கண்ணாமூச்சி ரே ரே – 8

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Hot Stories – அதன்பிறகு ஒருவாரம் கழித்து..!! அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் துறையை சார்ந்த கட்டிடத்தில் ஒரு அறை..!! அறைக்கு வெளியே அறையப்பட்டிருந்த மரப்பலகையில்.. Dr. Sannidhanam, MBBS, MD, DM (Neurology) என்கிற எழுத்துக்கள் வெண்ணிறத்தில் பளிச்சிட்டன..!!

அறைக்கு உள்ளே கிடந்த சுழல் நாற்காலியில்.. மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சந்நிதானம் அமர்ந்திருந்தார்.. கைகளை மடித்து டேபிளில் ஊன்றி, நாற்காலியில் இருந்து முன்னுக்கு வந்திருந்தார்..!! டேபிளுக்கு இந்தப்பக்கம் கிடந்த இரண்டு நாற்காலிகளில்.. சீரியஸான முகத்துடன் சிபியும், தணிகை நம்பியும் அமர்ந்திருந்தனர்.. டாக்டர் சொல்கிற விஷயங்களை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..!!

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க மிஸ்டர் சிபி..??” டாக்டர் சிபியை கேட்டார்.

“பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன்..!!”

“எந்த காலேஜ்..??”

“ஆதித்யா இன்ஸ்டிட்யூட்..!!”

“ஹ்ம்ம்..!! த்ரீ இயர்ஸ் கோர்ஸ்ல..??”

“எஸ்..!!”

“காலேஜ்ல முதல்நாள் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..!!”

டாக்டர் அவ்வாறு கேட்கவும், சிபி சற்றே நிதானித்தான்..!! திடீரென எதற்காக இதைப்பற்றி கேட்கிறார் என்று மனதுக்குள் எழுந்த கேள்வியை அலட்சியம் செய்தவாறே.. கல்லூரியின் முதல்நாள் ஞாபங்களை மனதுக்குள் ஒருங்கிணைத்து.. ஒருசில வினாடிகளுக்கு பிறகு மெலிதான குரலில் ஆரம்பித்தான்..!!

“ஆக்சுவலா.. ஃபர்ஸ்ட் டே நான் லேட்டாத்தான் காலேஜுக்கு போனேன் டாக்டர்..!! நல்லா ஞாபகம் இருக்கு.. கே.ஆர்.எஸ்.ரோட்ல அன்னைக்கு சரியான ட்ராஃபிக் ஜாம்..!! நான் காலேஜ் போறப்போ.. இன்டக்சன் ப்ரோக்ராம் அல்ரெடி ஸ்டார்ட் ஆகியிருந்தது..!! எங்க ப்ரொஃபஸர் ஒருத்தர் தாமரைக்கண்ணன்னு.. அவர்தான் ஸ்பீச் குடுத்துட்டு இருந்தாரு.. அவர்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஹாலுக்குள்ள என்டர் ஆனேன்..!! என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பரிதியை அப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. அவன் உக்காந்திருந்த பெஞ்ச்லருந்து நகர்ந்து.. எனக்கு இடம்..” சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை இடைமறித்த டாக்டர்,

“அன்னைக்கு நீங்க என்ன கலர் ஷர்ட் போட்டிருந்திங்கன்னு ஞாபகம் இருக்கா..??” என்று திடீரென கேட்க, சிபியிடம் படக்கென ஒரு திகைப்பு.

“அ..அது.. அது… அ..அன்னைக்கு..”

என்று பதில் சொல்ல திணறினான்.. அன்று அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை நினைவுகூர்கிற முயற்சியுடன் நெற்றியை சுருக்கிக்கொண்டான்..!!

“ஹாஹா.. ரொம்ப யோசிக்க வேணாம்..!! இட்ஸ் ஓகே.. விடுங்க..!!”

புன்னகையுடன் சொன்ன டாக்டர்.. சிபியின் கண்களையே சிலவினாடிகள் கூர்மையாக பார்த்தார்..!! சிறிது இடைவெளிக்கு பிறகு மிகத்தெளிவான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

“See.. ஞாபக மறதின்றது quite natural.. எல்லாருக்குமே இருக்குறதுதான்..!! லைஃப்ல நடந்த எல்லா சின்ன சின்ன விஷயங்களும், ஒருத்தனுக்கு அப்படியே ஞாபகத்துலயே இருக்க ஆரம்பிச்சா.. அவன் சீக்கிரமே மனநிலை சரியில்லாதவனா மாறிடுவான்..!! தேவை இல்லாத விஷயங்களை அப்பப்போ மறந்துடுறது.. மனசுக்கும் மூளைக்கும் ரொம்ப ரொம்ப நல்லது..!!”

“ம்ம்..!!”

“அம்னீஷியாவும் அந்த மாதிரிதான்.. ஒருவித ஞாபக குறைபாடு..!! என்ன ஒன்னு.. நேச்சுரலா ஏற்படவேண்டிய ஞாபக மறதி.. உங்க வொய்ஃபுக்கு தலைல அடிபட்டதன் மூலமா.. ஆக்சிடண்டலா ஏற்பட்டிருக்கு.. அவ்வளவுதான்..!! இதுல பயப்படுறதுக்குலாம் எதுவும் இல்ல..!!”

“புரியுது டாக்டர்..!!”

“முக்கியமான ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.. மூளைன்றது ரொம்பவே காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம்..!! நம்மளோட அஞ்சு புலன்கள்ல இருந்து வர்ற உணர்வுகளை ஞாபகங்களா கன்வர்ட் பண்றதா ஆகட்டும்.. அதை நினைவடுக்குகள்ல ஸ்டோர் பண்றதா ஆகட்டும்.. தேவையற்ற நினைவுகளை சப்-கான்ஷியஸ் மைண்ட்க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதா ஆகட்டும்.. தேவைப்படுறப்போ மறுபடியும் அந்த நினைவுகளை ரெகவர் பண்றதா ஆகட்டும்.. It’s all a kind of magic..!! எவ்வளவோ ஆராய்ச்சிக்கு அப்புறமும்.. மூளையை யாரும் இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியலைன்னுதான் சொல்லியாகணும்..!!”

“ம்ம்..!!”

“மருந்து மாத்திரையால அம்னீஷியாவை குணப்படுத்த முடியாது.. மன அமைதிதான் அந்த ஞாபகங்களை திரும்ப கொண்டுவர முடியும்..!!”

“ம்ம்..!!”

“கடந்த ஒருவருஷமா நடந்த சம்பவங்கள்தான், உங்க வொய்ஃபோட மெமரில இருந்து அல்மோஸ்ட் சுத்தமா துடைச்சு எடுக்கப்பட்டிருக்கு.. அதுக்கு முந்தி நடந்ததெல்லாம் அவங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு..!! மறந்து போன இந்த விஷயங்கள் எல்லாம்.. கண்டிப்பா அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும்..!! அதை திரும்ப அவங்களுக்கு நினைவுபடுத்த சில தெரபிலாம் இருக்கு.. அது வொர்க்கவுட் ஆகலாம்.. ஆகாமலும் போகலாம்..!! ஆனா.. என்னைக்கேட்டா.. அவங்க இப்போ இருக்குற நிலைமைல அதெல்லாம் தேவை இல்லைன்னுதான் சொல்லுவேன்..!! இப்போதைக்கு அவங்களோட ஒரே தேவை.. கம்ப்ளீட் ரெஸ்ட்தான்.. மனசுக்கும், உடம்புக்கும்..!!”

”பு..புரியுது..!!”

“இந்த மாதிரி ஞாபகங்கள் தொலைஞ்சு போனதுல அவங்க ரொம்பவே கன்ஃப்யூஸ்டா இருக்காங்க..!! என்னன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு பயம்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு அவசரம்..!! அந்த மாதிரி அவசரத்துக்கு இடம் குடுக்காம.. அவங்க மனசு அமைதியா இருக்குறது ரொம்ப முக்கியம்..!! நீங்கதான் அதையெல்லாம் நல்லா புரிஞ்சு அவங்களை கவனிச்சிக்கணும்..!!”

“கண்டிப்பா டாக்டர்..!!”

” ஹ்ம்ம்.. உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாளாச்சுன்னு சொன்னிங்க..??”

“நாற்பது நாள் ஆகுது..!!”

“இன்னும்.. ஹனிமூன் அந்த மாதிரிலாம் எங்கயும் தனியா போகல..??”

“இ..இல்ல டாக்டர்.. எங்கயும் போகல..!!”

“Then, this is the right time..!! அவங்களை எங்கயாவது வெளியூர் கூட்டிட்டு போங்க.. மனசுக்கு ப்ளசன்ட்டா இருக்குற மாதிரி ஏதாவது ஒரு இடம்.. அமைதியா பசுமையா ஏதாவது ஒரு சூழல்.. கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்..!! அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்குற விஷயங்கள், கான்ஷியஸ் மைண்ட்க்கு திரும்பவர.. அந்த மாதிரியான மெண்டல் ரெஸ்ட் ரொம்ப ஹெல்ப் பண்ணும்..!! ஒரு பூ மலர்ற மாதிரி அது தானா இயல்பா நடக்கணும்.. ‘அதை ஞாபகப் படுத்துறேன்.. இதை ஞாபகப் படுத்துறேன்’னு நீங்களா அவங்களுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் குடுக்காதிங்க..!! புரியுதா..??”

“புரியுது டாக்டர்.. I will take care of her..!!”

“குட்..!! வேற ஏதாவது உங்களுக்கு டவுட் இருக்கா..??”

அவ்வளவுதான் தான் பேச நினைத்தது என்பதை.. அந்தக் கேள்வியின் மூலம் உணர்த்தினார் சந்நிதானம்..!! ஆதிராவை அணுகுகிற முறை பற்றி மேலும் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று.. சிபியும் தணிகை நம்பியும் அந்த அறையை விட்டு கிளம்ப.. அதன்பிறகும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர்..!!

அறையை விட்டு வெளியே வந்தவர்கள்.. இறுக்கமான முகத்துடனே இணைந்து நடைபோட்டனர்..!! ஆதிராவை அட்மிட் செய்ந்திருந்த வார்ட்.. அந்தக் கட்டிடத்திலேயே இன்னொரு மூலையில் இருந்தது..!! அந்த வார்டை அடைந்து.. அவள் அனுமதிக்கப்பட்டிருந்த தனியறைக்குள் நுழைந்தனர்..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆதிராவும்.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த பூவள்ளியும் பார்வையில் பட்டனர்..!! ஆதிராவின் தலையில் இப்போது பேண்டேஜ் இல்லை.. நெற்றியில் மட்டும் ஒரு ப்ளாஸ்திரி..!!

“டாக்டரை பாத்தாச்சு.. கெளம்பலாம்..!!”

தணிகை நம்பி சொன்னதும்.. படுக்கையில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள் பூவள்ளி..!! ஆதிராவோ, அப்பாவின் வார்த்தைகள் ஓரிரு வினாடிகள் கழித்தே காதில் விழுந்த மாதிரி.. மிக பொறுமையாக எழுந்து நின்றாள்..!! அருகில் சாய்ந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை கையில் எடுத்து.. அதன் உதவியுடன் ஒரு காலை மட்டும் இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தாள்..!!

நால்வரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.. தயாராக நின்றிருந்த டாக்ஸியில் ஏறிக் கொண்டார்கள்..!! சிபி ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.. மற்ற மூவரும் பின்சீட்டில்..!! டாக்ஸி கிளம்பியது.. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், சற்றே வேகம் எடுத்து விரைந்தது..!! சிறிது நேரம் சாலைப் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

“இப்போ எங்கப்பா போறோம்..??”

“நம்ம வீட்டுக்கு போறோம்மா..!!”

“அகழிக்கா..??” ஆதிரா அவ்வாறு கேட்கவும், மற்ற மூவரிடமும் மெலிதான ஒரு திகைப்பு.

“இ..இல்லம்மா.. இங்க.. மைசூர்ல இருக்குற வீட்டுக்கு..!!”

பூவள்ளியே சமாதானமான குரலில் மகளுக்கு பதில் சொன்னாள்..!! அடர்த்தியான மரங்களை இருபுறமும் ஏந்தியிருந்த அந்த தார்ச்சாலையில் கார் சென்றுகொண்டிருக்க.. ஆதிரா இப்போது இமைகள் இரண்டையும் மூடி பின்சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் அகழிதான் பூர்வீகம்..!! செல்வத்துக்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவரும்..!! பூவள்ளி புவனகிரியின் வழித்தோன்றல்.. தணிகை நம்பி அந்த ஊரிலேயே இன்னொரு செல்வந்தரின் ஆண்வாரிசு..!! நாற்பது வருடங்களுக்கும் மேல் அகழியிலேயே வாழ்வை கழித்திருந்தவர்கள்.. ஒருவருடம் முன்பாக மைசூருக்கு இடம்பெயருகிற மாதிரியான குடும்ப சூழல்..!! அத்தகைய சூழல் உருவாக காரணமென ஆதிராவின் தங்கை தாமிராவுக்கு நேர்ந்ததை சொல்லலாம்..!!

ஆனால்.. அந்த நிகழ்வெல்லாம் ஆதிராவுக்கு இப்போது நினைவில் இல்லை..!! வந்து ஒருவருடம் ஆகப் போகிறது.. மைசூரையே புது ஊர் போல வெறிக்க வெறிக்க பார்க்கிறாள்..!! விபத்து மயக்கத்தில் இருந்து ஆதிரா விழித்து எழுந்ததும்.. அப்பா அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து அவள் வியப்புற்றதற்கு காரணம் இருக்கிறது.. மைசூர் வந்த பிறகுதான் தணிகை நம்பி டி-ஷர்ட் எல்லாம் அணிகிறார்.. அகழியில் இருக்கையில் அந்தப்பழக்கம் அவருக்கு இல்லை..!!

கால்மணி நேர பயணத்துக்கு பிறகு.. காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சாய் குறைந்து.. இளஞ்சிவப்பு நிற வெளிப்பூச்சுடன் காணப்பட்ட அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்பாக சென்று நின்றது..!!

“வீடு வந்துடுச்சும்மா..!!”

பூவள்ளி சொன்னதை தொடர்ந்து நால்வரும் காரில் இருந்து இறங்கினார்கள்..!! தரையில் அழுத்தமாக ஊன்றிய வாக்கிங் ஸ்டிக்குடன் நின்ற ஆதிரா.. தலையை மெல்ல நிமிர்த்தி வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்..!! மைசூரை வெறித்தபோது அவள் உணர்ந்த அதே அந்நியத்தன்மையை.. ஒரு வருடமாக அவள் வாழ்ந்த இந்த வீட்டை பார்க்கையிலும் உணர்ந்தாள்..!!

“என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!”

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!! Pundaiyil Vaai Vaikkum Tamil Hot Stories

– தொடரும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000