பனித்துளி – 48

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamaveri விடுமுறை நாள்…!! காலை பத்து மணிக்கு மேல் கீர்த்தனா வீட்டுக்குப் போனான் தாமு. சாத்தியிருந்த.. கதவைத் தட்டிவிட்டு காத்து நின்றான்..! சைலாதான் கதவைத் திறந்தாள்.! ”ஹாய் மச்சி.. வெல்கம்..!” என்று புன்சிரிப்புடன் வரவேற்றாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் .

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

நைட்டி போட்டிருந்தாள் சைலா. கையில் பேனா வைத்திருந்தாள். இரட்டை பின்னலில் ரோஜா வைத்திருந்தாள். வாயில் எதையோ போட்டு.. அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.

”வாய்ல.. என்ன..? இந்த மெல்லு… மெல்ற..?” என்று கேட்டான்.

” பூமர்…” என்று புஷ்ஷென்று பபுள் ஊதிக்காட்டினாள்

உள்ளே நுழைந்தான் ”கைல பேனா வெச்சிட்டு என்ன பண்ற…?”

”ஹோம் ஒர்க்.. மச்சி..! செம போர்.. ஆனா.. என்ன பண்றது..? எழுதியே ஆகனும்..” என்றாள்.

இயல்பாக அவள் தோளில் கை போட்டான். ”ம்…! ப்யூச்சர்ல நீ… நல்லாருக்கனுமில்ல…?”

”எப்படி.. உங்கள மாதிரியா..?” என்று சிரித்தாள்.

செழுமை படர்ந்த.. அவளது ஆப்பிள் கன்னத்தில் தட்டினான். ”சரி… நம்மாளு… எங்க.. காணம்…?”

” நம்மாளு இல்ல..! உங்க ஆளு…!!” என்றாள்.

”சரி… என் ஆளு…?”

” பின்னால.. துணி தொவைச்சிட்டிருந்தா…”

” சரி… நீ எழுது..”என்று விட்டு.. வீட்டின் கொல்லைப் பக்கம் போனான்.

முழங்கால் தெரிய… நைட்டியை இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த கீர்த்தனா..துணிகளைத் துவைத்து முடித்து.. பாக்கெட்டில் முக்கி அலசிக்கொண்டிருந்தாள். நிமிர்ந்து தாமுவைப் பார்த்ததும் இடுப்பில் சொருகியிருந்த நைட்டியை இறக்கி விட்டாள்.

”ஹாய்..” என்றான்.

” வா…!” புன்னகைத்தாள்.

”முடிஞ்சுதா..?”

” ம்.. ம்ம்..! சைலா இருக்காளா..?”

” ம்.. ம்ம்..! எழுதிட்டிருக்கா..!”

” நீ போய்… அவகூட பேசிட்டிரு.. நான் இப்படியே குளிச்சிட்டு வந்தர்றேன்..!!” என்றாள்.

”ம்…!!”ஒரு இரண்டு நிமிடம்.. அவளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டான். ” சினிமா போலாமா..?”

” எப்ப..?” என அவனைப் பார்த்தாள்.

” மேட்னி…?”

” இவ வேற இருக்காளே..?”

”ஏன்.. அவ இருந்தா..என்ன..?”

” அவளும் வர்றேம்பா..! விட்டுட்டு போகவும் முடியாது..!!”

”சரி.. வந்தா.. வரட்டும் விடு..!!” என்றான்.

”சரி.. உங்கக்கா எப்படி இருக்காங்க..?”

”ம்.. ம்ம்..! தேவலை..!!”

”குணமாகிட்டாங்க.. இல்ல..?”

” ம்…ம்ம்..!”

துணிகளை உதறி.. கொடியில் போட்ட கீர்த்தனா.. மெதுவாகச் சொன்னாள். ”கம்பெனில எல்லாருக்குமே தெரிஞ்சு போசசு..!!”

”என்ன..?”

”நாம லவ் பண்றது..” என லேசாக புன்னகைத்தாள்.

” எல்லாம் உன்னாலதான்..! நீதான்.. உன் பிரெண்டுகிட்ட சொல்லி.. அவ மூலமா.. கம்பெனி பூரா பரவிருச்சு..”

” நான்.. என்னத்த கண்டேன்..! அவ யாருகிட்டயும் சொல்ல மாட்டான்னுதான் நெனச்சேன்..!!”

” நல்ல ஆளுகிட்டபோய் சொன்ன..”

அவள் மெதுவாக..” ஆனா.. அந்த ரகுக்கு உன் மேல.. பயங்கர பொறாமை தெரியுமா..?” என்று.. அவனை குறுகுறுவெனப் பார்த்தாள்.

”என்மேலயா… ஏன்..?”

”நான்.. உன்ன லவ் பண்றேனே..” என லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.

அது உண்மைதான்..! ”அவனும் உன்னை மடக்க.. எவ்வளவோ ட்ரை பண்ணான்..”

”சீ..! அவன எனக்கு.. புடிக்கவே செய்யாது..!!”

”உன்னை மடக்க… ஒரு கேங்கே ட்ரை பண்ணுச்சு..”

”ஆனா.. நான் யாருகிட்டயுமே மடங்கல..! உன்னைத் தவிற..!”

”ம்.. நானே..கேக்கனும்னு நெனச்சேன்..! யாருக்குமே மடங்காத நீ.. எப்படி என்னை லவ் பண்ண..?”

உதட்டைப் பிதுக்கினாள். ”எனக்கே தெரியல..! ஆனா உன்ன எனக்கு ரொம்பமே புடிக்கும்..! ஸ்கூல் போறப்ப இருந்தே…!!” என்றாள்.

அவனது முகத்தில் பெருமிதம் வழிந்தது. திடுமென..”அப்றம்.. நம்ம மேட்டர்.. எங்கக்காளுக்கு தெரிஞ்சு போச்சு..” என்றான்.

பதறினாள் ”அய்யய்யோ…! அப்றம்…?”

”உன்ன பத்தி கேட்டா..”

” நீ என்ன சொன்ன..?”

”கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்டா..”

”ஒன்னும் திட்டலையா..?”

”இல்ல… உன்னை புடிச்சிருக்குனுசொன்னா..”

கீர்த்தனா மகிழ்ச்சியடைந்தாள். நெஞ்சம் பூரிக்க.. அவனைக் காதலோடு பார்த்தாள். அவனும்.. அவளைப் பார்த்தான்..! அவளைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் ஆவல் பொங்கியது..! ஆனால்…….

”நெனைச்சேன்…!!” என்று குரல் கேட்டுக்கலைந்தனர். சைலா வந்தாள். ” என்னடாது போய் ரொம்ப நேரமாச்சே.. இன்னும் காணமேனு யோசிச்சப்பவே நெனச்சேன்..! இப்படி ஏதாவது.. ஏடாகூடமா.. நடக்கும்னு..!!”

”ஏய்.. என்னடி.. ஏடாகூடம் இப்ப..?” என்று கேட்டாள் கீர்த்தனா.

” ஹ்ஹா..!! அட…அட…அட.. என்ன லுக்கு…? அப்படியே ஒருத்தரையொருத்தர் பார்வையாலேயே திண்றுவீங்க போல..! செம சைட்டு போடறீங்கப்பா..!!” என்று கிண்டலாகச் சிரித்தாள்.

அசடு வழிந்தான் தாமு.

”இங்க தொவைக்கற எடத்துல.. உங்களுக்கு என்ன வேலை..?” என அவன் கையைப் பிடித்து ”வாங்க என்கூட..” என அவனை வீட்டுக்குள் கூட்டிப்போனாள் சைலா..!

டி வி முன்னால் உட்கார்ந்தான் தாமு. சைலா ”தண்ணி வேனுமா..?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

” வேண்டாம்..!!” என்றான்.

அவன் தோளில் கை வைத்தாள் ”கோபமா.. மச்சி.. என்மேல..?”

அவன் வேணடுமென்றே.. முகத்தை உம்மென்று வைத்திருந்தான். அவன் தாடையைப் பிடித்து.. ”ஹைய்யோ.. என்ன மச்சி..இவ்ளோ கோபம்..?” என்று கேட்டாள்.

சிரித்துவிட்டான் ”வாலு..! எழுதிட்டியா..?”

”என்னது..?”

” ஹோம் ஒர்க்..?”

ஓ..!!” என்று அவன் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து.. அவன் மடியில் கை வைத்துக் கொண்டாள்.

கீர்த்தனா வந்தாள். சைலாவைப் பார்த்து.. ”ஏய்.. என்னடி இது..?” என்று கேட்டாள்.

”எது..?” சைலா.

” என்னோட ஆளு மடில… சாஞ்சிட்டு..?”

”வெவ்வே..” என பழிப்புக்காட்டினாள் ”இவரு எனக்கு மச்சி..! நான் எப்படி வேணா இருப்பேன்.. அதக்கேக்க நீ.. யாரு..?”

” கொன்னுருவேன்..! நான் யாரா..?”

”ஏ… போடி..! லவ் பண்றேன்னு… ரொம்பத்தான்.. பிலுக்கற..” என்று சிரித்தாள் சைலா.

தாமு.. சைலாவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான். ”நாங்க ரெண்டு பேரும்.. சினிமா போலாம்னு இருக்கோம்..! நீ என்ன பண்ற..?”

”நெஜமாவா..?”

” ம்..ம்ம்..!”

”என்ன மச்சி.. இப்படி கேட்டுட்டிங்க..? ச்ச… என்னை விட்டுட்டு போனீங்க… உங்க லவ்வு… அப்பவே டமால்… டுமீல்..” என்றாள்.

சிரித்தான் ”அது என்ன.. டமால்… டுமீல்…?”

”அது.. அப்படித்தான்..!” என்று விட்டு கேட்டாள் ”எந்த ஷோ..?”

”மேட்னி..! வர்றதுனா.. போய் பெறப்படு..!!” என்றான்.

உடனே எழுந்து ஓடினாள் சைலா..! ”டென்மினிட்ஸ்…!”

கீர்த்தனாவும் குளிக்கப் போனாள்.

கூட்டமே இல்லாத தியேட்டருக்கு போனார்கள். தாமுவுக்கும்.. கீர்த்தனாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள் சைலா.

” ஏய்.. இந்த பக்கம்.. உக்காரலாமில்லடி..?”என்று கெஞ்சினாள் கீர்த்தனா.

”ம்கூம்..!!”என்று மறுத்தாள்.

”ப்ளீஸ்டி…”

” உங்கள.. பக்கத்துல.. பக்கத்துல விட்டா… அப்றம் நான் படம் பாக்கவே முடியாது..”

”அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுடி…”

”ஆஹா..! பஞ்சையும்.. நெருப்பையும் பக்கத்துல… பக்கத்துல வெச்சா.. அது பத்திக்குமாம்..! அதான் நடூல.. தண்ணியா.. நான் இருக்கேன்..”

” யாரு.. நீ.. தண்ணி..?” என்று கேட்டான் தாமு.

”ம்…ம்ம்..! பச்சைத் தண்ணி..!!” என்று கலகலவெனச் சிரித்தாள்

கீர்த்தனா ”அடிப்பாதகி… நீ நல்லாருப்பியா…?” என்றாள்.

வேறு வழியே இல்லை..!!

ஒரு கட்டத்தில்.. சைலாவைத் தாண்டி… கீர்த்தனாவைத் தொட்டான் தாமு. அவன் கை.. சைலாமீது பட்டுவிட்டது. சட்டென திரும்பி பார்த்த சைலா… ” மச்சி.. உங்களுக்கு நான் வார்ன் பண்றேன்..! இது நல்லால்ல..! ஒழுங்கு மரியாதையா.. கைய வெச்சிட்டு…. ஸ்…ஸ்ஸ்… ஆஆ..” என்று அலறினாள்.

”ஏய்.. என்னாச்சு..?” என்று தாமு கேட்டான்.

”தொடைல கில்றா.. இவ…!!” என்றாள் சிணுங்கலோடு.

கீர்த்தனா பொருமலோடு சொன்னாள். ”சைத்தானே… நீ உருப்படவே மாட்ட…”

”ஹா..ஹா..! நாந்தானே..? பரவால்ல போடி..!”

இடைவேளையின் போது… அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்.. வெளியே சுற்றினாள் சைலா. கேண்டீனில் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தரச்சொன்னாள். எடை பார்க்கும் மிசினில் ஏறி நின்று… அவனைக் காயின் போடச்சொன்னாள்..! அவன் காயின் போட்டான்.

”தட்டி… எய்ட்.. கேஜிதான் இருக்கேன்…!!” என்றாள் கொஞ்சம் வருத்தமான குரலில்….!!!!!

– நீளும்…..!!!!!!!

கருத்துக்களை சொல்லலாம்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000