கண்ணாமூச்சி ரே ரே – 59

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – “மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!”

“மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!”

“கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு…!!”

“இ..இருடி..!!”

“விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!”

“கொஞ்சம் இருடி..!!”

ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!! அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!!

கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!! ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!! ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!!

சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்.. அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. ‘நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்’ என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!

“ம்ம்ம்.. மேல இழுக்கா.. சீக்கிரம்..!!” தாமிரா அந்தரத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.

ஆதிராவின் முகம் திடீரென ஒரு திருட்டுச்சாயம் பூசிக்கொள்ள, தாமிராவை இறுகப் பற்றியிருந்த பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்.. தங்கையின் கையோடு அழுந்தியிருந்த அவளது ஐந்து விரல்களும், கொஞ்சம் கொஞ்சமாய் இளக்கம் கொடுத்தன..!! ஓரிரு விநாடிகள்தான்.. ஆதிராவின் மொத்த மனமாற்றமுமே ஓரிரு விநாடிகள்தான்.. காதலின் வெற்றியை பெரிதென கருதிய ஆதிரா, அதற்கென தங்கையையும் பலிகொடுக்க நினைத்துவிட்ட அந்த ஓரிரு விநாடிகள்.. இந்தக்கதைக்கு மிக மிக முக்கியமான அந்த ஓரிரு வினாடிகள்..!!

ஆனால்.. அந்த ஓரிரு வினாடிகளே தாமிராவுக்கு போதுமானதாக இருந்தது.. அக்காவின் உள்நோக்கத்தை புரிந்துகொள்வதற்கு..!! அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்துப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. ஆதிரா தன்மீது கோவத்தில் இருக்கிறாள் என்று தாமிராவுக்கு நன்றாக தெரியும்.. ஆனால், இப்படி தனது உயிரை தொலைத்தாவது அவளது காதலைப் பெற எண்ணுவாள் என்று சத்தியமாக தாமிரா நினைத்திருக்கவில்லை..!! அக்காவின் முகத்தையே ஏக்கமும், பரிதாபமுமாக பார்த்தாள்..!!

“அக்காஆஆஆஆ..!!” என்று இதயத்தை பிசைவது மாதிரியாக ஈனஸ்வரத்தில் ஓசை எழுப்பினாள்.

அவ்வளவுதான்..!! தங்கையின் பரிதாப முகத்தை பார்த்த ஆதிரா, இப்போது பட்டென சுதாரித்துக் கொண்டாள்.. இயல்பாகவே அவளுக்கு தங்கை மீதிருக்கிற அன்பு, திடீரென எழுந்த அந்த மிருக குணத்தை விரட்டியடித்திருந்தது..!! ‘ச்சே. என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டோம்..’ என்று தன்னைத்தானே கேவலமாக கடிந்துகொண்டவாறு..

“தாமிராஆஆஆ..!!!”

என்று பதிலுக்கு பாசமாக அழைத்தபடியே, தாமிராவின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொள்ள முயன்றாள்.. ஆனால்.. அது தாமதமான முயற்சியாக அமைந்துபோனது..!! ஆதிராவின் கணநேர செயல்பாடு தந்த அதிர்ச்சியில், வாழவேண்டும் என்கிற எண்ணமே தாமிராவுக்குள் இற்றுப்போயிருந்தது.. அக்கா தனது கையை மீண்டும் பற்றிக்கொள்ளும் முன்பே, இவள் அக்காவின் கையை பிடித்திருந்த பிடியை விடுவித்தாள்.. அப்படியே அந்தரத்தில் வீழ்ந்தாள்..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!” பதறிப்போன ஆதிரா பெரிதாக அலறினாள்.

கீழே வீழ்ந்த தாமிரா நீண்டதூரம் செல்லவில்லை.. மலைச்சரிவின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த அந்த மகிழம்பூ மரத்தின் மேற்பரப்பில் சென்று விழுந்தாள்.. மரத்தின் கிளைகளுக்குள் அவளது கை,கால்கள் எசகுபிசகாக சிக்கிக்கொள்ள.. அப்படியே அந்தரத்தில் அசைந்து கொண்டிருந்தாள்..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!” ஆவி துடித்து வீறிட்டாள் ஆதிரா.

“அக்காஆஆஆஆ..!!” பரிதாபக்குரல் எழுப்பினாள் தாமிரா.

“அக்காவை மன்னிச்சுடுடி.. அக்காவை மன்னிச்சுடு..!! ஏண்டி இப்படி பண்ணுன..??”

ஆதிரா பதற்றத்தில் பிதற்றிக்கொண்டே அல்லாடினாள்.. அவளது கைக்கெட்டும் தூரத்தை தாண்டிப் போயிருந்தாள் அவளது தங்கை.. ஆனால் எப்படியாவது அவளை காப்பாற்றிவிடவேண்டும் என்ற ஒரு புதுவித வேகம் ஆதிராவுக்குள் பிறந்திருந்தது..!! சுற்றி முற்றி பார்த்தாள்..!!

“இருடி வரேன்.. ஒருநிமிஷம்.. அந்த மரத்தை புடிச்சுக்க..!!”

அழுதவாறே ஆதிரா எழுந்து ஓடினாள்.. சிங்கமுக சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட அந்த மேடையின் அடிப்பாகத்தில் சுற்றப்பட்டிருந்தது ஒரு சிவப்புத்துணி.. அதை சரசரவென அவிழ்த்து எடுத்தாள்..!! மலை விளிம்பை அடைந்து.. அந்த துணியை அப்படியே சுருட்டி.. தங்கையின் பக்கமாக வீசினாள்..!!

“அந்த துணியை புடிச்சுட்டு மேல வாடி.. அக்கா டைட்டா புடிச்சுக்குறேன்..!!” கதறினாள் ஆதிரா.

“அக்காஆஆஆஆ..!!”

ஏமாற்றமும், சோகமும் நிறைந்த சப்தத்தை மட்டுமே தாமிரா எழுப்பினாள்.. ‘என்னை இந்த மாதிரி பலிகொடுக்க துணிந்து விட்டாயே அக்கா’ என்பது போல இருந்தது அந்த குரலின் தொனி.. வெறுத்துப்போன விரக்தி மனநிலையில் அவள் அப்போது இருந்தாள்..!! ஆதிரா வீசிய அந்தத்துணியை பற்றிக்கொள்ள சிறுமுயற்சி கூட எடுத்துக் கொள்ளவில்லை..!!

தங்கையின் செய்கையை பார்த்த ஆதிராவின் மனதை.. குற்ற உணர்ச்சி குத்தி குத்தி கிழித்துக் கொண்டிருந்தது..!!

“ப்ளீஸ்டி.. அந்த துணியை புடிச்சுக்கடி.. எப்படியாவது மேல வந்துருடி.. அக்காவை மன்னிச்சுடுடி தாமிரா..!!” ஆதிரா அழுது புலம்பிக்கொண்டிருக்க,

“அக்காஆஆஆஆ..!!” என்று தாமிரா பரிதாபமாக அழைத்துக்கொண்டே இருக்க,

மகிழம்பூ மரத்தின் கிளை இப்போது சரக்கென முறிந்தது.. கொத்தாக வளர்ந்திருந்த வாசனைப் பூக்களின் குவியலோடு.. குழலாற்றை நோக்கி ஆகாயத்தில் பயணம் செய்தாள் தாமிரா..!!

“தாமிராஆஆஆஆஆஆ..!!!”

உயிரே பறிபோவது போல அலறி துடித்தாள் ஆதிரா.. அந்த சிவப்பு துணி அவளது கையில் இருந்து விடுபட்டு காற்றில் பறந்தது.. அதேநேரம் அவள் ரவிக்கைக்குள் செருகி வைத்திருந்த செல்போனும் வெளியே நழுவியது..!! அந்த துணியும், செல்ஃபோனும் தாமிராவுடன் சேர்ந்து குழலாற்றுக்குள் வீழ்ந்தன..!! அங்குமிங்கும் பாறைகளில் முட்டி மோதி, செந்நிற குருதியை பீய்ச்சியடித்தவாறே.. இறுதியாக குழலாற்றில் சென்று நீரை கிழித்துக்கொண்டு வீழ்ந்தாள் தாமிரா..!! அவளைத் தொடர்ந்து சென்று வீழ்ந்தது அந்த செல்ஃபோன்..!! சிவப்புத்துணி மட்டும் காற்றில் அசைந்து அசைந்து மெல்ல மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது..!!

ஆதிராவுக்கு இதயத்துடிப்பே நின்று போனது மாதிரி இருந்தது.. சிறிது நேரம் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே தரையில் வீழ்ந்து கிடந்தாள்..!! அவளது இமைகள் விரிந்துபோய் அப்படியே உறைந்திருந்தன.. சுவாசம் விடக்கூட மறந்துபோனவளாய் அசைவில்லாமல் கிடந்தாள்..!! தனது சுயநலத்தால் தங்கையை பலி கொடுத்துவிட்டோமே என்கிற குற்றஉணர்வு.. அவளது இதயத்தை சல்லடையாக கிழித்துக் கொண்டிருந்தது..!!

ஒருசில வினாடிகள்.. பிறகு என்ன நினைத்தாளோ.. பட்டென எழுந்து நின்றாள்..!! நடந்துமுடிந்த அமளிதுமளியில் அவளது கூந்தல் பிரிந்து முகமெல்லாம் வழிந்துகொண்டிருந்தது..!! தங்கையின் சாவுக்கு காரணமான தானும் இனிமேல் உயிருடன் இருக்கக்கூடாது என்பதுதான் அவளது எண்ணமாக இருக்கவேண்டும்..!! அதே மலைச்சரிவில் வீழ்ந்து உயிர்துறக்க முடிவு செய்தாள்..!! அந்த அதலபாதாள பள்ளத்தாக்கை ஒருமுறை வெறித்து பார்த்தாள்..!!

“ஆதிராம்மா.. வேணாம்.. நில்லு..!!”

சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்..!! கையிலிருந்த வெள்ளைநொச்சி இலைகளை தூக்கி எறிந்துவிட்டு.. இவளை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் வனக்கொடி..!! முகம் மறைக்கிற கூந்தல் கற்றைகளின் இடைவெளியில் அவளையே உற்றுப் பார்த்தாள் ஆதிரா.. ‘உஸ்.. உஸ்..’ என மூச்சிரைத்தாள்..!!

அந்த பள்ளத்தாக்குக்குள் விழுந்துவிடமேண்டும் என்று ஆதிரா பாய.. அதே நேரத்தில் வனக்கொடி ஓடிவந்து இவள் மீது பாய்ந்து, இறுகப்பற்றிக்கொள்ள.. இருவரும் பாதுகாப்பான ஒரு சமவெளியில் உருண்டார்கள்..!! தங்கை இறந்த அன்றே சாக இருந்த ஆதிராவை.. காப்பாற்றி உயிர்கொடுத்தது வனக்கொடிதான்..!!

நடந்து முடிந்ததெல்லாம் முழுவதுமாக நினைவுக்கு வர.. ஆதிரா அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.. லேப்டாப் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ‘தங்கையின் மறைவுக்கு யார் காரணம் யார் காரணம்’ என்று தேடி களைத்துப்போனவள்.. இப்போது தான்தான் காரணம் என்கிற உண்மை உறைக்கவும்.. அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்திருந்தாள்..!!

அகழி வந்ததிலிருந்து அவளுக்கு வந்த அந்த இரண்டு கனவுகளுக்கான அர்த்தம் இப்போது அவளுக்கு நன்றாக புரிந்தது..!! தனது ஆழ்மனதுக்குள் இருந்த உண்மையின் வெளிப்பாடாக அந்த கனவுகள் அவளுக்கு தோன்றிற்று..!! கனவில் தங்கைக்கு நெருக்கமாக இருந்த அந்த உருவத்தின் முகம் மெல்ல மெல்ல இப்போது அவளுக்கு தெளிவானது.. அது சிபியின் முகம்தான்..!! தாமி​ராவை அணைத்துக்கொண்டு சிரித்தது கனவில் வந்த சிபியின் உருவம்..!! தாமிரா மட்டும், ‘அக்காஆஆஆஆ..!! அக்காஆஆஆஆ..!!’ என்று ஈனஸ்வரத்தில் அழைத்துக் கொண்டிருந்தாள்.. அன்று அந்தரத்தில் தொங்கியவாறு அழைத்ததைப் போலவே..!!

தாமிரா இறந்துபோனதன் பிறகு நடந்த சில நிகழ்வுகளும்.. இப்போது சரசரவென ஆதிராவின் மனதுக்குள் ஃப்ளாஷ் அடித்தன..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! அக்காகிட்ட வாடி.. ப்ளீஸ்டி..!!” விட்டத்தை நோக்கி கையை நீட்டியவாறு பிதற்றினாள் மனநிலை பிறழ்ந்த ஆதிரா.

“ஐயோ கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற..?? ஒரு பொண்ணை பறிச்சுக்கிட்ட.. இன்னொரு பொண்ணை இப்படி ஆக்கிட்டியே..??” தணிகைநம்பி அழுது புலம்பினார்.

“குறிஞ்சி மேல பழியை போட்றலாம் ஐயா.. நானே கண்ணால பாத்ததா சாட்சி சொல்றேன்..!! நம்ம புள்ள பாவம்.. ஏதோ தெரியாம பண்ணிருச்சு.. ஒரு புள்ளையைத்தான் பறிகுடுத்துட்டோம், இன்னொரு புள்ளையையாவது காப்பாத்திக்குவோம்..!! இந்த விஷயம் என்னை விட்டு வெளில போகாது.. நான் பெத்த புள்ளைகளுக்கு கூட சொல்ல மாட்டேன்.. இது சத்தியம்..!!” உறுதியாக சொன்னாள் வனக்கொடி.

“ஆதிராவை இங்க வச்சிருக்குறது நல்லது இல்ல தணிகா.. ஆளாளுக்கு ஏதாவது கேள்வி கேட்பாங்க..!! பேசாம மைசூர் கூட்டிட்டு போய்டு..!!” அறிவுரை சொன்னார் திரவியம்.

மைசூரில் ஒரு மனநல மருத்துவமனையில்.. தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தது அந்த குழந்தை..!!

“என் பொம்மை.. என் பொம்மை..!!” என்று வீறிட்டது.

“குடுத்துடும்மா.. பாவம்ல அந்த கொழந்தை..!!” கரடி பொம்மையை பிடுங்கி வைத்திருந்த ஆதிராவை கெஞ்சினாள் பூவள்ளி.

“ம்ஹூம்.. குடுக்க மாட்டேன் போ..!! இது என் தாமிரா.. கீழ விழப்போனாளா.. நான் ஓடிப்போய் புடிச்சுக்கிட்டேன்.. என் தங்கச்சியை நான் காப்பாத்திட்டேன்மா..!! என் தங்கச்சியை யார்கிட்டயும் குடுக்கமாட்டேன் போ..!!” பச்சைஉடை அணிந்திருந்த ஆதிரா குழந்தையை போல பேசினாள்.

“இப்போ நல்ல இம்ப்ரூவ்மன்ட் தெரியுது.. சீக்கிரமே முழுசா குணமாகிடுவாங்க.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!! நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.. போதும்..!!” மனநல மருத்துவர் ஒருவர் ஆதிராவை வீட்டுக்கு அனுப்பிவைக்கயில் சொன்னது.

“எதுக்கு உன்கிட்ட முகம் குடுத்து பேசணும்.. என் தாமிரா சாகுறதுக்கு காரணமா இருந்தவ நீ.. உன் மூஞ்சில முழிக்கிறதே பாவமா நெனைக்கிறேன்..!!” ஆதிராவிடம் வெறுப்பை உமிழ்ந்த சிபி, அன்றிரவே ஐந்தாவது முறையாக அவள் தற்கொலைக்கு முயற்சிக்க, அடுத்த நாள் ஹாஸ்பிட்டலில்,

“ஸாரி ஆதிரா.. இனிமே அப்படி உன்னை ஹர்ட் பண்ண மாட்டேன்.. என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்..!! இந்தமாதிரிலாம் இனிமே பண்ணாத..!!” என்று அவளது கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

“சிபியும் சம்மதம் சொல்லித்தான்மா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்.. நீ அவன்மேல வச்சிருக்குற பாசத்தை அவன் புரிஞ்சுக்கிட்டான்மா..!! நடந்ததை எல்லாம் மறந்துட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பி..!!” ஆதிராவிடம் சொன்னார் தணிகைநம்பி.

“இதுலாம் இப்போவே வேணாம் ஆதிரா.. கொஞ்ச நாள் ஆகட்டும்.. நம்ம மனசு இதுக்கு செட் ஆகட்டும்.. வெயிட் பண்ணுவோம்.. சரியா..??” முதலிரவன்று சொன்ன சிபி, உடனே முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.

“யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!” ஒருமாதம் கழித்து கன்னத்தில் குழுவிழ சொன்னான்.

“அப்போ.. இன்னொன்னு..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட, அதே நேரத்தில் ‘படீர்ர்ர்ர்’ என கார்க்கண்ணாடியில் வந்து மோதியது அந்த காகம்..!!

பழைய நினைவுகளில் மூழ்கி திளைத்தவாறு ஆதிரா அமர்ந்திருக்க.. அவளது செல்போன் இப்போது சப்தம் எழுப்பியது..!!

“க்க்க்க்கிர்ர்ர்ர்… க்க்க்க்கிர்ர்ர்ர்…!!”

ஆதிரா கவனம் சிதறி போனவளாய்.. அந்த செல்ஃபோன் மீது பார்வையை வீசினாள்..!! அழைப்பு வந்திருந்த மொபைல் நம்பரை பார்த்ததும்.. மீண்டும் ஒரு பதற்றத்துக்கு உள்ளானாள்..!! அகழி வந்ததிலிருந்து இரண்டுமுறை இவளுக்கு மர்மமான அழைப்பு வந்ததே.. அதே மொபைல் நம்பர்.. ஆதிராவின் பழைய மொபைல் நம்பர்..!! தாமிராவை காப்பாற்ற முனைகையில், அவளுடன் சேர்ந்து குழலாற்றில் வீழ்ந்ததே.. அந்த மொபைலின் நம்பர்தான்..!!

பதற்றமாக காலை பிக்கப் செய்து பேசினாள்..!!

“ஹலோ..!!”

“…………………………….” அடுத்த முனையில் ஒரு நிசப்தம்.

“தா..தாமிராஆஆஆ…!!!” தடுமாற்றமாக அழைத்தாள் ஆதிரா.

“க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்… க்க்க்க்ர்ர்ர்ர்ர்…!!!!” – அந்தப்பக்கம் இப்போது ஒரு இரைச்சல்.

“தா..தாமிரா.. அக்காவை மன்னிச்சுடுடி..!!” ஆதிரா தழதழத்த குரலில் கெஞ்சினாள்.

“…………………………….” மறுமுனையில் மீண்டும் ஒரு நிசப்தம்.

“தாமிரா.. தாமிரா..!! தாமிரா.. தாமிரா..!!”

ஆதிரா திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்க.. அடுத்த பக்கத்தில் இருந்து இப்போது அந்த வார்த்தைகள் தெளிவாக அவளது காதில் வந்து விழுந்தன..!!

“GGGGGame or SSSSShame..??”

அதைக்கேட்ட ஆதிரா அப்படியே விக்கித்துப் போனாள்.. விழிகளை விரித்து வைத்தவாறு ஒரு சில வினாடிகள் அப்படியே திகைத்துப்போய் அமர்ந்திருந்தாள்..!! இறந்துபோன தங்கையின் எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆதிராவுக்கு தெளிவாக.. அவளது கண்களிலும் முணுக்கென்று கண்ணீர் பூத்துக்கொண்டு கன்னம் நனைத்து ஓட.. திக்கித்திணறி சொன்னாள்..!! Kunju Oombum Tamil Kamakathaikal

“Game..!!!!!”

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000