அசத்த போறது அசோக் – 3

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Sex Story – “ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!”

“என்ன..?” அவள் திரும்பி எரிச்சலாக கேட்டாள்.

“இப்டியே நேரா போனா.. கன்னிமரா ஹோட்டல் வருமா..?”

“ம்ம்ம்… இப்டியே நேரா போனா.. கடல்தான் வரும்..!! அதுல போய் விழுங்க..!!” அவள் கோபமாய் பொரிந்து தள்ளிவிட்டு, வண்டியில் பறக்க, நான் அதிர்ந்து போய் அப்படியே நின்றிருந்தேன்.

அப்புறம் ஒரு ஒரு வாரம் போனது. வசுவின் நடவடிக்கைகளை நான் க்ளோசாக வாட்ச் செய்தேன். இரவில் அவள் ரூம் மீது ஒரு கண் எப்போதும் வைத்திருப்பேன். நள்ளிரவில் தன் காதலனுக்கு போன் செய்து பேசுவாளோ என்று நோட்டமிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடைய அறையை அலசுவேன். ஒருவேளை அவளுடைய காதலன் அந்த கல்லூரிக்குள்ளேயே இருக்கலாமோ என்று தோன்றியது. அந்த காலேஜில் படிக்கும் ரெண்டு பசங்களை பிடித்து, அடியை போட்டு விசாரித்தேன். அவர்கள் அலறிக்கொண்டே ‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை..’ என்றார்கள். ஒன்றுமே வேலைக்காகவில்லை..!! நொந்து போனேன். அத்தை வேறு நச்சரிக்க ஆரம்பித்தாள்.

“என்னடா அசோக்கு.. வந்து ஒருவாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன பண்ணிட்டு இருக்குற நீ..? அவ எந்த நேரம் அந்த பையனோட ஓடிப்போவாளோன்னு.. எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது..!!”

“அத்தை.. எனக்கு தெரிஞ்சு உன் பொண்ணு எவனையும் லவ் பண்ணலை..!!”

“அப்புறம் ஏன் அவ அப்படி சொன்னா..?”

“உன் இம்சை தாங்காம சொல்லிருப்பா..!!”

“போடா அறிவு கெட்டவனே..!! பெத்தவளுக்கு தெரியாதா பொண்ணைப் பத்தி..? எனக்கு நல்லா தெரியும்.. அவ யாரையோ லவ் பண்ணுறா..!! உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லு… ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! உன்னை போய் அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்..!!” அத்தையின் வார்த்தைகள் என்னை சூடாக்கின.

“அத்தை.. ரொம்ப கேவலமா பேசுற நீ..!! எனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு.. அதுக்குள்ளே வந்த வேலையை முடிச்சு காட்டுறேன்..!! நீ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கோ..!!”

நான் உண்மையிலேயே பயங்கர எரிச்சலானேன். சப்பை மேட்டர் இது. எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும் என்று தோன்றியது. வசுவிடமே நைசாக பேசி மேட்டரை கறந்துவிடலாம் என முடிவு செய்தேன். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு, அவள் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தபோது, அவளை பிடித்தேன். வானத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அழைத்தேன்.

“ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!”

“ம்ம்.. வாங்கத்தான்.. சாப்பிட்டீங்களா..?”

“ம்ம்.. ஆச்சு ஆச்சு..!! உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.. வந்ததுல இருந்தே பேசனுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்..”

நான் சொன்னதும் வசு, கண்களை இடுக்கி என்னை கூர்மையாக பார்த்தாள். உதட்டில் ஒருமாதிரி குறும்பு புன்னகையுடன் சொன்னாள்.

“அப்டி என்ன பேசணும்.. இப்போ பேசலாமே..?”

“அ..அது.. அது.. நீ யாரையோ லவ் பண்றியாமே.. அப்டியா..?”

“யார் சொன்னது உங்களுக்கு..?”

“அத்தைதான் சொன்னாங்க..!!”

“ஓஹோ..? ம்ம்ம்ம்…. ஆமாம்.. லவ் பண்றேன்..!! அதுக்கு என்ன இப்போ..?”

“ஒன்னும் இல்லை.. அவரு அட்ரெஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா..?”

“எதுக்கு..?””

“சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!”

மனதுக்குள் ‘சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!’ என்று சொல்லிக் கொண்டேன்.

“போங்கத்தான்.. அதெல்லாம் சொல்ல முடியாது.. சீக்ரட்..!!” அவள் ஒரு மாதிரி சலிப்பாக சொன்னாள்.

“இங்க பாரு வசு.. நீ எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியுது.. அத்தை அந்த பையனை ஏதாவது பண்ணிடுவாங்கன்னுதான..? அத்தான் நான் இருக்கேன் வசு..!! நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்..!!”

“யாரு..?? நீங்களா..?? போங்கத்தான்.. போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க..!!” எரிச்சலாக சொல்லிவிட்டு நகர முயன்றவளை, நான் கை நீட்டி மறித்தேன்.

“அப்போ… சொல்ல மாட்ட..?”

“சொல்ல மாட்டேன்.. என்ன பண்ணுவீங்க..? உங்களுக்கு வேணுன்னா நீங்களே கண்டு பிடிச்சுக்குங்க..!!”

“ஏன்..? என்னால கண்டு முடியாதுன்னு நெனைக்கிறியா..?”

“சத்தியமா முடியாது..!!” அவள் பட்டென்று சொன்னாள்.

“ஏன் அப்டி சொல்ற..?”

“ஏன்னா.. நீங்க ஒரு ட்யூப் லைட்டு..!! பொண்ணுகளை பத்தி உங்களுக்கு ஒரு எழவும் தெரியாது..!!”

அவள் கிண்டலாக சொல்ல, எனக்கு கடுப்பாக வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என்னை பற்றி..? ஒன்னும் தெரியாத மக்கு என்றா..? என்னைப் பற்றிய அவளுடைய எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. இன்ஸ்டண்டாய் பொய் சொல்ல ஆரம்பித்தேன்.

“யாரு..? எனக்கு பொண்ணுகளை பத்தி தெரியாதா..? சோழவந்தான் வந்து கேட்டுப் பாரும்மா..!! எல்லா பொட்டை சிறுக்கிகளும் ஐயாவோட பெருமையை எடுத்து சொல்லுவாங்க..!!”

“எ..என்னத்தான் சொல்றீங்க..?” வசு ஒரு மாதிரி அதிர்ச்சியாய் கேட்டாள்.

“உண்மையை சொல்லிட்டு இருக்குறேன்..!! எத்தனை பொண்ணுகளை இதுவரை மயக்கிருக்கேன் தெரியுமா..?”

“எ..எத்தனை..????”

“அது இருக்கும்.. எக்கச்சக்கமா..!! எண்ணிட்டுலாம் இருக்குறது இல்லை.. மாசத்துக்கு ஒருத்தி..!! நாங்கல்லாம் பல்சரை எடுத்துட்டு.. அப்டியே ஒரு ரவுண்டு வந்தோம்னா.. பத்து பொண்ணுகளுக்கு ரூட்டு போடுவோம்..!! என்னைப் பாத்து நா கூசாம.. ட்யூப் லைட்டுன்னு சொல்ற..!!”

“ஓஹோ..? தெரியாம சொல்லிட்டேன்..!! அத்தனை பொண்ணுகளை மயக்கிருக்கீங்களா..?”

“பின்ன..?”

“ம்ம்.. அப்புறம்..?”

“அப்புறம் என்ன..? மாசத்துக்கு ஒருத்தியை மயக்க வேண்டியது.. மேட்டரை முடிச்சுட்டு.. போ போ.. போயிட்டே இருன்னு.. டாடா காட்டிட வேண்டியதுதான்..!! எவன் அதுகளைலாம் கட்டிட்டு மாரடிக்கிறது..? ஹெஹே.. ஹெஹே..!! எத்தனை பொண்ணுகளை தொட்டுருக்கேன்.. என்னை போய்.. பொண்ணுகளை பத்தி ஒரு எழுவும் தெரியாதுன்னு சொல்ற..? ஹையோ.. ஹையோ..!!”

“அத்தான்… நீ..நீங்க சொல்றதுலாம் உண்மைதானா..?” வசு ஒருமாதிரி உடைந்து போன குரலில் கேட்டாள்.

“அப்போ.. இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்லிட்டு இருக்கேன்..? இன்னும் நம்பிக்கை இல்லையா என்மேல..? நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை..!! போதுமா..? இல்லை.. இன்னும் என்னைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..?”

அவ்வளவுதான்..!! வசு தன் கண்களை விரித்து, என்னையே அசையாமல் பார்த்தாள். அதிர்ச்சி நிறைந்த, நம்ப முடியாத, ரொம்பவே மருட்சியான பார்வை..!! எனக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஏன் அப்படி பார்க்கிறாள்..? வசுவின் உதடுகள் படபடவென துடித்தன. அதை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். உள்ளுக்குள் எழுந்த சோகத்தை, அடக்க முடியாமல் கஷ்டப்படுபவள் போல காட்சியளித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ஐந்தாறு விநாடிகள்தான் அந்த மாதிரி என்னை பார்த்திருப்பாள். அப்புறம் ஒரு மாதிரி அழுதுவிடும் குரலில் சொன்னாள்.

“தெரிஞ்சு போச்சுத்தான்..!! உங்களை பத்தி நல்லா தெரிஞ்சு போச்சு..!! தேங்க்ஸ்..!!”

சொல்லிக்கொண்டே வசு என்னை கையெடுத்து கும்பிட்டாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதை பட்டென்று புறங்கையால் துடைத்துக் கொண்டாள். படக்கென்று திரும்பி ஓடினாள். ‘ஏய்.. வசு..’ என்று நான் அழைத்ததை பொருட்படுத்தாமல், படபடவென படியிறங்கி கீழே சென்றாள். என்ன ஆயிற்று இவளுக்கு..? நன்றாக பேசிக்கொண்டு இருந்தாள்.. திடீரென லூசு மாதிரி அழுதுகொண்டே ஓடுகிறாளே..? யோசித்துப் பார்த்தால் எதுவும் விளங்கவில்லை..!! நான் கொஞ்ச நேரம் அங்கேயே தலையை சொறிந்தவாறு நின்றிருந்தேன். அப்புறம் என் ரூமுக்கு சென்று, போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன்.

அன்று என்னவோ.. அடித்துப் போட்டது மாதிரி அப்படி ஒரு தூக்கம்..!! எழுந்திருக்க பத்து மணியாயிற்று. குளித்துவிட்டு கீழே சென்றேன். வசுவும், சுஜியும் கிளம்பி போயிருந்தார்கள். அத்தை மட்டும்தான் இருந்தாள். நான் உள்ளே நுழைந்ததுமே, அல்வாவை என் வாயில் திணித்தாள்.

“ஐயோ.. என்னத்தை இது..?”

“அல்வாடா.. சாப்பிடு..!!”

“நான் உன் அண்ணன் புள்ளை.. அல்வாலாம் கொடுக்க மாட்டேன்னு சொன்ன..?”

“அடச்சீய்.. லூசு..!! இது சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிறதுக்கு கொடுக்குற இனிப்புடா..!!”

“அப்டி என்ன சந்தோஷம் உனக்கு.. காலங்காத்தால..?”

“நான் கூட உன்னை என்னமோ நெனச்சேன் அசோக்கு.. நீ என் அண்ணன் மகன்னு நிரூபிச்சுட்ட..!! சொன்னா.. சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே..?”

“என்னத்தை சொல்ற..? எனக்கு ஒரு எழவும் புரியலை..!!”

“அந்த பஞ்சு மில் ஓனர் பையனை கட்டிக்கிறதுக்கு.. வசு ஓகே சொல்லிட்டாடா..!!”

“அத்தை.. நெஜமாவா சொல்ற..? என்னால நம்பவே முடியலை அத்தை..!!”

“என்னாலயுந்தான் நம்பவே முடியலை.. அவ்ளோ சந்தோஷமா இருக்குது..!! அதான் காலைலேயே அல்வா கிண்டி எல்லாத்துக்கும் கொடுத்துக்கிட்டு இருக்குறேன்..!! அதுசரி.. என்ன பண்ணி அவளை சம்மதிக்க வச்ச அசோக்கு கண்ணா..? அத்தைக்கு அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லேன்..?”

அத்தை அந்த மாதிரி கேட்டதும், அல்வாவை அசைபோட்ட வாயை நான் அப்படியே நிறுத்தினேன். ஆமாம்..!! அப்படி என்ன நான் செய்துவிட்டேன்..? ஒன்றுமே செய்யவில்லையே..? இரவு கூட வசு அவளுடைய முடிவில் உறுதியாக இருந்தாளே..? அதற்குள் என்ன ஆயிற்று அவளுக்கு..? ஆமாம்.. நேற்று இரவு நான் ஒரு பொம்பளை பொறுக்கி என்று பொய் சொன்னபோது அப்டி அழுதாளே..? ஏன்..? நைட்டு அழுதிருக்கிறாள்.. காலையில் வந்து சம்மதம் சொல்லியிருக்கிறாள்..? ரெண்டுக்கும் என்ன கனெக்ஷன்..?

யோசிக்க யோசிக்க, எனக்கு மூளையில் பட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது..!! கொஞ்ச நேரத்தில் அந்த ஸ்பார்க், மூளை முழுவதும் பற்றி எரிந்தது..!! நடந்தவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக ரீவைண்ட் செய்து பார்க்க… மை காட்..!! ஒருவேளை வசு காதலித்தது என்னைத்தானோ..? அதனால்த்தான் அப்படி மருகி மருகி என்னை பார்த்தாளா..? ஒருவேளை அவள் என்னை காதலித்து இருந்தால்..??? ஐயோ..!! கடவுளே..!! என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்துவிட்டேன்..? நானே அந்த காதலை நசுக்கி எறிந்து விட்டேனே..? அவள் மாதிரி ஒரு பெண் எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் கிடைப்பாளா..? இப்போது மட்டும் இவ்வளவு யோசனை வருகிறது எனக்கு.. அப்போது எங்கு போனது எல்லாம்..? இதற்குத்தான் ட்யூப்லைட் என்று திட்டினாளா..? நான் அல்வா அடைத்த வாயுடன், அப்படியே சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன். Porukki Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000