கண்ணாமூச்சி ரே ரே – 58

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Latest Tamil Sex Stories – “அத்தான் என்னைத்தான்க்கா லவ் பண்றாரு..!! அன்னைக்கு அவரை கெஞ்சி.. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவச்சதே நான்தான்.. ஆனா அவர் முழுமனசா சரின்னு சொல்லல..!! இப்பவும் அவர் மனசு பூரா நான்தான் இருக்கேன்.. இந்தக் கல்யாணத்துல அவருக்கு இஷ்டம் இல்ல..!! என் மனசை மாத்திக்க சொல்லி, அவர்தான் தெனந்தெனம் என்னை கெஞ்சிக்கிட்டு இருக்காருக்கா..!!” தாமிரா சொல்லி முடிக்க

“இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. நான் நம்பமாட்டேன்..!!” ஆதிராவிடம் ஒரு பதற்றம்.

“நான் ஏன் பொய் சொல்லணும்..?? சரி.. கைலதான் ஃபோன் வச்சிருக்கல.. அப்படியே அத்தான் நம்பருக்கு அடிச்சு கேளு.. முழுமனசோடதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னிங்களான்னு கேளு.. என்ன சொல்றார்னு பார்ப்போம்..!!”

“…………………” செல்ஃபோனை உயர்த்திய ஆதிராவின் கை, டயல் செய்யாமல் அப்படியே தயங்கி நின்றது.

“ம்ம்ம்.. போடு.. பேசலாம்.. மூணு பேரும் பேசி இன்னைக்கு ஒரு முடிவு எடுத்துடலாம்..!!”

தாமிரா அவ்வாறு துரிதப்படுத்த.. ஆதிராவுக்கு இப்போது தங்கையின் வார்த்தைகளில் ஒரு நம்பிக்கை வந்திருந்தது..!! அதேநேரம்.. ‘சிறுவயது முதலே சிபியை திருமணம் செய்துகொள்ள நினைத்த தனது ஆசைக்கு ஆபத்து வந்துவிடுமோ’ என்பது மாதிரியான ஒரு பதற்றமும் அதிக அளவில் வந்திருந்தது..!! அவளுடைய உடல் மெலிதாக வெடவெடக்க.. எச்சில் கூட்டி ஒருமுறை விழுங்கிக்கொண்டாள்..!!

“என்ன யோசிக்கிற.. ஃபோன் பண்ணு..!!”

“இ..இல்ல.. நான் பண்ணல.. நீ சொல்றதை நம்புறேன்..!!”

ஆதிரா சொல்லிவிட்டு அமைதியாக தலையை குனிந்துகொண்டாள்.. அவள் மனதுக்குள் இப்போது ஒரு குற்ற உணர்வு..!! தாமிரா அக்காவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளை நம்பவைத்துவிட்ட திருப்தி ஒருபுறம் இருந்தாலும், அத்தனை நேரம் அவள் அள்ளிவீசிய வார்த்தைகள் தந்த வேதனையும் இன்னொருபுறம் அதிகமாவே இருந்தது..!! காயம்பட்டு நொந்துபோனவளாய் ஆதிராவிடம் சொன்னாள்..!!

“என்னல்லாம் சொல்லிட்டக்கா என்னை பார்த்து.. என்னைப்பத்தி எப்படிலாம் நெனச்சுட்ட..?? பசப்புறவ.. துரோகம் பண்றவன்னு..!! எப்படிக்கா அப்படிலாம் உன்னால பேச முடிஞ்சது..??”

“……………………………” ஆதிரா பதிலெதுவும் பேசவில்லை. குற்ற உணர்வில் குனிந்த தலை குனிந்ததாகவே இருந்தது.

“நீயெல்லாம் ஒரு தங்கச்சியான்னு கேட்டுட்டல..?? சின்னவயசுல இருந்து நான் உனக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன்..??”

“……………………………”

“உன் கழுத்துல போட்ருக்குறியே அந்த முத்துமாலை.. அது உன்கிட்ட எப்படி வந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா..??”

“……………………………”

“நீ கட்டியிருக்குற சேலை.. கைல வச்சிருக்குற செல்ஃபோன்.. காதுல தொங்குற ஜிமிக்கி மொதக்கொண்டு நான் உனக்கு விட்டுக் குடுத்ததுடி..!! எல்லாம்.. உன் மனசுக்கே தெரியாம உனக்கு நான் விட்டுக் குடுத்தது..!!” தாமிரா திடீரென சீற்றமாக சொல்ல,

“……………………………” ஆதிரா அவளையே மிரட்சியாக பார்த்தாள்.

தாமிராவின் முகம் இப்போது பட்டென உணர்ச்சியை மாற்றிக் கொண்டது.. ஆவேசம் கொப்பளித்த அந்த முகத்தில் இப்போது ஒரு பரிதாபம் பொங்கி வழிந்தது.. கண்ணிரண்டிலும் கண்ணீர் தளும்ப சொன்னாள்..!!

“அத்தானையும் அந்த மாதிரிதான் உனக்கே விட்டுக் குடுத்துடலாம்னு நெனைச்சேன்.. ஆனா என்னால முடியலக்கா..!! அவர் என்னை லவ் பண்றார்னு தெரியிறவரைக்கும் எனக்கும் ஒன்னும் தெரியல.. ஆனா அது தெரிஞ்சதுக்கப்புறம்.. ரொம்ப கஷ்டமா இருக்குதுக்கா..!! மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில என்னால வேஷம் போட முடியல..!! ‘என காதலை ஏத்துக்கோ’ன்னு அவர் கெஞ்சுறப்போ.. சத்தியமா என்னால முடியலக்கா..!! ‘நானும் உங்களை லவ் பண்றேன் அத்தான்’னு ஃபோன்லயே கத்தனும் போல இருக்கும்..!! இப்ப வரைக்கும் நான் அதை செய்யல.. ஏன்…?? எல்லாம் உனக்காகத்தான்..!!”

“……………………………”

“இனிமேயும் என்னால நடிக்க முடியாதுக்கா.. தெனந்தெனம் இந்த வேதனையை என்னால தாங்க முடியல..!! எனக்கு அத்தான் வேணும்க்கா.. ப்ளீஸ்..!!”

ஆதிராவை கையெடுத்து கும்பிட்டு கெஞ்சலாக சொல்லி முடித்தாள் தாமிரா..!! அதுவரை குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்திருந்த ஆதிரா.. ‘எனக்கு அத்தான் வேணும்க்கா’ என்று தாமிரா சொன்னதுமே.. வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள்..!! சிறுவயதிலிருந்தே சிபி மீது அவள் கொண்டிருந்த கண்மூடித்தனமான காதல்.. உடன்பிறந்த தங்கையையே இப்போது எதிரியாக காட்டியது..!! உடம்பை விறைப்பாகவும், முகத்தை முறைப்பாகவும் வைத்துக்கொண்டு தாமிராவிடம் சொன்னாள்..!!

“இங்க பாருடி.. நான் உன்னைப்பத்தி தப்பா பேசினதுக்கு மொதல்ல என் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன்.. என்னை மன்னிச்சிடு.. ப்ளீஸ்..!! அதுமாதிரி.. இத்தனை நாளா எனக்கு என்னன்னவோ விட்டுக்குடுத்தேன்னு சொல்றியே.. அதுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. தேங்க்யூ ஸோ மச்..!! ஆனா.. அதுக்குலாம் பரிகாரமா அத்தானை உனக்கு விட்டுக் குடுக்கனும்னு சொன்ன பாத்தியா.. அது மட்டும் என்னால முடியாது..!!”

“அத்தான் எனக்கு வேணும்னுதான் சொன்னேன்.. அதுக்காக உன்னை விட்டுக்குடுக்க சொல்லல..!!”

“அ..அப்புறம்..??”

ஆதிரா குழப்பமாக கேட்க, தாமிரா சற்றே நிதானித்தாள்..!! ஒரு சில வினாடிகளுக்கு அப்புறம்.. குரலை தாழ்த்திக்கொண்டு தடுமாற்றமாக சொன்னாள்..!!

“நா..நாம.. நாம ரெண்டு பேருமே அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஓகே வா..??” கேட்டுவிட்டு தாமிரா அக்காவை ஏறிட, அவளுக்கோ தங்கை மீது சுள்ளென்று ஒரு கோபம்.

“உனக்கென்ன பைத்தியமாடி..??” என்று எரிந்து விழுந்தாள்.

“ஆமாம் பைத்தியந்தான்..!! அத்தான் மேல எனக்கு அவ்வளவு ஆசை..!! இப்படி ஒண்ணுமே இல்லாம இருக்குறதுக்கு.. ரெண்டாவது பொண்டாட்டியா இருக்கக்கூட எனக்கு சம்மதம்..!! நீயும் அவரை ரொம்ப லவ் பண்ற.. நானும் அவரை ரொம்ப லவ் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து அவரை ரொம்ப நல்லா பாத்துக்கலாம்..!! ஒருத்தொருக்கொருத்தர் போட்டி பொறாமை இல்லாம.. அவங்கவங்க லவ்வை நல்லவிதமா ஷேர் பண்ணிக்கலாம்..!!” தாமிராவின் நியாயத்தை ஆதிராவால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

“ச்சீய்.. பேசுற பேச்சைப்பாரு.. வெக்கமா இல்ல..?? பைத்தியந்தான்டி புடிச்சிடுச்சு உனக்கு..!!”

“ஐயோ.. இது ஒன்னும் நாட்டுல நடக்காதது இல்லக்கா.. எல்லாத்துக்கும் அவங்கவங்க மனசுதான் காரணம்.. எனக்கு இது ஓகேன்னு தோணுது..!! எல்லாரோட கைல கால்ல விழுந்தாவது இதுக்கு சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற..??”

“என்னால முடியாது..!! நீ வேணா பெரிய புரட்சி பண்றவளா இருக்கலாம்.. நான் அப்படி இல்ல..!! நல்லா கேட்டுக்கா.. அவரு எனக்கு மட்டுந்தான்.. இன்னும் ரெண்டு வாரத்துல எங்களுக்கு கல்யாணம்.. அவரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு.. அவ்வளவுதான்..!! அவரும் நானும் புருஷன் பொண்டாட்டியா ஆகப்போறோம்.. அதை எவ நெனச்சாலும் தடுத்து நிறுத்தமுடியாது..!!” ஆதிராவின் சீற்றத்தில், தாமிராவும் சட்டென சூடானாள்.

“ஏன்..?? நான் நெனச்சா.. அதை தடுத்து நிறுத்த முடியும்..!! ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அடுத்த நிமிஷம் அத்தான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாரு..!! அப்பா, அம்மாவும் அதை பெருசா எதுக்கப் போறது இல்ல..!!” தாமிராவின் பதிலுக்கு, ஆதிரா சற்றும் சளைக்கவில்லை.

“அப்படி நீ செஞ்சா.. அதுக்கப்புறம் என்னை நீ பொணமாத்தான் பார்ப்ப..!!”

வெடுக்கென சொல்லிவிட்டு.. தங்கையின் பதிலுக்கு கூட காத்திராமல்.. அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினாள் ஆதிரா..!! அக்கா இத்தகைய அஸ்திரத்தை எறிவாள் என்று, தாமிரா சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. ஒரு சிலவினாடிகள் அப்படியே விக்கித்துப் போய் நின்றிருந்தாள்..!! அப்புறம் திடீரென ஏதோ தோன்றியவளாய்.. ஆதிராவின் முதுகை பார்த்து கத்தினாள்..!!

“Game or Shame..??”

தாமிராவின் வார்த்தைகள் காதில் விழுந்ததும்.. அப்படியே சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள் ஆதிரா..!! தலையை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி தங்கையை பார்த்தாள்..!! தாமிரா தனது இரண்டு கைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு நின்றிருந்தாள்.. அவளது ட்ரேட் மார்க் மேனரிசம்..!! எப்போதும் அந்த கைகளின் இடைவெளியில் தெரிகிற அவளது ஒற்றைக்கண்.. குறும்பாக ஒரு சிமிட்டு சிமிட்டும்..!! இப்போதோ.. பொலபொலவென கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது..!!

“எ..என்னடி சொல்ற..??” ஆதிரா சற்று குழப்பமாகவே கேட்டாள்.

“ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம்..!! யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு தோத்தவங்க அத்தானை விட்டுக் குடுத்துடணும்.. அத்தோட இந்த சேப்டரை க்ளோஸ் பண்ணிடனும்.. அவங்கவங்க வழில அவங்கவங்க வாழ்க்கையை பாத்துக்கிட்டு போயிட்டு இருக்கணும்..!! ஓகேவா..??”

“லூசா உனக்கு..?? கேம் ஆடி டிஸைட் பண்ற மேட்டராடி இது..?? எதுலதான் வெளையாடுறதுன்னு உனக்கு வெவஸ்தை இல்ல..??”

“இது வெளையாட்டு இல்லக்கா.. ஐ’ம் டாம் சீரியஸ்..!! நீ ஜெயிச்சிட்டா.. கடைசி வரைக்கும் என் காதலை பத்தி அத்தான்ட்ட நான் வாயே தெறக்க மாட்டேன்.. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழலாம்..!! சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா.. அத்தானை எனக்கு விட்டுக் குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கணும்.. அவ்வளவுதான்..!! சொல்லு.. Game or Shame..??”

தங்கையின் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தன்மை.. ஆதிராவையும் சற்று நிதானிக்க வைத்தது.. அமைதியாக ஒருகணம் யோசித்தாள்..!! ‘எப்போதும் எனக்கு விட்டுக் கொடுப்பதற்காகவே இந்த மாதிரி விளையாட்டு வைப்பதாக இவள் சொல்கிறாளே.. இதுவும் அதுபோலொரு விளையாட்டாக இருக்குமோ..?? என்னுடைய மனது நோகாமலே சிபியை எனக்கு விட்டுக் கொடுப்பதற்காக இப்படி ஒரு ஆட்டத்தை முன்வைக்கிறாளோ..?? ஆட்டத்தில் கலந்துகொண்டால், இந்த பிரச்சினைக்கு எளிதாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ..??’ என்பது மாதிரியாக ஒரு எண்ணம் ஆதிராவின் மனதுக்குள் ஓடவும்.. சிறிது தடுமாற்றத்துடனே சொன்னாள்..!!

“Game..!!!!”

“குட்..!!” கண்களில் கண்ணீருடன், உதட்டில் ஒரு புன்னகையையும் சிந்தினாள் தாமிரா.

“என்ன கேம்..??”

ஆதிரா கேட்கவும், தாமிரா இப்போது அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.. ஒரு சில வினாடிகள்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய், அக்காவிடம் தெளிவான குரலில் சொன்னாள்..!!

“அதோ.. அந்த பூவை யாரு மொதல்ல போய் பறிக்கிறாங்களோ.. அவங்கதான் வின்னர்..!!”

தாமிரா கைநீட்டிய திசையில் ஆதிரா பார்வையை வீசினாள்..!! சிங்கமுக சிலை வடிக்கப்பட்டிருந்த மலைமுகட்டில்.. வழுக்குப்பாறைகள் நிறைந்த ஒரு பிரதேசத்தில்.. ஒரு பாறை இடுக்குக்குள் இருந்து ஒற்றையாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது அந்த மலர்.. செக்கச்செவேல் என்று சிவந்துபோய், வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு அரியவகை மலர்..!! அணிலால் தட்டிவிடப்பட்ட சிவப்பு மை, கண்ணாமூச்சி ரே ரே புத்தகத்தில் ஒரு ஓவியம் தீட்டியதே.. அதே மலர்..!!

போட்டி என்னவென்று தெரிந்ததும் ஆதிரா சற்று மிரண்டுதான் போனாள்.. அந்த மலரை பறிப்பது அவ்வளவு கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே மிக ஆபத்தான காரியம் என்றும் அவளுக்கு தெளிவாக உறைத்தது..!!

“ஏய்.. என்ன வெளையாடுறியா..?? அதுலாம் ரொம்ப கஷ்டம்டி..!!” என்று மறுத்து பார்த்தாள்.

“கேம்னா கேம்தான்..!! லைஃப்ல கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது..!! அத்தான் வேணும்னா.. அந்த பூவை பறிக்கிறதை தவிர உனக்கு வேற வழியில்ல..!!”

“ஏய்..!!”

“ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ.. கோ..!!”

தாமிரா தானாக சொல்லிவிட்டு, அந்த மலரை பறிக்கிற முனைப்புடன் மலையை நோக்கி ஓடினாள்.. ஓரிரு வினாடிகளுக்கு அப்புறமே ஆதிரா சுதாரித்துக் கொண்டாள்.. கையிலிருந்த செல்ஃபோனை ரவிக்கைக்குள் திணித்துவிட்டு, தானும் தங்கையின் பின்னால் ஓடினாள்..!!

சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கென ஜாலியாக விளையாடிய ஒரு விளையாட்டை.. இப்போது வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற ஒரு பெரிய விஷயத்துக்காக, அக்காவும் தங்கையும் ஆடத் துணிந்திருந்தார்கள்..!! இருவரும் பரபரவென அந்த மலையில் ஏறினார்கள்..!! பாறைகளில் தங்கள் கைவிரல்களை அழுந்தப் பதித்து.. உடலை எக்கி எக்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள்..!!

இருவரிலும் தாமிராதான் மிக வேகமாக இருந்தாள்.. அவளது வேகத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை..!! தங்கையின் வேகத்தை பார்த்து ஆதிரா மிரண்டுபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. அவளது காலடியை தாண்டி இவளால் மேலே முன்னேற முடியவில்லை.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளி.. இந்த வேகத்தில் சென்றால், சீக்கிரமே அந்த மலரை தாமிரா கைப்பற்றிவிடுவாள் என்று தோன்றியது..!! தாமிரா விட்டுக்கொடுப்பதைத்தான் இத்தனை நாளாய் ஆதிரா பார்த்திருக்கிறாள்.. முதன்முறையாக தனக்கு சரிக்கு சரி போட்டியிடுவதை, அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அக்காவும், தங்கையும் இப்போது தளப்பரப்பில் இருந்து பதினைந்து, இருபது அடி உயரத்திற்கு சென்றிருந்தனர்.. அந்த மலர் நீண்டிருந்த பாறையிடுக்கின் வெகு அருகே நகர்ந்திருந்தனர்..!! தாமிராதான் அந்த மலருக்கு மிக நெருக்கமாக இருந்தாள்.. அவளது பாதத்துக்கு நெருக்கமாக ஆதிரா..!!

தாமிரா கையை நீட்டி அந்த மலரை பறிக்க முனைகையில்தான் அது நடந்தது.. பாசி படர்ந்திருந்த ஒரு பாறைப்பரப்பில் தாமிராவின் வலதுகால் அழுத்தமாக அமர, அப்படியே விழுக்கென்று வழுக்கிக்கொண்டது..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

வழுக்கிய வேகத்தில் அவளது கைகள் பிடிமானத்தை இழந்துபோக.. சர்ரென கீழே சரிந்தாள் தாமிரா..!! தன்னை பின்தொடர்ந்து மேல்வந்துகொண்டிருந்த அக்காவின் மீது சென்று தொம்மென மோதினாள்..!! தங்கை வந்து இடித்ததில் ஆதிராவும் நிலைகுலைந்தாள்.. பாறையை பற்றியிருந்த அவளது பிடியும் விட்டுப்போக, தாமிராவுடன் சேர்ந்து தானும் கீழே சரிந்தாள்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

இருவரும் அந்த இருபது அடி உயர சரிவில் இருந்து கடகடவென கீழே உருண்டார்கள்..!! அவர்களது முகம், கை, கால் எல்லாம் கரடுமுரடான பாறையில் உராய்ந்து சிராய்த்துக்கொள்ள.. சரசரவென உருண்டு உருண்டு தளப்பரப்பிற்கு வந்தார்கள்..!! தளப்பரப்பின் அந்தப்பக்கம் ஆயிரத்து ஐநூறு அடி உயர சரேல் பள்ளத்தாக்கு.. பள்ளத்தாக்கின் அடியில் குழலாறு..!! யாரும் கவனமில்லாமல் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்டிருந்த.. இரும்புக்குழாய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தடுப்புச்சுவர்..!! உருண்டவேகத்தில் அந்த தடுப்புச்சுவரை சென்று டமாரென்று மோதினார்கள் இருவரும்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

இற்றுப்போன ஒரு இரும்புக்குழாய் படாரென்று உடைந்துகொள்ள.. அந்த இடைவெளியின் வழியே பள்ளத்தாக்குக்குள் சரிந்தாள் தாமிரா.. அவளை பின்தொடர்ந்து வந்த ஆதிராவின் கைக்குள் வலுவான ஒரு பிடிமானம் சிக்கிக்கொள்ள, இன்னொரு கையால் தங்கையின் கையை எட்டி பிடித்தாள்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

ஆதிரா இப்போது தளப்பரப்பில் ஓரளவுக்கு வசதியாக கிடந்தாள்.. அவளது ஒருகை தடியான ஒரு இரும்புக்குழாயை இறுகப் பற்றியிருந்தது.. இன்னொரு கை தாமிராவின் இடதுகையை இழுத்து பிடித்திருந்தது..!! தாமிரா மட்டும் ஆயிரத்து ஐநூறு அடி மலைச்சரிவில் அப்படியும் இப்படியுமாக அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.. அக்கா தனது கையை பற்றியிருக்க, இவளும் அவளது கையை அழுந்தப் பற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தாள்.!!

“அக்காஆஆ.. அக்காஆஆ..!!!!” பயத்தில் மிரண்டுபோய் அலறினாள்.

“தாமிராஆஆஆ..!!!” தங்கையின் எடை தந்த வேதனையுடன் பற்களை கடித்து கத்தினாள் ஆதிரா. Periya Sunni Oombum Latest Tamil Sex Stories

– தொடரும்

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.