கண்ணாமூச்சி ரே ரே – 37

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Latest Tamil Sex Stories – “இப்போ எறங்க போறிகளா இல்லையா..?? ஏய்.. சொல்றேன்ல.. எறங்குங்க.. வேறபக்கம் போய் வெளையாடுங்க.. போங்க..!!”

“தடதட தடதட ரயில் வண்டி.. தஞ்சாவுருக்கு போற ரயில் வண்டி..!!”

குழந்தைகளின் பாடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.. அவர்களது ரயில் ஓட்டமும் நிற்காது..!! பக்கவாட்டில் திரும்பி செம்பியனுக்கு அழகு காட்டியவாறு.. தொடர்ந்து அந்த தண்டவாளங்களில் ஓடிக்கொண்டே இருப்பார்கள்..!!

“இந்தா.. ரயிலு வரப்போகுது இப்போ..!!” பயமுறுத்தி பார்ப்பார் செம்பியன்.

“வந்தா வரட்டும்..!!” ஓடிக்கொண்டே கத்துவாள் கடைசியாக செல்கிற குட்டித்தாமிரா.

“மோதப்போகுது..!!”

தாமிரா இப்போது நின்று திரும்பி பார்ப்பாள்.. கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து ஸ்டைலாக நின்றவாறு.. தன்னை நோக்கி ஓடிவருகிற செம்பியனிடம் கேலியாக சொல்வாள்..!!

“மோதினா என்ன..?? ஓ.. எங்கமேல மோதினா உங்க ஓட்டை ரயிலு ஒடைஞ்சு போய்டும்னு பயமா..??” தாமிராவின் கேலி செம்பியனை செம டென்ஷனாக மாற்றும்.

“அடிக்க்க்… குட்டிக்கழுதை..!!! என்ன பண்றேன் பாரு இப்போ..!!”

ஆவேசமாக கத்துகிற செம்பியன், மீண்டும் குனிந்து சரளை கற்களை பொறுக்கிக் கொள்வார்.. ஓடுகிறவர்களை தொடர்ந்து விரட்டிக்கொண்டே செல்வார்.. குழந்தைகள் செல்கிற திசையை விட்டுவிட்டு, குறிபார்த்து வேறு திசையெல்லாம் கல் எறிவார்..!!

பழைய நினைவில் இருந்து மீண்ட ஆதிராவுக்கு, அவளையும் அறியாமல் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது.. எவ்வளவு இனிமையான குழந்தைப் பருவம் என்று தோன்றியது.. மீண்டும் அந்தக் காலங்கள் திரும்ப வராதா என ஏக்கமாக இருந்தது..!!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் அகழி ரயில் நிறுத்தத்தில் இருந்தனர்.. அலுவலகம் சென்று செம்பியனை சந்தித்தனர்..!! சிறிய அலுவலகம்தான்.. ஒரு நாளைக்கே நாலு ரயில்கள்தான் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.. எனவே.. ஐந்தே ஐந்து அலுவலர்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய அலுவலகம்தான்..!!

ஆரம்ப நல விசாரிப்புகளுக்கு பிறகு.. ஆதிரா வந்த விஷயம் பற்றி கேட்டார் செம்பியன்..!! அவளும்.. தாமிரா மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றியும், அது தொடர்பாக அவள் இவரை அடிக்கடி வந்து சந்தித்தது பற்றியும் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

“தாமிரா என்ன விஷயமா உங்களை வந்து பாத்தான்னு தெரிஞ்சுக்கலாமா அங்கிள்..??”

“ஒன்னுல்லம்மா.. சில தகவல்கள்லாம் கேட்டு தெரிஞ்சுப்பா.. அவ்வளவுதான்..!!!”

“எந்த மாதிரி தகவல்கள்..??”

ஆதிரா அவ்வாறு கேட்டதும், செம்பியன் சட்டென அமைதியானார்.. மனதில் இருக்கிற விஷயங்களை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்த, நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று தோன்றியது..!! சில வினாடிகள் இடைவெளிவிட்டு, அதன்பிறகே பேசினார்..!!

“ஹ்ம்ம்.. உனக்கே தெரியும்ல.. எனக்கு ஆவி நம்பிக்கைலாம் ரொம்ப ஜாஸ்தி.. ஆவிகள் இந்த உலகத்துல நிச்சயமா இருக்குன்னு நம்புறவன் நான்..!! ஆவிகளை பத்தி நெறைய விஷயங்கள் படிச்சிருக்கேன்.. தெரிஞ்சு வச்சிருக்கேன்.. சின்ன சின்ன ஆராயச்சிலாம் பண்ணிப் பாத்திருக்குறேன்..!!”

“ம்ம்.. அதுலாம் தெரியும் அங்கிள்..!!”

“ஆவிகளை பத்தி பொதுவான ஆராய்ச்சி மட்டும் இல்லாம.. நம்ம ஊரே பயந்து நடுங்குற குறிஞ்சியை பத்தியும், நெறைய விஷயங்கள் நான் சேகரிச்சு வச்சிருக்கேன்..!! இப்போன்னு இல்ல.. சின்ன வயசுல இருந்தே எனக்கு அந்த இன்ட்ரஸ்ட் உண்டு.. எனக்கு ஏனோ குறிஞ்சியை பத்தி தெரிஞ்சுக்குறதுல ஒரு ஈடுபாடு.. முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சது இதுலாம்..!!!”

“ம்ம்..!!”

“குறிஞ்சி தூக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லப்படுறவங்களோட வீட்டுக்குலாம் போவேன்.. அவங்க குடும்பத்தாரோட பேசுவேன்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு வச்சுப்பேன்.. எல்லாத்தையும் டைரில எழுதி வச்சுப்பேன்..!! இதுவரை.. இந்த அகழில காணாம போனவங்களோட மொத்த லிஸ்டும்.. கிட்டத்தட்ட மொத்தமா எங்கிட்ட இருக்கு..!!

“ஓ..!!”

“அதெல்லாம் பத்திதான் பெரும்பாலும் தாமிரா கேட்பா..!! அதாவது.. நடுவுல ஒரு இருபது வருஷம் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தது இல்லையா.. அதுக்கு முந்தி காணாம போனவங்களோட டீடெயில்ஸ், எந்த மாதிரி எந்த சூழ்நிலைல காணாம போனாங்க, அவங்களோட வம்சாவளி என்ன.. இதெல்லாம் கேட்பா.. நானும் சொல்வேன்..!! நான் சொல்றதுல அவளுக்கு தேவையான விஷயங்களை நோட் பண்ணிப்பா.. அவ்வளவுதான்..!!”

“ஹ்ம்ம்ம்ம்..!!”

ஆதிரா அதற்குள்ளாகவே ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தாள்.. ‘அவ்வளவுதானா’ என்பது போல இருந்தது அவள் பெருமூச்சு விட்டவிதம்..!! அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த சலிப்பு, அதைத்தொடர்ந்து அவள் பேசிய பேச்சிலும் தென்பட்டது..!!

“ப்ச்.. எனக்கு நெறய விஷயம் புரியலை அங்கிள்.. ஒரே கொழப்பமா இருக்கு.. ஆவி பத்தியும், இந்த குறிஞ்சி பத்தியும்..!!”

“என்னம்மா புரியல உனக்கு..?? எங்கிட்ட கேளு.. எனக்கு தெரிஞ்சா சொல்றேன்..!!”

“மொதல்ல.. மத்த ஊர்ல பேய்களை பத்தி சொல்றதுக்கும், நம்மூர்ல குறிஞ்சி பத்தி சொல்றதுக்கும் ரொம்பவே வித்தியாசம்..!! மத்த ஊர்லலாம்.. பேய் கொன்னுடுச்சுன்னு சொல்வாங்க.. அடிச்சுப்போட்டு போய்டுச்சுன்னு சொல்வாங்க.. பேயை பாத்து ரத்த வாந்தி எடுத்து செத்துப் போய்ட்டார்ன்னு சொல்வாங்க..!! ஆனா.. இங்க.. இந்த மாதிரி.. ஆள் இருந்த சுவடே தெரியாம.. ஒரு சின்ன ட்ரேஸ் கூட இல்லாம.. மனுஷங்க மாயமா மறைஞ்சு போறாங்க.. ஒரு ஆவியால இது முடியுமா..?? அந்தமாதிரி தூக்கிட்டு போற சக்திலாம் ஆவிங்களுக்கு இருக்கா..?? இதெல்லாம் சாத்தியம்தானா..??”

“ஹ்ம்ம்.. சில வெளிநாடுகள்ல ஒரு நம்பிக்கை இருக்கு ஆதிரா.. பூகிமேன்’னு ஒரு கெட்டசக்தி இருக்குறதா நம்புறாங்க.. அந்த பூகிமேனோட குணாதிசயம், நம்ம குறிஞ்சியோட குணாதிசயத்தோட ரொம்பவே ஒத்துப் போகுது..!! பிரேஸில் நாட்டுல சொல்லப்படுற பூகிமேன் கதைகள் இந்த மாதிரிதான்.. எங்க போனாங்கன்னே ட்ரேஸ் பண்ண முடியாத மாதிரி.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவானாம் அந்த பூகிமேன்..!!”

“ஓ..!!”

“அதேமாதிரி.. குறிஞ்சி ரெட் கலர் அங்கி போட்டுக்கிட்டு வருவான்னு எல்லாரும் சொல்றாங்கள்ல..??”

“ஆமாம்..!!”

“குறிஞ்சிக்கும் அந்த அங்கிக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு தெரியல.. ஆனா.. ஐரோப்பிய நாடுகள்ல இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கு.. ரெட்ன்றது ஈவிலோட கலர் அப்படின்னு.. பேய்கள்லாம் செவப்பு கலர் ட்ரஸ் போட்டுட்டு வரும்னுதான் அவங்க நம்புறாங்க..!!”

“ஓ..!!”

“இதெல்லாம் ஏதோ வேற நாட்டு மக்களோட வெத்து நம்பிக்கைன்னு நெனைக்காம.. மனுஷங்களோட உலகம், ஆவிகளோட உலகம்னு.. அந்த ரெண்டை மட்டும் மனசுல வச்சு யோசி ஆதிரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும்..!!”

“ஹ்ம்ம்.. சாத்தியம்தான்னு தோணுது..!!”

“கரெக்ட்..!!”

“சரி.. அப்படியே குறிஞ்சிக்கு அந்த சக்தி இருக்குதுன்னு வச்சுக்கிட்டாலும்.. அவ ஏன் தாமிராவை தூக்கிட்டு போகணும்..?? இந்த ஊரே அந்த குறிஞ்சியை பத்தி கேவலமா சொல்லிட்டு இருந்தப்போ.. அவ நல்லவன்னு சொன்ன ஒரே ஆள் என் தங்கச்சி தாமிராதான்..!! அவ மேல குறிஞ்சிக்கு என்ன கோவம்.. அவளை ஏன் குறிஞ்சி தூக்கிட்டு போகணும்..??”

“ஹாஹா.. இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது..??”

“ஏன் அங்கிள்..??”

“இதுதான் பேய், இப்படித்தான் ஆவிகள்’னு.. நம்மால அவ்வளவு ஈசியா எந்த முடிவுக்கும் வந்துட முடியாது..!! மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது ஆதிரா.. அதனாலத்தான் அதை அமானுஷ்ய சக்தின்னு சொல்றோம்..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. எப்படி நம்மா உறுதியா சொல்ல முடியும்..?? ஆவிகளோட நியாயம் அதுகளுக்குத்தான் புரியும்.. நாம புரிஞ்சுக்கணும்னு நெனைச்சா.. அது ரொம்ப கஷ்டம்..!!”

“ஹ்ம்ம்.. கொஞ்சம் புரியுது..!! அப்போ.. எல்லாத்துக்கும் காரணம் குறிஞ்சிதான்னு சொல்றிங்க..??”

“ஆமாம்மா.. அப்படித்தான் நான் நம்புறேன்.. குறிஞ்சிதான் எல்லாம் பண்ணிட்டு இருக்குறா..!!” என்று உறுதியான குரலில் சொன்ன செம்பியன் சற்றே நிறுத்தி,

“ஆனா…..” என்று இழுத்தார்.

“என்ன அங்கிள்..??”

“எனக்கு ஒரே ஒரு சின்ன உறுத்தல் மட்டுந்தான்..!!”

“என்ன உறுத்தல்..??”

“இந்த உறுத்தலை தாமிராட்ட சொன்னப்போ.. அவளுமே ‘அப்படியா’ன்னு ரொம்ப ஆச்சர்யமா கேட்டுக்கிட்டா..!!”

“என்னது அது.. சொல்லுங்க அங்கிள்..!!”

“எப்படி சொல்றதுனா.. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்க லிஸ்டையும்.. இப்போ அஞ்சு வருஷமா காணாம போனவங்க லிஸ்டையும்.. ஒண்ணா வச்சு கம்பேர் பண்ணி பாத்தோம்னா.. ஒரு விஷயம் ரொம்ப உறுத்தலா இருக்கு..!!”

“எது..??”

“இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவங்கள்ல.. எல்லா டைப்பும் இருந்தாங்க.. பொறந்த கொழந்தைங்க.. திடமான ஆம்பளைங்க.. வயசான கெழடுங்க.. எல்லாரும் அதுல அடக்கம்..!! ஆனா.. போன அஞ்சு வருஷமா காணாம போனவங்களை பாத்தோம்னா.. மொத்தம் பதினெட்டுப் பேரு.. அத்தனை பேரும் கன்னிப்பொண்ணுங்க, இல்லனா ஹவுஸ்வொய்ஃப்ங்க..!!”

செம்பியன் இயல்பாக சொல்லிக்கொண்டிருக்க, ஆதிராவும் கதிரும் அப்படியே திகைத்துப் போய் அவரை பார்த்தார்கள்..!!

அதன்பிறகும் சிறிது நேரம் அவருடன் பேசி இருந்துவிட்டு.. ஆதிராவும் கதிரும் அங்கிருந்து கிளம்பினார்கள்..!! தேடிவந்த விஷயத்தில் தெளிவேதும் பிறக்கவில்லை.. கூடக்கொஞ்சம் மனதுக்குள் குழப்பமே அதிகரித்திருந்தது..!!

“செம்பியன் அங்கிள் ரொம்ப கொழப்பிட்டாரு..!!” ஆதிரா சொன்னாள்.

“ம்ம்.. என்னையுந்தான்..!! இத்தனை நாளா இந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்லைன்னு நெனைக்கிறப்போ.. ரொம்பவே கேவலமா இருக்கு..!!”

“எனக்கும் இப்போ புதுசு புதுசா என்னன்னவோ தோணுது..!!”

“என்ன தோணுது..??” Sunni Oombum Latest Tamil Sex Stories

– தொடரும்

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.