ஜெயம் கொண்டான் – 2

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Tamil Kamaveri – அக்காவின் கோபம் ஓகே..!! இந்த விஷ்ணுப்பயலுக்கு என் மீது அப்படி என்ன கோபம் என்று, எனக்கு இன்று வரை புரியவில்லை. சின்னப்பையன்தான்.. ஜெயாவை விட ஏழு வயது இளையவன்தான்.. ஆனால் செய்கிற சேட்டைகள் பெரிய லெவலில் இருக்கும். அக்கா மீது மட்டும் ஸ்பெஷல் பாசம். எனக்கும் பாசமாக பஃபலோ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறான். எனக்கெதிராக அக்காவுடன் ரகசிய திட்டம் தீட்டும்போது அந்தப் பெயரில்தான் என்னை அழைப்பான்.

என்னை வீட்டை விட்டு கிளப்பவேண்டும்.. அதுதான் இப்போது அக்காவுக்கும், தம்பிக்கும் உள்ள உலகமகா லட்சியம். இந்தமாதிரி சூழ்நிலையில்தான் நீங்கள் மேலே படித்த சம்பவம்.

அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் எந்த சுவாரசியமும் இல்லாமலே கழிந்தன. மூன்றாம் நாள்தான் அது நடந்தது. எண்ணெய் கீழே சிந்தியிருப்பதை கவனிக்காமல், காலை வைத்து வழுக்கி.. நான் மாடிப்படிகளில் இருந்து உருண்டேன். தலையில் பலத்த அடி. ஐந்து ஆறு தையல் போட வேண்டியதாயிற்று. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தேன்.

அடிபட்ட இரண்டாம் நாள். மாலை ஐந்து மணி இருக்கும். நான் தலையில் ப்ளாஸ்டருடன், கட்டிலில் படுத்து கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயா கதவை தள்ளிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.

“வா ஜெயா…!!” என்றவாறு நான் எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

ஜெயா தயங்கியபடி உள்ளே நுழைந்தாள். அவளுடைய முகம் சற்று வாடிப் போய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாயிருக்க,

“என்ன ஜெயா…? என்ன விஷயம்…?” என்றேன் நான் சாந்தமான குரலில்.

“நான்… நான்… உங்ககிட்ட… கொஞ்சம் பே..பேசணும்…” அவள் வார்த்தைகளை பிட்டு பிட்டாக துப்பினாள்.

“ம்ம்.. பேசு…!!”

“அ..அது… அது வந்து…” அவள் சொல்ல தயங்கினாள்.

“ம்ம்ம்.. சொல்லு…”

“அது… அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை…!!”

“அப்படி என்ன பெரிய விஷயம்…? எதுவா இருந்தாலும்.. தயங்காம சொல்லு ஜெயா…”

அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு மெல்ல மெல்ல வார்த்தைகளை உதிர்த்தாள்.

“மாடிப்படில.. மாடிப்படில நான்தான் எண்ணெய்யை கொட்டி வச்சேன்.. உங்க மண்டை உடைஞ்சதுக்கு நான்தான் காரணம்..”

எனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்திருந்தது. அக்காவும் தம்பியும் இந்த வேலையை செய்திருப்பார்களோ என்று. அதனால் ஜெயா அந்த விஷயத்தை சொன்னபோது நான் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினேன். ஜெயாவை நெருங்கினேன். முகத்தை சாதரணமாகவே வைத்துக் கொண்டு கேட்டேன்.

“ஓஹோ…!! உன் வேலைதானா அது..? இங்கே பாரு…!! பாரு…!!! பாத்தியா..? மண்டை நல்லா உடைஞ்சிருக்கு.. இப்போ உனக்கு திருப்தியா..?”

நான் சொன்னதும் ஜெயாவின் அழகு முகம் பட்டென்று சுருங்கிப் போனது. கண்கள் கலங்கிவிட்டன. அவளது மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் நடுநடுங்க, சொன்னாள்.

“சாரி அத்தான்… நீங்க சும்மா வழுக்கி விழுவீங்கன்னுதான் நெனச்சேன்.. இவ்வளவு பெரிய அடி படும்னு நான் நெனைக்கவே இல்லை… நான் ஆரம்பத்துலையே இந்த ஐடியா வேணாம் வேணாம்னு சொன்னேன்.. இந்த விஷ்ணுதான் கேக்கவே இல்லை.. இப்படிலாம் பண்ணினாதான் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு போவீங்கன்னு சொன்னான்…”

“ம்ம்ம்… அக்காவும் தம்பியும் கூட்டு சதி பண்ணி.. என் மண்டையை காலி பண்ணிட்டீங்க…!!”

“தெரியாம பண்ணிட்டேன் அத்தான்..!! ப்ளீஸ்…!! என்னை மன்னிச்சுடுங்க…!! ப்ளீஸ்…!! வேணும்னா அம்மாகிட்ட என்னை போட்டுக் கொடுத்துடுங்க..”

அவள் சொல்லிவிட்டு தன் கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டாள். அந்த விரலின் நகத்தை கடித்தபடியே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய வெகுளித்தனத்தை பார்த்து சிரிப்பு வந்தது. மண்டையையும் உடைத்துவிட்டு, இப்போது மனசு கேக்காமல் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நட்பான குரலில் சொன்னேன்.

“அதெல்லாம் வேணாம்.. நீ உன் ரூமுக்கு போ..!! நான் அத்தைட்ட சொல்லலை.. போதுமா…?”

“ம்ஹூம்..!! நான் பண்ணினது தப்பு.. அதுக்கு எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க.. இல்லைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்..”

“பச்ச்…!! ஜெயா… தண்டனை கொடுக்குற அளவுக்குலாம்.. நீ பெருசா தப்பு ஒன்னும் பண்ணலை.. நீ செஞ்சதை அத்தான் மறந்துட்டேன்.. போதுமா..? கெளம்பு..”

“இல்லை.. நீங்க பொய் சொல்றீங்க.. உங்களுக்கு என் மேல பயங்கர கோவம் இருக்கும்.. ப்ளீஸ் அத்தான்.. என்னை ஒரு அறையாவது அறைஞ்சுடுங்க..”

“அதெல்லாம் ஒரு கோவமும் இல்லை ஜெயா.. எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது..”

“ம்ஹூம்… பொய்…!! ப்ளீஸ் அத்தான்.. என் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்ருங்க..”

எனக்கு இப்போது அவளுடைய பிடிவாதத்தை பார்த்து கொஞ்சம் எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.

“பச்ச்…!! அதான் சொல்றேன்ல ஜெயா…? எனக்கு உன்மேல கோவம் வராது…!!”

அவள் நான் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனது கையால் அறை வாங்கியே தீரவேண்டும் என்று குறியாக இருந்தாள். என்னுடைய வலது கையை பிடித்து, அவளாகவே தன் கன்னத்தில் அறைந்து கொள்ளப் போனாள்.

“ப்ளீஸ் அத்தான்..!! ப்ளீஸ்…!! அறைங்க அத்தான்…!! ப்ளீஸ்…!!!”

நான் மிக கஷ்டப்பட்டு என் கையை அவளிடம் இருந்து பறித்துக் கொண்டேன். “ஜெயா….!!!” என்று இரைந்தவாறு, பட்டென்று அவளது புஜத்தை பிடித்து, அவளை இழுத்து என் முன்னால், எனக்கு மிக நெருக்கமாக நிறுத்தினேன். அவள் அதிர்ந்து போனாள். தன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். மிரட்சியாக என்னை பார்த்தாள்.

அவளுடைய மார்புகள் என் நெஞ்சில் பட்டு, லேசாக உரசிக் கொண்டிருந்தன. எனது முகத்துக்கும் அவளது முகத்துக்கும் ஒரு அரை இன்ச் இடைவெளிதான் இருந்திருக்கும். எனது சூடான மூச்சுக்காற்று அவளது பளிங்கு முகத்தில் பட்டு தெரித்தது.

ஜெயா விழிகளை விரித்து, என் முகத்தை ஒரு பயப்பார்வை பார்த்தாள். நான் என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்துகொண்டு, கடுமையான குரலில் சொன்னேன்.

“சொல்றேன்ல..? எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது..!! புரிஞ்சதா…??”

அவ்வளவுதான்….!! ஜெயா பட்டென்று அமைதியானாள். என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள். என் கண்களில் அதை பார்த்தாள்… என் காதலை..!! என்னுடைய சலனமற்ற பார்வை ஒரு நொடியில் என் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்கும். அவளால் பேச முடியவில்லை. அவளுடைய செர்ரிப்பழ உதடுகள் மட்டும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. ஒரு நான்கைந்து வினாடிகள்.. நான் அவளை அந்தமாதிரி என்னோடு பிடித்து வைத்திருந்தேன். பின்பு அவளுடைய புஜத்தை பற்றியிருந்த என் கையை விலக்கினேன்.

ஜெயா உடனே ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டாள். சற்று முன் இழுத்துப் பிடித்த மூச்சை.. இப்போது தாராளமாக விட்டாள். அவளுடைய மார்புகள் அழகாக ஏறி இறங்கின. கொஞ்ச நேரம் அப்படியே நின்று என் முகத்தையே பார்த்தாள். பின்பு தயங்கி தயங்கி கதவை நோக்கி மெல்ல நகர்ந்தாள். கதவை திறந்து வெளியேறும் முன், மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்த்தாள்.

இப்போது நான் என் முக இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு, இதழ் விரித்து, அழகாக புன்னகைத்தேன். ஜெயாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். புள்ளி மான் மாதிரி துள்ளி ஓடி, படபடவென்று படியிறங்கினாள்.

நான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். அவள் ஓடுவதையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என் கண்ணில் இருந்து மறைந்ததும், முகத்தில் ஒரு புன்னகையுடன் பக்கவாட்டில் திரும்பினேன். அங்கே விஷ்ணு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று என் முகத்தில் இருந்த புன்னகையை உதறினேன். முகத்தில் ஒரு போலி கோபத்தை பூசிக்கொண்டு அவனிடம் கேட்டேன்.

“ஒய்…!! நீதான் இந்த மாதிரி டெரரான ஐடியாலாம் கொடுத்ததா..? உன்னல்லாம் குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ள போடனுண்டா..!! செய்றதையும் செஞ்சுட்டு முறைக்கிறதை பாரு..!!”

அவன் கைகளை கட்டியபடியே மெல்ல நடந்து, எனக்கு அருகில் வந்தான். அவனுடைய முகம் இறுக்கமாய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.

“நான் ஒன்னும் அக்கா மாதிரி சாரிலாம் கேக்க மாட்டேன்..!! இப்பவாவது உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.. இனிமேலும் நீங்க வீட்டை காலி பண்ணலைன்னா.. உங்களுக்கு இன்னும் என்னென்ன உடையப் போகுதோ..?”

“அடிங்ங்ங்ங்ங்….!!”

நான் குனிந்து அவனுடைய பட்டெக்ஸில் ஓங்கி ஒரு அறை வைக்க, அவனும் தன் அக்கா மாதிரியே துள்ளி குதித்து, படியிறங்கி ஓடிப் போனான்.

அப்புறம் வந்த இரண்டு வாரங்கள் சுகமாக சென்றன. ஜெயாவுக்கும் என் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று, அவள் அடிக்கடி வீசிய, ஓரக்கண் பார்வையிலேயே எனக்கு புரிந்து போனது. என்னைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாமலே ஒரு வெக்கம் அவளுக்கு வந்துவிடும். டிவியில் ரொமான்டிக்கான காதல் பாடல் வந்தால், மெல்ல தலையை என் பக்கமாக திருப்பி பார்ப்பாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது, கேசரியை அள்ளி என் தட்டில் வைத்து, ‘நானே பண்ணினது’ என்று எனக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுப்பாள். அடிக்கடி மாடிப்பக்கம் வந்து ‘கீழ காத்தே வரலை.. ஒரே புழுக்கமா இருக்கு…’ அன்று அசடு வழிவாள்.

ஒரு முறை என்னை பஃபலோ என்று சொன்ன தம்பியை தலையில் குட்டினாள். ‘அப்படிலாம் சொல்லக் கூடாது.. அத்தான்னுதான் சொல்லணும்..’ என்று விட்டு ரகசியமாக என்னை பார்த்தாள். நானும் அவளுடைய கண்களைப் பார்த்து காதலாக புன்னகைத்தேன். விஷ்ணு தலையை தடவிக்கொண்டு என்னையும், தன் அக்காவையும் மாறி மாறி முறைத்தான். ‘வர வர.. நீங்க ரெண்டு பெரும் போற போக்கே சரியில்லை…’ என்று கடுப்புடன் முணுமுணுத்தான்.

நானும், ஜெயாவும் அந்த மாதிரி கண்களினாலேயே காதல் மொழி பேசிக்கொண்டாலும், வெளிப்படையாக எங்கள் காதலை சொல்லவில்லை. அல்லது அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாம் வார இறுதியில் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அன்று எனக்கு விடுமுறை. மதியம் பதினோரு மணி இருக்கும். நான் மாடியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்தேன். ஹாலில் அத்தையும், ஜெயாவும் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். அத்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா எதிரே இருந்த டேபிள் மீது, ஒரு பிளேட்டில் காய்கறிகளை வைத்து, நறுக்கிக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் ஜெயா அவசரமாக எழுந்து கொண்டாள். ‘வாங்கத்தான்…’ என்றவாறு சேரை எனக்கு விட்டுக் கொடுத்து, பிளேட்டை எடுத்துக் கொண்டு தரையில் போய் அமர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்குவதை தொடர்ந்தாள். நான் அவ்வப்போது ஓரக்கண்ணால் என் காதல் ராணியை ரசித்துக்கொண்டு, டிவி பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தைதான் திடீரென்று ஆரம்பித்தாள்.

“ஏம்ப்பா அசோக்…!!”

“ம்ம்.. என்னத்தை..?”

“உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..”

“கேளுங்கத்தை..”

– தொடரும்

NEXT PART

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.