கண்ணாமூச்சி ரே ரே – 39

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Sex Stories – ஆதிராவின் சிந்தனையோட்டம் இப்போது வெகுவாக சிதைந்து போயிருந்தது.. மூளைக்குள் வெட்டிய குழப்ப மின்னல்களால், அவளது முகம் வெளிறிப்போய் கிடந்தது.. அவளுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பயமும், மிரட்சியும்..!! அங்கிருந்து அவள் வீட்டை சென்றடைகிற வரை.. ஆங்காங்கே அவ்வப்போது தோன்றி மறைந்த மாயபிம்பங்களும், மருட்சியான காட்சிகளுமே.. அவள் எந்த அளவிற்கு குழப்பக்கடலில் மூழ்கியிருக்கிறாள் என்பதற்கு சான்றுகள்..!!

ஆதிராவுக்கு பக்கவாட்டில்.. சற்று தூரத்தில்.. சிவப்பு அங்கி அணிந்த குறிஞ்சி.. இவளுக்கு இணையாக மலைச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தாள்..!! மரங்களுக்கிடையே அவ்வப்போது மறைந்து மறைந்து.. பிறகு மீண்டும் ‘சரக் சரக்’கென மின்னலாக தோன்றி..!! முகம் மறைக்கிற கூந்தல் மயிர்களின் வழியே.. ஒற்றைக்கண்ணால் இவளை வெறித்துப் பார்த்தபடி.. இவளுடனே மலைப்பாதையில் சேர்ந்து நடந்தாள்..!!

ஆதிராவின் செவிக்கருகே ‘விஷ்ஷ்ஷ்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்..’ என்று சப்தம்.. அவளது நாசிக்கருகே வினோதமான மகிழம்பூ வாசனை..!! இமைகள் தானாக செருக ஆரம்பிக்க, தலையை உதறிக் கொண்டாள்..!!

செல்கிற வழியில் செடி நட்டுக்கொண்டிருந்த மணிமாறன்.. இவள் அருகில் சென்றதும் தலையை நிமிர்த்தி சொன்னார்..!!

“ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!”

மரமொன்றுக்கு பின்னிருந்து.. மயிர்மண்டிய முகத்துடன் வெளிப்பட்ட மாந்திரிகவாதி.. இடுங்கிப்போன பார்வையுடன் இவளை கேட்டார்..!!

“உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்ததுக்கு அப்புறந்தான் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப்போற ஆதிராக்கொழந்தை..??”

திடீரென ஆதிராவின் கால்களுக்கு அருகே அந்தக்காட்சி..!! தரையில் கிடந்து உருண்டவாறே.. தாரைதாரையாய் கண்ணீர் வடித்தவாறே.. பரிதாபமாய் புலம்பினாள் வனக்கொடி..!!

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!”

கைகள் நிறைய சரளைக் கற்களுடன்.. ஆதிராவுக்கு பின்னால் தொடர்ந்து வந்த செம்பியன்.. கண்களில் ஒரு அதீத பயத்துடன் ரகசியக்குரலில் கிசுகிசுத்தார்..!!

“அந்த பூகிமேன்.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவான்..!!”

கதிரும் ஆதிராவும் காரில் ஏறி அமர்ந்தனர்.. கார்க்கதவை அறைந்து சாத்திய ஆதிரா, எதேச்சையாக பின்புறம் திரும்பினாள்..!! பின்சீட்டில் கைகளை விரித்துவைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் வில்லாளன்.. எகத்தாளமான குரலில் இவளிடம் கேட்டார்..!!

“அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..??”

கார் சென்றுகொண்டிருக்கையிலேயே அவளது காலுக்கடியில் ஏதோ தட்டுப்பட்டது.. சீட்டுக்கடியில் இருந்து, அந்த குட்டிப்பெண் விருட்டென தலையை வெளியே நீட்டினாள்.. அகல்விழியின் தங்கை..!! வெளிறிப் போன முகமும், பயம் அப்பிய விழிகளுமாக மிரட்சியாக சொன்னாள்..!!

“அ..அக்காவை.. குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!”

காரோட்டிக்கொண்டிருந்த கதிர் திடீரென இவள்பக்கமாக திரும்பினான்.. வெறித்த பார்வையுடன், கியர் மாற்றிக்கொண்டே இறுக்கமாக சொன்னான்..!!

“இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!”

வீட்டை அடைந்ததும் ஆதிரா காரில் இருந்து இறங்க.. பின்பக்க கதவை திறந்துகொண்டு கூடவே இறங்கினான் முகிலன்.. குரூரமாக முகத்தை வைத்துக்கொண்டு எச்சரித்தான் இவளை..!!

“அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி அவ கழுத்தை திருகிப் போட்ருவேன்.. சொல்லி வையி..!!”

வாசலை அடைந்து படி ஏறுகையில்.. கையில் கிஃப்ட் பாக்ஸுடன் எதிர்ப்பட்டார் திரவியம்..!!

“ஹாஹா.. எனக்கு எல்ல்ல்ல்ல்லாம் தெரியும்மா..!!” என்று விஷமப் புன்னகையை சிந்தினார்.

வீட்டுக்குள் நுழைந்த ஆதிரா, அயர்ந்துபோய் தொப்பென்று சோபாவில் விழுந்தாள்.. அத்தனை நேரம் அவளை நெருக்கிய குழப்ப அழுத்தத்தில் இருந்து மீளமுடியாமல், அப்படியே கண்களை இறுக்கிக் கொண்டு கிடந்தாள்..!!

“என்னாச்சு ஆதிராம்மா..?? உடம்பு கிடம்பு சரியில்லையா..??” என்று கனிவாக கேட்ட வனக்கொடிக்கு கூட,

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லமா.. லேசா தலைவலி..!!” என தடுமாற்றமாகவே பதில் சொன்னாள்.

“சாப்பாடு ரெடிமா..!! சாப்பிடுறியா..??”

“இ..இல்லம்மா.. கொஞ்ச நேரம் ஆகட்டும்..!!”

தனது கைபேசிக்கு வருகிற அந்த மர்மமான அழைப்பைப்பற்றி.. உடனடியாய் தனது கணவனிடம் தெரிவிக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.. ஊட்டியிலிருக்கும் அவனுக்கு கால் செய்து பேசிவிடலாமா என்று கூட ஒருகணம் நினைத்தாள்..!! பிறகு.. அலுவலக வேலை நிமித்தமாக சென்றிருக்கும் அவனுக்குள்.. தனது அழுத்தத்தை இட்டு நிரப்பவேண்டாமே என்று தோன்றவும்.. அந்த யோசனையை கைவிட்டாள்..!!

அன்றிரவு.. தான் குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சிபி..!! அவனுடைய வருகைக்காகத்தான் காத்திருந்த ஆதிரா.. அவன் வந்ததுமே ஓடோடிச்சென்று அந்த விஷயத்தை அவனுக்கு உரைத்தாள்.. அவனுடைய வார்த்தையை மீறி கதிருடன் சுற்றியதை மட்டும் தவிர்த்துவிட்டு, அந்த மர்ம அழைப்பைப்பற்றி மட்டும் சொன்னாள்..!!

மனைவி சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டே வந்த சிபி.. கொஞ்சம் கொஞ்சமாய் முகம் மாறினான்.. திகைப்பும், குழப்பமும் கலந்துகட்டி வழிந்தது அவனது முகத்தில்..!! ‘எப்படி இது சாத்தியம்?’ என்பது போல நெற்றியைப்பற்றி பிசைந்துகொண்டான்.. எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்தான்..!!

குழப்பத்தில் தத்தளித்த கணவனிடம், ஆதிரா இப்போது கவலையாக கேட்டாள்..!!

“அந்த மொபைல் நம்பரை ட்ரேஸ் பண்ணனும் அத்தான்.. யாராவது அந்த நம்பரை யூஸ் பண்ணிட்டு இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.. முடியுமா..??”

“ம்ம்.. நாவரசு ஸார்ட்ட வேணா ஹெல்ப் கேட்டுப் பாக்கலாம் ஆதிரா..!! தமிழ்நாடு போலீஸ் டிப்பார்ட்மன்ட்ல அவருக்கு கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஸ் இருக்கு..!!”

“ஓ..!! அப்போ அவர்ட்ட பேசுறிங்களா..??”

“இ..இப்போவேவா..??”

“ம்ம்.. இப்போவேதான்..!!”

“அன்-டைமா இருக்கேன்னு பார்த்தேன்..!!”

“என்ன மேட்டர்னு எனக்கு உடனே தெரிஞ்சாகனும்.. ப்ளீஸ்த்தான்..!!!”

மனைவியின் கெஞ்சலில் இருந்து தப்பமுடியாமல்.. அவ்வளவாக விருப்பம் இல்லாமலேயே, அந்த அசௌகரியமான நேரத்தில் தனது முதலாளியை கைபேசியில் அழைத்தான் சிபி..!! விஷயத்தை சுருக்கமாக சொல்லி அவரது உதவியை கேட்டான்.. அவரும் உடனடியாய் செய்வதாக உறுதியளித்தார்..!!

இரவு உணவு அருந்தி முடித்து இருவரும் படுக்கையில் வீழ்ந்த சமயத்தில்.. சிபியின் செல்ஃபோன் அதிர்வுற்று ‘க்க்க்ர்ர்ர்ர்ர்ர்… க்க்க்ர்ர்ர்ர்ர்ர்…’ என்று ஓசையெழுப்பியது..!! அறைக்குள் சிக்னல் கிடைக்காமல் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினான் சிபி.. ஐந்து நிமிடங்கள் கழித்தே அறைக்கு மீண்டும் திரும்பினான்..!! அவனுக்காக காத்திருந்த ஆதிரா இப்போது ஆர்வமாக கேட்டாள்..!!

“யாருத்தான் ஃபோன்ல..??”

“நாவரசு ஸார்தான்..!!”

“ஓ..!! என்ன சொன்னாரு..??”

“நம்ம விஷயமா போலீஸ்ட்ட ஹெல்ப் கேட்ருக்காரு.. அவங்களும் இனிஷியலா சில இன்ஃபர்மேஷன்ஸ் குடுத்திருக்காங்க..!!”

“எ..என்ன அது..??”

“அந்த மொபைல் நம்பரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி அகழியைத்தான் பாயிண்ட் பண்ணுது ஆதிரா.. பட்.. ஒருவருஷத்துக்கு முன்னாடி..!! லாஸ்ட் ஒன் இயரா அந்த மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகித்தான் இருக்குதாம்.. யாருமே யூஸ் பண்ணலைன்னு சொல்லிருக்காங்க..!!” சிபி சொல்ல, ஆதிரா திகைப்பாக புருவத்தை நெறித்தாள்.

“அ..அப்புறம்.. அப்புறம் எப்படி என் மொபைல்க்கு அந்த நம்பர்ல இருந்து கால் வருது..??”

“ம்ம்.. நாவரசு ஸார் இது பத்தி அவங்கட்ட கேட்ருக்காரு.. அவங்களும் டீடெயிலா ட்ரேஸ் பண்ணனும்னு சொல்லி, இன்னும் ரெண்டு நாள் டைம் கேட்ருக்காங்க..!!”

“ஓ..!!”

“ஸோ.. ரெண்டு நாள் வெயிட் பண்ணலாம் ஆதிரா.. என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்..!! இப்போதைக்கு இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.. சரியா..??” சிபி அவ்வாறு அமர்த்தலாக சொல்ல,

“ம்ம்.. சரித்தான்..!!” ஆதிரா திருப்தியில்லாமலே தலையசைத்தாள்.

அன்றிரவு கணவனுடன் உறவில் ஈடுபட்ட போதிலும்.. ஆதிராவால் கவனத்துடன் ஈடுபட முடியவில்லை..!! உறவு தந்த களைப்பு உடலில் நிறைந்திருந்தபோதிலும்.. உறக்கம் வராமல் நீண்ட நேரம் நெளிந்துகொண்டு கிடந்தாள்..!! ஏதேதோ குழப்ப நினைவுகள்.. என்னென்னவோ சீரற்ற சிந்தனைகள்.. அவஸ்தையாக அப்படியும் இப்படியும் புரண்டுபுரண்டு படுத்தாள்..!! ஒருமணிக்கு அப்புறம் ஒருவழியாக கண்கள் அயர்ந்தபோதுதான்.. அவளுக்கு அந்த கனவு வந்தது.. நிஜத்தில் நடப்பதுபோல் அவள் மனக்கண்ணில் அந்தக்காட்சி..!!

அடர்ந்து இருண்ட காடு அது.. அந்தி சாய்கிற சமயம் அது..!! சுற்றுச்சூழலில் எக்கச்சக்கமாய் மாலைநேரத்து பனிப்பொழிவு.. காற்றில் மிதக்கிற பனித்துகள்கள் கூட கண்களுக்கு தெளிவாக புலப்பட்டன..!!

அகன்ற அடிப்புறம் கொண்ட மரமொன்றில்.. எட்டு வயது ஆதிரா நெற்றியை சாய்த்திருந்தாள்..!! அவளது கண்கள் ஒரு சிவப்புநிற துணியால் கட்டப்பட்டிருந்தன.. அவளுடைய உதடுகள் அந்தப்பாடலை உச்சரித்தன.. அவள் உச்சரித்த அந்த வார்த்தைகள் அவளுக்கே தெளிவில்லாமல்தான் காதில்வந்து விழுந்தன..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!!”

ஆறு வயது தாமிரா பச்சரிசிப்பற்கள் பளபளக்க சிரித்தவாறே.. அக்காவின் முதுகை தொட்டுவிட்டு ஓட்டமெடுத்தாள்..!! தரையில் முளைத்திருந்த புல்வெளியில்.. தனது தளிர்ப்பாதங்களை பதித்து பதித்து.. ஸ்லோமோஷனில் தூரமாக ஓடிக்கொண்டே இருந்தாள்..!! மரத்தின் பக்கமாக திரும்பி நின்றிருந்த ஆதிராவோ.. தொலைதூரம் தங்கை செல்வதை அறியாமல்.. தொடர்ந்து பாடிக் கொண்டே இருந்தாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!! ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு.. நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!”

தலைதிருப்பிய ஆதிரா இப்போது தங்கையை தேட ஆரம்பித்தாள்..!! கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்க.. காற்றில் பறக்கிற பனித்துகள்களுக்குள்.. கைவிரல்களை அசைத்து அசைத்து தேடினாள்..!! விரித்துவைத்த கைகளுடன்.. அங்குமிங்கும் நகர்ந்து தங்கையை தேடியவாறே.. அந்தப்பாடலை விடாமல் மழலைக்குரலில் பாடினாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!!”

நீண்ட நேரமாக தாமிரா தட்டுப்படவில்லை.. அலைந்து அலைந்து ஆதிராவின் கைவிரல்கள் அயர்ச்சி கண்டதுதான் மிச்சம்..!! நேரம் ஆக ஆக.. அவளது நெஞ்சுக்குழிக்குள் பயம் கொப்பளிக்க ஆரம்பித்தது.. தங்கை என்ன ஆனாளோ என்கிற பயம்..!! கண்களை கட்டியிருந்த துணியை.. படக்கென அவிழ்த்து கையிலெடுத்தாள் ஆதிரா..!! அத்துவான காட்டுக்குள்.. ஒத்தையாய் நின்று.. சத்தம்போட்டு கத்தினாள்..!! Pundai Nakkum Tamil Sex Stories

“தாமிராஆஆஆஆ..!!!!!”

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000