நீ – 111

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

akka pavadai அமைதியாக… ஆனந்தமாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை.. இப்போது பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. இதுவரை விளையாட்டுத்தன்மையுடன் இருந்துகொண்டிருந்த நான் இப்போது.. மிகவுமே சீரியஸாகிப் போனதாக உணரத்தொடங்கினேன்.

Story Writer : Mukilan

இப்போது என் மனதில் நிறைந்து நிற்பதெல்லாம்.. அமைதியின்மையும் சோகமும்தான்..! இன்னும் சில.. சமயங்களில்.. வெறுப்பும் வரும்..! முதலில் வருவது நிலாவினிமீது.. அப்பறம்.. அவளது அண்ணன்..குணா..!! இப்போதைய என் மனநிலையில் அவனை நான் என் எதிரியாகவே எண்ணத் தொடங்கினேன்..! இந்த நேரத்தில்.. எனக்கு ஆறுதலாக இருந்தது..என்னை பெரிதும் அரவணைத்துக் கொண்டது எல்லாம் நீ மட்டும்தான்..! ”நீங்க இப்படி குடிச்சு.. குடிச்சே.. உங்க ஒடம்ப கெடுத்துக்காதிங்க..” என்று நான் குடித்துவிட்டு வரும்போதெல்லாம் கனிவோடு சொல்வாய்.

”நான் அப்படித்தான்டி குடிப்பேன்..” என்றால்..

”ஐயோ.. உங்கள நான் குடிக்க வேண்டாம்னு சொல்லலீங்க.. ஆனா ஒடம்பு கெட்டுப்போற அளவுக்கு குடிக்க வேண்டாம்னுதாங்க சொல்றேன்..”

”முடியலடி.. குடிச்சாத்தான் தூக்கமே வருது.. குடிக்கலேன்னா தூங்க முடியறதில்லடி.. பயங்கர டார்ச்சர் பண்றா…அவ…” என்று அசிங்கமாகவே திட்டுவேன் சில சமயங்களில்.

பெரும்பாலும் அமைதியாகவே இருந்துவிடுவாய். சில சமயங்களில் மெண்மையாக சொல்லுவாய். ”இப்பகூட ஒன்னும் கெட்டு போகலீங்க.. நீங்க நெனைச்சா.. ஒரே நாள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடலாங்க…”

”அவள கூப்பிட்டுக்க சொல்வ..?”

”ஆமாங்க.. நீங்க மட்டும் மனசு வெச்சா போதும்..”

நான் சிரிப்பேன் வாய்விட்டு.. வேதணை கலந்த சிரிப்பு..! ”அவள ஏன் நான் வேண்டாம்னு சொல்றேன் தெரியுமா.?”

”ஏங்க…?”

”அவள என்னால மன்னிக்க முடியும்.. ஆனா பழைய மாதிரி நேசிக்க முடியாது. அதவிட முக்கியமான விசயம்.. அவளும் ஒரு குற்ற உணர்ச்சியோடதான்.. இந்த வீட்ல இருப்பா.. அது என்னை இன்னும் அப்செட் பண்ணும்..! நான் மறந்தாலும் அவளே என் மனசுல.. அந்த எண்ணத்த தூண்டி விட்றுவா..! இதான் பிரச்சினை.. மொத்தத்துல.. எங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த அன்பு.. காதல் எல்லாம் செத்துப்போச்சுடி..” என நான் சொல்ல…

நீ கண்கலங்குவாய்.

”இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லு..” என்பேன்.

என்ன வழி சொல்லுவாய்… பேதையான.. நீ..?

ஒரு காலை நேரம்….!!

”என்னங்க.. என்னங்க..” என.. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என்னை உழுக்கி எழுப்பினாய்..நீ..! நான் மிகுந்த சிரமத்துடன்தான் கண்களைத் திறந்தேன். லேசான எரிச்சலுடன் புரண்டு படுக்க.. என் தோளைத் தொட்டு.. ”உங்கள பாக்க வந்துருக்காங்க..” என்றாய்.

கண்களை மூடிக்கொண்டே.. ”யாரு..?” என்றேன்.

” அக்காவோட.. அப்பா..”

நீ சொன்னது சரியாக எனக்கு விளங்கவில்லை. ”யாரு..?” என்றேன் மறுபடி.

”நிலா.. அக்காவோட.. அப்பா..! உங்கள பாக்க வந்துருக்காங்க..” என்றாள்.

சட்டென புரண்டு எழுந்தேன். நிலாவினியின் அப்பா..! ”வாங்க..” என்று விட்டு.. அவிழ்ந்திருந்த லுங்கியை இடுப்பில் இருக்கிக்கட்டினேன்.

ஒரு புன்சிரிப்பைக் காட்டிவிட்டு.. சேரில் உட்கார்ந்தார். நான் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்தேன். என்ன விசயமாக பேச வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரிந்தே இருந்தது. எனவே நான் பேசவில்லை.

அவருக்கும் சேர்த்து காபி கொண்டு வந்து கொடுத்தாய். அவரும் மறுக்காமல் வாங்கிக்கொண்டார்.

சிறிது பொறுத்து பேசினார். ”நீ.. எங்க மேலெல்லாம் கோபமா இருப்ப…?”

நான் மௌனமாக காபியை உறிஞ்சினேன்.

”எங்களை மன்னிச்சிருபபா.! உன் விஷயத்துல தப்பு பண்ணது நாங்கதான். நிலா இல்லை..! அவ பண்ண தப்பு.. ஒருத்தனை காதலிச்சு ஏமாந்து போனதுதான். அதுக்கப்பறம் அவ உங்கள ஏமாத்த விரும்பாம.. இந்த கல்யாணமே வேண்டாம்னு.. எவ்வளவோ அடம்புடிச்சா.. ஆனா.. நாங்கதான்….”

”என் தலைல மொளகா அரைச்சுட்டிங்க…?” என்று கடுப்புடன் கேட்டேன்.

”இல்ல.. அப்படி இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடியே உன்கிட்ட சொல்லிடனும்னுதான் நாங்க நெனைச்சோம்..! குணாவ விட்டு உன்கிட்ட சொல்லிரவும் சொன்னோம்… ஆனா.. அதுல நடந்த… ஒரு சின்ன தப்பால….”

என் ரத்தம் கொதித்தது. என் ஏமாற்றம் என்னைக் கொந்தளிக்க வைத்தது. ”இது.. சின்ன தப்பா உங்களுக்கு..?”

மேலும் தயக்கத்துடன் ”இன்னும்.. உனக்கு என்ன உதவி வேனுமோ.. கேளு..! ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டும் எங்களை மன்னிச்சிரு..! நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன்..!” என்றார்.

”எதிரியக்கூட மன்னிச்சிரலாங்க.. ஆனா.. துரோகிய…”

”அவ.. துரோகம்னு எதுவும் பண்ணல…” என உள்ளமுங்கிய குரலில் சொன்னார்.

”ஓ.. அப்ப.. இப்ப பண்ணது.. என்னவாம்..?”

”இல்லப்பா… அவ கல்யாணத்துக்கு முன்ன.. சரி.. சரி.. ஆனா.. இதுவரை போனதவிடு.. மன்னிச்சிரு… இனிமே உன் மனசு கோணாம நடந்துப்பா..! அதுக்கு நான் பொருப்பு..! அவளுக்கும் இனி..வேற வாழ்க்கைனு எதுவும் இல்ல..! ஒன்னும் அவசரம் வேண்டாம்… அவ வேணா கொஞ்ச நாளைக்கு.. அங்கயே இருக்கட்டும்..! உன் கோபமும் ஆறட்டும்..!” என்றார்.

”இல்ல… உங்க பொண்ண.. நீங்களே வெச்சுக்குங்க.. எனக்கு வேண்டாம்.. இனியும் அவளோட சேர்ந்து.. வாழ்றது எனக்கு நரகமாத்தான் இருக்கும்..” என்று தீர்மானமாகவே சொன்னேன்.

”உன் கோபம் நியாயமானதுதான்ப்பா..! கொஞ்சம் யோசி..! அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்..!” என்றார்.

அவரும் எவ்வளவோ முயன்றார். நான் இடம் கொடுக்கவே இல்லை.

இந்த பிரச்சினை அதோடு நிற்கவில்லை..! என் பெரியம்மா.. அக்கா…என என் அப்பாவரை நியாயம் போனது. ஆனால் என்வரையில் நான் மாறவே இல்லை..!

அக்கா சொன்னாள். ”சரிடா.. நடந்தது நடந்து போச்சு.. இனி அவளுக்கும் வாழ்க்கைனு தனியா இல்ல..! நல்லவளோ கெட்டவளோ.. அவள கல்யாணம் பண்ணி.. ஒரு வருசம் வாழ்ந்துட்டே..! தாமரைய ஏத்துட்டு வாழ முடிஞ்ச உன்னால.. இவள ஏத்துட்டு வாழ முடியாதா..? கொஞ்சம் அனுசரிச்சு போ..” என்றாள்.

நான் பேசாமல் இருந்தேன்.

”அவதான் உனக்கு ஒரு தொந்தரவும் தர்றதில்லையே..? அவ ஒரு புள்ளப்பூச்சிடா..! கொஞ்சம் பெரிய மனசு பண்ணி.. அவளை மன்னிச்சிரு.. கூப்டுக்க.. அவளும் உன்கிட்ட பாசமாத்தான் இருக்கா..! பாவம்டா.. அவ..”

”பாவம் புண்ணியம் பாக்ற விசயமா இது..?” என்றேன்.

”அப்படி இல்லடா….”

”விடு… மேல.. மேல.. பேசி எச்சா என்னை நோகடிக்காத..” என்றேன்.

அந்தப் சிரச்சினை எந்த ஒரு முடிவும் இல்லாமலேதான் இருந்தது..! இந்தப் பிரச்சினையால் நீயும் பாதிக்கப்பட்டிருந்தாய். என்னுடனான உன் பேச்சு மிகவும் குறைந்திருந்தது. அதை நானும் பெருசு பண்ணவில்லை. ஆனால் என் மனவேதணை மட்டும் குறைந்த பாடே இல்லை. நாளுக்கு நாள்.. என் மன உளைச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதை மறக்க.. தினம் தவறாமல் குடிக்கத் தோடங்கினேன்..!

இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. நான் வீடு போனபோது நள்ளிரவாகியிருந்தது. கதவைத் திறந்த நீ.. என்னிடம் எதுவும் பேசவில்லை. டி வி ஓடிக்கொண்டிருந்தது.

”சாப்பிட்டியா..?”என்று கேட்டேன்.

”இல்லீங்க…” என்றாய்.

”ஏன்டி… நான் என்னை எதிர் பாக்காதேனு சொல்லிருக்கேன் இல்ல…”

”ஐயோ.. பசி இல்லீங்க…”

”ஏன் பசிக்கல..?”

”தெரியலீங்க…”

”சரி.. போடு..” என்றேன்.

நீ இருவருக்கும் உணவைக் கொண்டு வந்தாய். சாப்பிடும்போது தயக்கத்துடன்.. ”இப்பெல்லாம் டெய்லியும் குடிக்கறீங்க..?”என்றாய்.

”ஏன்டி.. அதுக்கு என்ன இப்ப..?”

”இல்லீங்க.. ஒடம்பு.. என்னத்துக்கு.. ஆகறது..?”

”அடிப்போடி.. மனசே ஒடஞ்சு போச்சு..” என்று விட்டு நான் பாதி சாப்பாட்டிலேயே எழுந்து விட்டேன்.

”சாப்பிடுங்க..” என்றாய்.

”போதுன்டி…”

”ஐயோ.. என்னங்க… சாப்பிடாம.. அப்படியே…”

”நீ.. சாப்பிட்டு வா…”

நான் படுக்கையில் சாய்ந்தேன். நீ என் அருகில் வந்து உட்கார்ந்தாய். ”என்னங்க..”

” ம்ம்..?”

”இப்படி சாப்பிடாம இருக்காதிங்க..”

”ம்ம்…”

என் பக்கத்தில் படுத்து.. என் மார்பில் கை போட்டு அணைத்துக் கொண்டாய். என் நெஞ்சைத் தடவியபடி.. ”நான் ஒன்னு.. கேக்கலாங்களா..?” என்றாய்.

”ம்ம்..”

”அக்காவ… விட்றுவிங்களா..?”

”வேற என்னடி செய்யச்சொல்ற..?”

”நான் உங்ககிட்ட.. எனக்குனு ஒன்னுமே கேட்டதில்ல…”

”ம்ம்..?”

”இப்ப..ஒன்னே ஒன்னு கேக்கப்போறேன்…”

”என்ன…?”

”அக்காவுக்கு கொழந்தை வேனும்னுதானுங்களே.. என்னை கல்யாணம் பண்ணி வெச்சுது…”

”ம்ம்…?”

”அதுக்காக… அக்காவ.. மன்னிச்சு… ஏத்துக்குங்க..! நான் உங்ககூட வாழவே.. அக்காதான் காரணம்..! இப்ப நான் வந்து.. அக்காவ.. உங்ககிட்ட இருந்து பிரிச்ச மாதிரி ஆகிடாதுங்களா..?”

”அதனால…?”

” எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க..! அக்கா இல்லாம.. உங்கனாலயும் நிம்மதியா இருக்க முடியாதுங்க..! அங்க அக்காவாலயும் நிம்மதியா இருக்க முடியாது..! நான் வந்த நேரம் இப்படி ஆகிப்போச்சோனு.. எனக்கும் வருத்தமா இருக்குங்க…”

”இதுல நீ எதுக்குடி.. தேவையில்லாம பீல் பண்ணிக்கற..?”

”கொஞ்சம்.. விட்டுக்குடுத்து போங்க..! எனக்காகங்க… நான் என்னிக்கும் உங்க அடிமைதாங்க… ஆனா நீங்களும் நிம்மதியா வாழனுங்களே..! நீங்க நிம்மதியா இல்லாம.. நான் எப்படிங்க…? நான் சொல்றத.. கொஞ்சம் யோசிங்க…” என்று கெஞ்சினாய்.

நான் அமைதியானேன்.

”என்னை அடிக்கறதுனா.. அடிச்சிருங்க..! நான் வாங்கிக்கறேன்..! ஆனாக்கா.. நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிங்க… நான் உங்களுக்கு கெடுதல் நெனைப்பேனு தோணுதுங்களா… உங்களுக்கு…?” என்றபோது உன் குரல் உடைந்து.. அழுது விட்டாய்.

”ஏய்.. ச்சீ.. நீ எதுக்குடி அழற.. அழாத.. ” என்று உன்னை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

”எனக்காகங்க… ப்ளீஸ்ங்க…”

நான் சிரித்துவிட்டேன். ”ம்ம்.. நீ கூட இங்கிலீஸ்லாம் பேசற போலருக்கு…”

”எனக்கு எப்படி கேக்கறதுனு தெரியலீங்க..! அக்கா இருந்தாத்தாங்க… நாம மூனு பேருமே நிம்மதியா வாழ முடியும்..!” என மூக்கை உறிஞ்சினாய்.

”சரி… என்ன பண்ணனும்ங்கற..?”

” அக்காவ மன்னிச்சிருங்க…”

”மன்னிக்கறது பெரிய விசயம் இல்லடி…”

”அப்பறம்.. வேற.. என்னங்க..?” என்றாய்.

பெருமூச்சுவிட்டேன். ”என் மனசு கொஞ்சம் ஆறனும்..!!”

”அதுக்கு.. என்னங்க பண்றது..?” என்று அப்பாவியாகக் கேட்டாய்.

உன் தலையைத் தடவினேன். ”இப்போதைக்கு அவ இங்க வேண்டாம்..! கொஞ்ச நாள்.. அவ அம்மா வீட்லயே இருக்கட்டும்..!!” என்றதும் உன் முகம் மலர்ந்து விட்டது.

”ஐயோ. .. மன்னிச்சிட்டிங்கதாங்க..?”

” மன்னிப்புங்கறது பெரிய விசயம்டி..! அவள மன்னிக்கற அளவுக்கு நான் தகுதியானவன் இல்ல..! ஆனா.. மனசுல பட்ட.. காயம்… அது உடனே ஆறடாது..? கொஞ்ச நாள் போகனும்..! அதுவரை… அவ அம்மா வீட்லயே இருக்கட்டும்.. அவள நான் இப்போதைக்கு பாக்காம இருக்கறதுதான் நல்லது..! நேர்ல பாத்தா… கோபத்துல ஏதாவது பேசிருவேன்..!!” என்றேன்.

உன் மகிழ்ச்சி கரைபுரண்டு விட்டது. ”ஐயோ.. இப்பதாங்க.. எனக்கு நிம்மதியா இருக்கு…” என்று என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்.

நான் அமைதியாக படுத்துக் கிடந்தேன். என்னை இருகத் தழுவிக்கொண்டு.. ” போதுங்க… போதுங்க.. இது ஒன்னு போதுங்க.. எனக்கு..! இந்த சந்தோசம் போதுங்க..! எனக்காக நீங்க வேற எதுவும் பண்ண வேண்டாங்க.. சாகறவரை.. நான் உங்க காலடியே… நாய் மாதிரி கெடப்பங்க…” என்று உளறினாய்.

”ஏய்.. லூசு…” என்று உன் கன்னம் தடவினேன் ”இப்படி பேசாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..? நீயும் என் பொண்டாட்டிதான்.. அடிமை கெடையாது..!”

”நான் ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க..! எனக்கு அந்தளவுக்கெல்லாம் பேசத்தெரியாதுங்க..!” என்று குழைந்தாய்…..!!!!

-சொல்லுவேன்…….!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000