இல்லை..!! அப்டியே தேவதை பூமில இறங்கி வந்த மாதிரி இருக்கீங்க..!!”

அவள் அதற்கும் ‘கலீர்.. கலீர்..’ என பற்களை காட்டி பெரிதாக சிரித்தாள்.

“ம்ம்.. தேங்க்ஸ்..!! நீங்களும் பாக்குறதுக்கு ஸ்மார்ட்டாதான் இருக்கீங்க..!!” என்றாள்.

“பொய்…!!”

“நெஜமாதாங்க..!!”

“ம்ம்.. ஓகே… தேங்க்ஸ்..!!”

நான் அவளுடைய கண்களை பார்த்து சொல்ல, அவளும் என் கண்களையே பார்த்தாள். கொஞ்ச நேரம் இருவரும் அதே மாதிரி ஒருவரை ஒருவர் வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் காலி கப்பை, டீப்பாய் மேல் கிடந்த நியூஸ் பேப்பரில் வைத்துக் கொண்டே நான் சொன்னேன்.

“சரிங்க.. உங்க உபசரிப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்.. நான் கெளம்புறேன்..!!”

“எங்க போறீங்க..?”

அவள் பட்டென்று கேட்க, எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆமாம்.. எங்கு போவது..? நான் திணறிக்கொண்டு இருக்கும்போது அவளே தொடர்ந்தாள்.

“மறுபடியும் ரோட்ல போய் நின்னுக்கிட்டு.. கையை காலை தூக்கி டான்ஸ் ஆடப் போறீங்களா..?”

“வேற என்ன பண்றது..? ஏதாவது ஹெல்ப் கெடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்..!!”

“நான் ஒரு யோசனை சொல்றேன்.. கேக்குறீங்களா..?”

“என்ன..?”

“நைட்டு இங்கேயே தங்கி இருந்துட்டு.. காலைல போய் ஏதாவது ஹெல்ப் கெடைக்குதான்னு பாக்கலாமே..?”

எனக்கும் அந்த யோசனை சரியாக தோன்றியது. ஒருத்தனும் நிக்க மாட்டேன் என்கிறான். அங்கே போய் இரவு முழுவதும் என்ன செய்வது..? பேசாமல் இங்கே தங்கிவிட்டு காலையில் செல்லலாமே..? ஆனால்… ஆனால்.. இவளுக்கு…?

“என்ன யோசிக்கிறீங்க..?” அவள் கேட்க,

“இல்லை… நான் தங்குறதுல.. உங்களுக்கு ஏதாவது..?”

“ஒரு ப்ராப்ளமும் இல்லை.. தாராளமா தங்கலாம்..!! உள்ள வாங்க…!!”

அவள் அந்த திரி விளக்கை எடுத்துக் கொண்டாள். உள்ளறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன். அமைதியான அந்த பெரிய ஹாலில், ‘ஜல்ல்.. ஜல்ல்.. ஜல்ல்..’ என கொலுசொலி கிளம்ப, அவளுடைய முகத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்கோடு அவள் நடந்து சென்றதை பார்க்க, கொஞ்சம் பயமாயிருந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பின்னால் நடந்தேன். ஹாலின் அடுத்த மூலையில் இருந்த மாடிப்படியில் ஏறி மேலே சென்றாள். நானும் படி ஏறினேன்.

மாடியில் வரிசையாக பெரிய பெரிய அறைகள். ஒரு ஆறடி அகலத்துக்கு விசாலமான வராண்டா. அப்புறம் கைப்பிடி சுவர். மேலே இருந்து ஹாலை தெளிவாக பார்க்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. வராண்டாவில் ஜல் ஜல்லென்று நடந்து சென்றவள் ஒரு அறையின் முன்னால் நின்றுகொண்டாள். கதவை தள்ளி திறந்துவிட்டாள்.

“ம்ம்.. இங்க நீங்க தங்கிக்கலாம்..!!” என்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க.. இந்த ஹெல்ப்பை நான் மறக்க மாட்டேன்..!!”

“பரவால்லை.. காலைல பாப்போம்..!! ரெஸ்ட் எடுங்க..!!” சொல்லிவிட்டு திரும்பியவள், அப்படியே நின்றாள். பின்பு எதோ ஞாபகம் வந்தவளாய் திடீரென்று கேட்டாள்.

“ஆமாம்.. நீங்க உங்க பேரே சொல்லலையே..? உங்க பேரு என்ன..?”

“என் பேர் அசோக்..!!” நான் புன்னகைத்தவாறே சொன்னேன்.

அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அவளுடைய முகத்தில் தவழ்ந்திருந்த அழகு புன்னகை பட்டென்று காணாமல் போனது. முகத்தில் ஒருவித சோகம் வந்து குடிகொண்டது. என்னுடைய முகத்தையே ஒரு மாதிரி ஆச்சரியமும், ஏக்கமும், பரிதாபமும், காதலும் கலந்த ஒரு பார்வை பார்த்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை. அவள் முகத்துக்கு முன் கையை ஆட்டியவாறு கேட்டேன்.

ஹலோ…!! சுந்தரி…!! என்னங்க ஆச்சு…? ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க..?”

அவள் பதில் சொல்லவில்லை. கூர்மையாக என் முகத்தையே பார்த்தாள். பட்டென்று தனது இரண்டு கைகளாலும் என் கன்னத்தை தாங்கி பிடித்துக் கொண்டாள். பாசமாக என் கன்னத்தை வருடியபடியே கேட்டாள்.

“அசோக்..!! எப்டிடா இருக்குற..? இத்தனை நாளா என்னை விட்டுட்டு எங்க போயிட்ட..? நீ இல்லாம நான் எப்படி துடிச்சு போயிட்டேன் தெரியுமா…?”

அவள் ஏக்கமாக சொல்லிக்கொண்டே என் கண்களை காதலாக பார்த்தாள். அவளுடைய காதலான பார்வை இதயத்தில் ஊசி பாய்ந்த மாதிரி பாய்ந்து, எதுவோ செய்தது. மனதை அப்படியே போட்டு பிசைந்தது. தடுமாறிப் போன நான், பின்பு சமாளித்துக் கொண்டு அவளுடைய தோளைப் பிடித்து உலுக்கினேன்.

“சுந்தரி.. சுந்தரி.. ப்ளீஸ்.. என்னை பாருங்க…!! என்னாச்சு உங்களுக்கு திடீர்னு…?”

அவள் தலையை ஒருமுறை குலுக்கிக் கொண்டாள். இப்போது கொஞ்சம் சுயநினைவுக்கு வந்தவள் மாதிரி காணப்பட்டாள். ஆனால் இன்னும் அதிர்ச்சி முழுவதும் விலகாமல் ஒரு மாதிரி மலங்க மலங்க விழித்தாள். நான் மெல்லிய குரலில் கேட்டேன்.

“உங்களுக்கு அசோக்குனு யாரையாவது தெரியுமா..?”

“ம்ம்.. என் அத்தை பையன்..!! என் உயிர்..!!”

“அவரை நீங்க லவ் பண்றீங்களா..?”

“ம்ம்.. சின்ன வயசில இருந்தே..!! அவர்தான் என் புருஷன்னு நெனச்சிட்டு இருந்தேன்..!!”

“இப்போ… இப்போ அவர் எங்க இருக்காரு…?”

“தெரியாது…!!சின்னப் பையனா இருக்குறப்போவே.. வீட்ல கோவிச்சுக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டாரு..!!”

“சாரி சுந்தரி..!! நீங்க நெனைக்கிற அசோக் நான் இல்லை..!!”

“ம்ம்.. தெரியும்..!!” அவள் ஒரு மாதிரி அழும் குரலில் சொன்னாள்.

“ப்ளீஸ் சுந்தரி.. அழாதீங்க..!!”

“பரவால்லை… அவரை நெனச்சு நான் அழாத நாளே இல்லை..? என்னைக்காவது திரும்ப வந்துட மாட்டாரான்னு தெனம் தெனம் ஏங்குறேன்..!!”

எனக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு அழகு தேவதை இந்தப்பெண்..? இப்படி ஏங்குகிறாளே..? பார்ப்பதற்கே எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது..?

“சுந்தரி..!! உங்களை ஒன்னு கேக்கவா..?”

“ம்ம்.. கேளுங்க..!!”

“இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டும் தனியா என்ன பண்றீங்க..? உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா..?”

“இது நான் வாக்கப்பட்டு வந்த வீடு..!! சொந்தக்காரங்கன்னு யாரும் எனக்கு இல்லை..!!”

“உங்க ஹஸ்பண்ட்..? அவரு எங்க..?”

நான் கேட்டதும் அவளுடைய முகம் பட்டென்று ரவுத்திரமானது. விழிகளை விரித்து உக்கிரமாய் என்னை ஒரு பார்வை பார்த்தாள். கொஞ்ச நேரம் அவள் அப்படியே பார்த்தால் நாம் எரிந்து சாம்பாகி விடுவோம் போல இருந்தது. அந்த அளவு அதி உக்கிரமான பார்வை. எனக்கு ஜிலீர்ர்ர்… என்று இதயக்கூட்டுக்குள் எதுவோ பாய்ந்த மாதிரி இருந்தது. அவள் ஆவேசமான குரலில் சொன்னாள்.

“அவனை பத்தி மட்டும் பேசாதீங்க..!! இந்த நேரம்.. எங்கே.. எந்த வேசியோட படுத்து கெடக்கானோ…? பாஸ்டர்ட்…!!”

அவளுடைய குரலில் ஒரு அசாத்திய ஆவேசம் தென்பட்டது. எனக்கு அது ஒருவித நடுக்கத்தை வரவழைத்தது. என்ன ஆயிற்று இவளுக்கு திடீரென்று..? நான் உடனே பேச்சை மாற்றினேன்.

“ஆமாம் சுந்தரி.. அவரை பத்தி எதுக்கு..? விடுங்க..!!”

நான் சொன்னதும் அவளுடைய முகம் பட்டென்று நார்மலுக்கு வந்தது. மீண்டும் என்னை ஒரு மாதிரி காதலும், ஏக்கமுமாய் பார்த்தாள். எனக்கு அவளுடய நடத்தை ஒருவித கிலியை ஏற்படுத்தி இருந்தது. மெல்ல சொன்னேன்.

“ஓகேங்க சுந்தரி.. நான் படுத்து ரெஸ்ட் எடுக்குறேன்..!! நீங்க உங்க ரூமுக்கு போங்க..!!”

அவள் மேலும் கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு அந்த திரி விளக்கை எடுத்துக் கொண்டாள். திரும்பி நடந்தாள். அந்த இருளில், முகத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டி.. ஜல்.. ஜல்.. என்று கொலுசுகள் ஒலிக்க, நடந்து சென்றாள்.

– தொடரும் Jatti Kalattum Tamil Kamaveri Kathai

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000