நெஞ்சோடு கலந்திடு – 36

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kama Stories – “ஆமாம் அசோக்.. என்னதான் இருந்தாலும் நீ திவ்யாவை கொரங்குன்னு சொல்லிருக்க கூடாது.. அக்கா இதை வன்மையா கண்டிக்கிறேன்..!!” சித்ரா ஏதோ நாட்டாமை மாதிரி சொன்னாள். உடனே அசோக்,

“அக்கா.. இது நல்லா இல்ல..!! எனக்கு அந்த வார்த்தையை கத்துக்கொடுத்ததே நீதான்..!! நானாவது இன்னைக்கு ஒருநாள்தான் அவளை அப்படி சொன்னேன்.. நீ இதுவரை ஒரு ஆயிரம் தடவையாவது அவளை கொரங்கு கொரங்குன்னு சொல்லிருப்ப.. ஞாபகம் வச்சுக்கோ..!!” என்று அக்காவை மாட்டிவிட்டான்.

“சரி சரி.. விடு.. இப்போ எதுக்கு அதெல்லாம்..? ஸாரி திவ்யா..!!” சித்ரா அசட்டு சிரிப்புடன் சமாளிக்க முயன்றாள். திவ்யாவோ அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்.

“ப்ச்.. அண்ணி.. நீங்க எதுக்கு அண்ணி ஸாரி கேக்குறீங்க..? நீங்க என் அண்ணி.. நீங்க என்னவேணா என்னை சொல்லலாம்.. உங்களுக்கு அந்த உரிமை இருக்கு..!! இவன் எப்படி சொல்லலாம்..? இவன் என்ன என்னை கட்டிக்கப் போறவனா..? ரொம்ப உரிமையா பட்டப்பேர் வச்சு என்னை கூப்பிடுறான்..?? கேளுங்க அண்ணி..!!”

“ம்ம்.. பாயின்ட்..!! பதில் சொல்லு தம்பி..!!” சித்ரா முகமெல்லாம் மீண்டும் பிரகாசமாக கேட்டாள்.

“நான் ஒருகாலத்துல அவளுக்கு ஃப்ரண்டா இருந்தவன்னு சொல்லுக்கா..!!” அசோக் சலிப்பாய் சொன்னான். உடனே திவ்யா,

“ப்ச்.. இந்த ஒருகாலத்துல ஃப்ரண்டா இருந்த கதைலாம் இப்போ வேணாம்..!! இவனைலாம் என் ஃப்ரண்டா என்னால ஏத்துக்க முடியாது.. வேணும்னா என் பாய்ஃப்ரண்டா இருந்துட்டு போகட்டும்..!!! ஓகேவான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி..!! ஆனா அதுக்கும் ஒரு கண்டிஷன்.. இந்த ஆன்சைட் ட்ரிப்லாம் கேன்சல் பண்ணிடனும்.. என்னை விட்டு எங்கயும் போகக் கூடாது.. என் கூடவே இருக்கணும்..!!”

திவ்யா சொல்ல சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் குபுகுபுவென ஒரு சந்தோசம் பொங்கியது. அந்த மாதிரி ஒரு உச்சபட்ச சந்தோஷத்தை அவன் அனுபவித்ததே இல்லை. திவ்யாவை காதலாக திரும்பி பார்த்தான். அதற்குள் சித்ரா,

“என்னடா தம்பி.. டீல் உனக்கு ஓகேவா..?” என்றாள். அசோக் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், முகத்தை இறுக்கமாக மாற்றிக்கொண்டு,

“ஓஹோ.. அந்த அளவுக்கு ஆகிப் போச்சா..?? ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு என் மேல லவ்வு..?? கேளுக்கா..!!” என்றான்.

“திடீர்னுலாம் இல்ல.. ஆரம்பத்துல இருந்தே இந்த லூசுப்பயலைத்தான் நான் லவ் பண்றேன்னு சொல்லுங்க அண்ணி..!!”

“அப்படின்னா அந்த திவாகர்..?”

“அவன் கெடக்குறான் டுபாகூர்..!! அவனை நேத்தோட தலை முழுகியாச்சுனு சொல்லுங்க அண்ணி..!!”

“ஓஹோ..?? ஆரம்பத்துல இருந்தே என் மேல அவ்வளவு லவ்வுன்னா.. அப்புறம் ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலையாம்..? கேளுக்கா..!!”

“அதை கேக்குறதுக்கு இவனுக்கு எந்த தகுதியும் இல்லைன்னு சொல்லுங்க அண்ணி..!! ‘யாரைடா லவ் பண்றே’ன்னு கேட்டா.. ‘அவ ஒரு லூசு’ன்னு சொல்றான் அண்ணி..!! இவன் மட்டும் சின்ன வயசுல இருந்தே இவன் லவ்வை அமுக்குனி மாதிரி அமுக்கி வச்சுப்பானாம்.. நாங்க மட்டும் உடனே வந்து சொல்லனுமா..? என்ன அநியாமா இருக்கு..?? எனக்கு என்ன இவனை மாதிரி சூது வாது தெரியுமா..?? நான் கொழந்தைப்பொண்ணு.. எது லவ் எது அட்ராக்ஷன்னு புரிஞ்சுக்க கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு..!! அதுக்கு என்ன இப்போ..??” திவ்யா சொல்லிவிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள, அவளுடைய கன்னத்தை பிடித்தவாறு சித்ரா சொன்னாள்.

“ஆமாண்டா அசோக்.. பாவம்டா இவ.. கொழந்தைப்பொண்ணு.. ஏத்துக்கோடா இவளை..!!”

“இல்லைக்கா.. இன்னும் எனக்கு நெறைய கொழப்பமா இருக்கு.. அதுலாம் கிளியர் ஆகணும்..!!”

“இன்னும் என்னடா கொழப்பம் உனக்கு..??” சித்ரா கேட்க, அதற்குள் திவ்யா பொறுமை இழந்தவளாய்..

“ப்ச்.. என்ன அண்ணி.. இன்னும் இவன்கிட்ட கெஞ்சிக்கிட்டு..?? எதுக்கு வளவளன்னு இழுக்குறான் இப்போ..?? நான் இவனை லவ் பண்றேன்.. வாழ்ந்தா இவன்கூடாதான்னு முடிவு பண்ணிட்டேன்.. இவனை விட்டு என்னால ஒருநாள் கூட பிரிஞ்சி இருக்க முடியாது..!! ஆன்சைட் ட்ரிப்பை கேன்சல் பண்றானா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி..” என்றாள்.

“அவ்வளவு ஈஸியாலாம் அதை கேன்சல் பண்ண முடியாது.. சொல்லுக்கா..!!” என்றான் அசோக்.

“ஏனாம்..?”

“நான் வாக்கு கொடுத்துட்டேன்..”

“வாக்கு கொடுத்துட்டானா..? நாக்கை கட் பண்ணிடுவேன்னு சொல்லுங்க அண்ணி..!! இவன் எப்படி ஜெர்மனி போறான்னு நான் பாக்குறேன்.. ஃப்ளைட்டுக்கு பாம் வச்சுடுவேன்..!!”

“ஐயயையோ.. ஏன் இப்போ சண்டை போட்டுக்குறீங்க..?” என்று சித்ரா புலம்பியதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. நேரடியாகவே இருவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

“ஏய்.. என்னடி நீ.. ரொம்ப பேசுற..?”

“நீ மட்டும் என்ன கொஞ்சமாவா பேசுற..? ஒளறுவாயன் ஓல்ட்மங்க் குடிச்ச மாதிரி ஓவராத்தான் பேசிட்டு இருக்குற..!!”

“யாருடி.. நான் ஓவரா பேசுறனா.. நான் ஓவரா பேசுறனா..?” அசோக் எகிற,

“அப்புறம் யாரு.. நானா..? போகாதன்னு சொன்னா.. பொத்திக்கிட்டு இருக்க மாட்டியா..?” திவ்யாவும் சீறினாள்.

“போடீ..!! நான் ஆன்சைட் போகத்தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..”

“வேணாம் அசோக்..”

“என்னடி பண்ணுவ..?”

“என்ன பண்ணுவனா.. என்ன பண்ணுவனா..”

கடுப்பான திவ்யா டீப்பாய் மேலிருந்த டைரியை எடுத்து அசோக்கின் தலையிலேயே ‘மடார்.. மடார்..’ என்று போட ஆரம்பித்தாள். அசோக் திணறிப்போனான். ‘ஏய்.. அடிக்காதடி அடிக்காதடி..’ என்று அவளை சமாளிக்க முயன்றான். ‘அப்போ போகமாட்டேன்னு சொல்லு.. போகமாட்டேன்னு சொல்லு..’ என்று அடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தாள். ‘சரிடி.. போகலை.. போகலை.. போதுமா..?’ என்றவாறு அசோக் திவ்யாவின் கையிலிருந்த டைரியை படக்கென்று பறித்தான்.

அவ்வளவுதான்..!! குனிந்திருந்த திவ்யா தடுமாறிப் போனாள். அப்படியே அசோக்கின் மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் அசையக் கூட மனமின்றி, அசோக்கின் முகத்தையே ஆசையாக பார்த்தபடி அப்படியே கிடந்தாள். அசோக்கும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கும் விலகிக்கொள்ள தோன்றவில்லை. திவ்யாவை அணைத்துக்கொண்டு சலனமில்லாமல் கிடந்தான். பார்த்துக்கொண்டிருந்த சித்ராவும், கார்த்திக்கும்தான் பதறிப் போனார்கள்.

“ஏய்.. எந்திரிங்கப்பா.. நாங்கல்லாம் இருக்குறோம்..”

என்றவாறு பாய்ந்து சென்று அவர்களை பிரித்துவிட படாதபாடு பட்டார்கள்.

அத்தியாயம் 35

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து..

அசோக் அந்த மொட்டை மாடியில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு நின்று கொண்டிருந்தான். திவ்யாவுக்காக காத்திருந்தான். ஈரப்பதமான தென்றல் காற்று ஜிலுஜிலுவென வீசி, அசோக்கின் கேசத்தை கலைத்துவிட முயற்சி செய்தது. அது மதியம் இரண்டு மணிதான். ஆனால் மாலை ஆறு மணியோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு சூரிய வெளிச்சம் இன்றி வானம் மந்தமாக காட்சியளித்தது. நீலவானம் எங்கும் இப்போது திரள்திரளாய் அடர்கருப்பு மேகங்கள். எந்த நேரமும் வானம் பொத்துக்கொண்டு மழையை ஊற்றிவிடும் என்று அசோக்கிற்கு தோன்றியது.

திவ்யா படிக்கட்டில் இருந்து மொட்டை மாடியில் பிரவேசித்தாள். ஒருமாதிரி அப்படியும் இப்படியும் திரும்பி திரும்பி, திருட்டுப் பார்வை பார்த்தபடியே வந்தாள். அசோக் தனது பின்புறத்தை காட்டியவாறு கைகட்டி நின்றிருந்தான். அசோக்கை நெருங்கிய திவ்யா, அவனது புட்டத்தில் ஒரு தட்டு தட்டினாள். உடனே அசோக் திரும்பினான். திவ்யாவை பார்த்து அழகாக புன்னகைத்தான். திவ்யா எந்த உணர்ச்சியும் காட்டாமல்,

“ம்ம்.. இந்தா..”

என்று தன் வலது கையை அவன் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கையில் நீளமாய் ஒரு சிகரெட்டும், ஒரு மேட்ச்பாக்சும் இருந்தன. அதைப் பார்த்த அசோக் இப்போது குழப்பமாய் திவ்யாவை ஏறிட்டான். ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்தவன் மாதிரி, முகத்தை சுளித்தவாறு கேட்டான்.

“என்னது இது..??” அவன் அவ்வாறு கேட்க, உடனே திவ்யா எரிச்சலானாள்.

“ப்ச்.. அப்டியே போட்டேன்னா.. இது என்னன்னு உனக்கு தெரியாதா..?”

“என்னன்னு தெரியுதுடி.. இதை எதுக்கு கைல வச்சு சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேட்டேன்..?”

“ம்ம்.. மொட்டை மாடிக்கு போய் ரெண்டு இழுப்பு இழுத்து பாக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்..!! உதை வாங்குவ.. உனக்குத்தாண்டா எடுத்து வந்தேன்.. லூசு..!!”

“எனக்கா..?? நான் உன்கிட்ட தம்மு வேணும்னு கேட்டனாக்கும்..??”

“அப்புறம் எதுக்கு மொட்டை மாடிக்கு வர சொன்ன..?”

“ப்ச்.. மொட்டை மாடிக்கு வர சொன்னேன்.. தம்மு எடுத்துட்டு வர சொன்னனா..?”

இப்போது திவ்யா நிஜமாகவே குழம்பிப் போனாள். நெற்றியை சுருக்கி, தலையை ஒரு கையால் சொறிந்தவாறே கேட்டாள்.

“அ..அப்புறம்.. அப்போ எதுக்கு சிக்னல் கொடுத்த..?”

“எப்போ..?”

“ப்ச்.. அப்போடா..!! எல்லாரும் உக்காந்து சாப்பிட்டுட்டு இருக்குறப்போ.. யாருக்கும் தெரியாம.. எனக்கு மட்டும் நைஸா சிக்னல் குடுத்தியே.. உதட்டுல வெரலை வச்சு இப்படி இப்படி பண்ணுனியே..?”

“அடி லூசு.. அது சிகரெட்டுக்கு கொடுத்த சிக்னல் இல்ல..!!”

“அப்புறம்..??”

“இதுக்கு கொடுத்த சிக்னல்..!!”

அசோக் உதட்டை பிதுக்கி ‘முத்தத்துக்காக கொடுத்த சிக்னல்’ என்று திவ்யாவுக்கு உணர்த்தினான். உடனே திவ்யாவின் முகம் குப்பென வெட்கத்தில் சிவந்து போனது. அவளுடய உடலில் ஜிவ்வென்று ஒரு உணர்வு ஓடி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடய உதடுகள் படபடத்தன. கைவிரல்கள் காற்றில் டைப் அடித்தன. அவளுடைய செழித்த மார்புகள் ரெண்டும் ‘குபுக் குபுக்’கென ஏறி இறங்கின. அசோக்கின் முகத்தை ஏறிட வெட்கப்பட்டுக்கொண்டு, வேறெங்கோ பார்வையை திருப்பியவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.

“ச்சீய்.. போடா.. அதெல்லாம் ஒன்னும் கிடையாது..!!”

“ப்ளீஸ்டி திவ்யாக்குட்டி.. ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல..? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! தம் எடுத்துட்டு வந்திருக்கேன்.. அடி..!! கீழ போகலாம்…!! இப்போல்லாம் நாம தனியா எங்க போனாலும்.. ரெண்டும் குசுகுசுன்னு ஏதோ பேசிக்கிட்டு கிண்டல் அடிக்குதுங்க..!!”

“எனக்கு தம்முலாம் வேணாம்.. கிஸ்தான் வேணும்..!!”

“இப்போதைக்கு தம் மட்டுந்தான்.. கிஸ்லாம் கிடையாது..!!”

“ம்ம்ம்.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..?”

“என்ன..?”

“நான் தம்மை விட்டு ரெண்டு நாள் ஆகுது..!!” அசோக் சற்றே பெருமையாக சொல்ல,

“என்னடா சொல்ற..?” திவ்யா நம்பமுடியாமல் கேட்டாள்.

“ஆமாம் திவ்யா.. தம்மு, தண்ணி.. எல்லாம் விட்டாச்சு..!! நேத்து உக்காந்து உன்னை நெனச்சு ஒரு கவிதை கூட எழுதிட்டேன்..!! தெரியுமா..??”

“ஹஹாஹஹாஹஹா…!! கவிதையா..?? நீயா..??”

“ஏய்.. இங்க பாரு.. கவிதையை கேக்காமலே இப்படிலாம் நக்கலா சிரிக்கப்படாது..!! கவிதையை சொல்றேன்.. கேட்டுட்டு அப்புறம் சொல்லு.. நல்லாருக்கா இல்லையான்னு..!!”

“ஹஹாஹஹாஹஹா…!! சரி சரி சொல்லு.. சொல்லித்தொலை..!!”

உடனே அசோக் தான் நேற்று எழுதிய, தனது முதல் கவிதை சொல்ல தயாரானான். தொண்டையை செருமிகொண்டான். பத்தாயிரம் பேர் கூடியிருக்கும் மேடையில் கவிதை வாசிப்பவன் போல பாவனை செய்து கொண்டு.. நிறுத்தி நிதானமாக.. ஏற்ற இறக்கத்துடன் சொன்னான்..!!

“கண்கள் எனது.. கட்டில் எனது.. கனவுகளுக்கு மட்டும் நீயே கட்டளையிடுகிறாய்..!!

உள்ளம் எனது.. உடலும் எனது.. உணர்வுகளுக்கு மட்டும் நீயே உத்தரவிடுகிறாய்..!!”

சொல்லி முடித்தவன், காலரை தூக்கி விட்டவாறு பெருமையாக திவ்யாவிடம் கேட்டான்.

“எப்படி இருக்கு..??”

“ம்ம்ம்.. மின்னலே படப்பாட்டை உல்ட்டா பண்ணின மாதிரி இருக்கு.. இருந்தாலும் பரவால..!!”

“கொழுப்புடி உனக்கு..!! உன் மூஞ்சிக்கு உல்ட்டா பண்ணுன கவிதையே ரொம்ப ஜாஸ்தி..!! உனக்காக இதெல்லாம் பண்றேன் பாரு.. உனக்கு நக்கலாத்தான் இருக்கும்..!!”

“ஹாஹா.. சரிசரி.. பண்ணு பண்ணு.. நான் நக்கலடிக்கலை..!!”

திவ்யா சிரித்தவாறே சொல்ல, அசோக் இப்போது கிண்டலான குரலில் சொன்னான்.

“ம்ம்ம்.. கவிதை கூட ஈசியா வந்துடுச்சு திவ்யா..!! இந்த சைட் அடிக்கிறதை விடுறதுதான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஏதாவது கலரா க்ராஸ் ஆச்சுன்னா.. கண்ணு என் கண்ட்ரோல்ல இல்லாம.. பின்னாடியே போகுது.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!! என்ன பண்ணலாம் திவ்யா..?” என்று அப்பாவியாக கேட்டான்.

“ஓஹோ..?? கண்ணுமுழியை தோண்டி கைல குடுத்துடுறேன்.. அப்புறம் ஒன்னும் கஷ்டமா இருக்காது..!!”

“ஹஹாஹஹாஹஹா…!!”

“மவனே.. உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சிடு..!! எவளையாவது பார்த்தேன்னு தெரிஞ்சது.. மூக்கு பேந்துடும், பாத்துக்கோ..!!”

“ஹாஹா.. சரிசரி.. பாக்கலை..!!”

“ம்ம்ம்.. அப்போ இதை கஷ்டப்பட்டு சுட்டுட்டு வந்ததுலாம் வேஸ்ட்டா..?” திவ்யா மீண்டும் உள்ளங்கையை திறந்து காட்ட,

“இன்னுமா இதை கைல வச்சுட்டு இருக்குற..?”

சொன்ன அசோக் திவ்யாவின் கையிலிருந்த சிகரெட்டையும், மேட்ச் பாக்சையும் எடுத்து தூரமாய் தூக்கி எறிந்தான். அப்புறம் திரும்பி திவ்யாவைப் பார்த்து அழகாக, ஒரு குழந்தைத்தனமான புன்னகையை வீசினான். திவ்யா இப்போது கண்ணிமைக்காமல் அசோக்கையே காதலாக பார்த்தாள். பார்க்க பார்க்க.. ‘என் மீது இவன் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறான்..? எனக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான்..?’ என்று அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளுடைய உள்ளத்துக்குள் காதல் ஊற்று குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது.

திவ்யா இப்போது அசோக்கை நெருங்கி நேருக்கு நேராக நின்றுகொண்டாள். இரண்டு கைகளாலும் அவனது இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவளுடைய உடல் அசோக்கின் உடலை உரசிக்கொண்டிருக்க, அவளது பட்டு மார்புகளோ அசோக்கின் நெஞ்சில் தாராளமாகவே தவழ்ந்து கொண்டிருந்தன. இருவரது முகங்களுக்கும் வெகு நெருக்கமாக இருக்க, ஒருவர் அடுத்தவரின் வாசனையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அசோக்கிற்கு அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அந்த நெருக்கம் தந்த சுகத்தில் திளைத்தவனாய் திவ்யாவை பார்த்தான். திவ்யா சற்றே கிறக்கமான குரலில் கேட்டாள்.

“எல்லாம் எனக்காகவாடா..??”

“ம்ம்..”

“என்னைய உனக்கு அவ்வளவு பிடிக்குமா..??”

“ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! உன் அளவுக்கு உலகத்துல வேற யாரையும் பிடிக்காது..!!”

“ம்ம்.. ஐ லவ் யூ டா..!!”

“ஐ லவ் யூ டி..!!” Mulai Tamil Kama Stories

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000