இதயப் பூவும் இளமை வண்டும் – 94

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

இருதயாவின் பிஞ்சு விரல்கள்.. மிகவும் மெலிதாக.. மெல்லிய குளிர்ச்சித் தண்மையுடன் இருந்தது.kamaveri அவைகளை.. அவன் விரல்களிடையே சசி கோர்த்துப் பிடிக்க.. உள்ளங்கை.. அவன் உள்ளங்கையில் பதிய.. அவன் கையோடு.. அவள் கையைப் பிணைத்தாள் இருதயா..! ”யாரு.. அந்த பொண்ணு..?” என மெல்லிய குரலில் கேட்டாள்.

Story : Mukilan

”ராதானு ஒரு பொண்ணு.. கருப்பாதான் இருப்பா.. ஆனா நல்லா.. கவர்ச்சியா ட்ரெஸ் பண்ணிட்டு வருவா.. என்கூடல்லாம் நல்லாவே பேசுவா.. நான்தான் ப்ரபோஸ் பண்ணவே இல்ல..” என்றான் சசி.

”ஏன்.. சொல்லல..?”

”ஒரு பயம்.. தயக்கம்….”

”கருப்பா இருப்பான்றிங்க.. அப்றம் என்ன பயம்..?”

”ஹேய்.. கருப்பாருந்தா.. அது சீப்பா..? சாதாரணமா சொல்லிடலாமா..?”

”ஹா.. ஹா..! அப்படி இல்ல..! சரி.. நெருப்பா அவ..?”

”அத எப்படி சொல்ல முடியும்..? ஏன்னா.. அவளுக்கு ஏகப்பட்ட காம்படிசன் இருந்துச்சு.. ஸோ.. நா என் லவ்வ சொல்லல..”

”நல்ல ஃபிகரா..?”

”ம்..ம்ம்..! செமக்கட்டை..!!”

”கட்டைன்னா..? எப்படி இருப்பா..?” என்று அவள் கேட்க..

மெலிதாகச் சிரித்தான் சசி. ”அது சொன்னா புரியாது.. இருதயா..! வேற அர்த்தம் அதுக்கு..”

”பரவால்ல.. சொல்லுங்களேன்.. நானும்தான் தெரிஞ்சுக்கறேன்..” என அவன் தோளில் தலை சாய்த்தாள்.

”நீ தப்பா எடுத்துக்க மாட்டியே..?” அவள் தலைப்பக்கம் அவனும் சாய்ந்து.. அவளது வாடிய ரோஜாவின் நறுமணத்தை முகர்ந்தான்.

”ம்கூம்.. சொல்லுங்க…” ஆர்வம் தெரிந்தது.. அவள் குரலில்.

”ம்.. அப்ப.. அவ மார்பு இருக்கே.. அது அட்டகாசமா இருக்கும்.. சும்மா கும்முனு.. அப்படி ஒரு அழகு.. அது.! அவமேல எனக்கு லவ் வந்ததுகூட அதனாலதான்..!” என அவன் சொல்ல…

”ச்சீ… பேட் பாய்..!!” என மெதுவாக அவன் வயிற்றில் குத்தினாள்.

”அதான் சொன்னேனே.. அது லவ் இல்லேன்னு..”

”ம்..! சரி.. என்கிட்ட.. அந்த மாதிரி ட்ரக்ஸர் இல்லாததுனாலதான் என்மேல லவ் வரலியா..?” என்று கேட்டாள்.

”ஹேய்.. என்ன பேசற..? லவ்வுக்கு அப்ப இருந்த அர்த்தம் வேற.. இப்ப இருக்கற அர்த்தம் வேற..”

” அதென்ன.. அப்ப வேற அர்த்தம்.. இப்ப வேற அர்த்தம்..?” என்று கேட்டாள்.

”ஹேய்.. அந்த வயசுல வந்த லவ்.. பருவ வயசுல ஒரு பெண்மேல இருந்த ஆசை..! அதான் ஈர்ப்பு..!!” என்றான்.

”ஓ.. இப்ப..?”

”இப்ப வரவேண்டிய லவ்.. ஒரு பெண்மேல வர்ற உண்மையான அன்பு..”

”அந்த.. அன்பு என்மேல வரலியா..?” என மெதுவான குரலில் கேட்டாள்.

”வந்துருக்கு..ம்மா… பட்.. அது லவ் ஃபீல் இல்ல..”என்க..

அமைதியானாள் இருதயா. அவள் விரல்களைப் பிணைத்திருந்த கையை விடுவித்து அவள் தோளைச் சுற்றிப் போட்டு.. மெதுவாக அணைத்தான். ”ஸாரி..!!”

”பரவால்ல..” என்றாள். அவள் குரலில் ஒரு மெலிதான வருத்தம் இளையோடியது.

”உன்ன பொய் சொல்லி ஏமாத்த எனக்கு மனசு வரல..மா.. புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..” அவள் தோளை இருக்கினான.

”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் மிகவும் கூலாக. ”பரவால்ல விடுங்க..”

”தேங்க்ஸ்..!!”

”நா.. இன்னொன்னு கேப்பேன்..”

”கேளு..?”

”தற்சமயத்துல.. நீங்க யாரையுமே லவ் பண்லயா..? இல்ல.. லவ் பண்ணி பெயிலியர் ஆகிருச்சா..?” அவன் தோளில் தலைசாய்த்தவாறு கேட்டாள்.

சசி அமைதியானான். அவன் நினைவுகள் புவியாழினியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. ஒரு ஆழமான பெருமூச்சு விட்டு.. மெதுவான குரலில் சொன்னான்.! ”அத எப்படி சொல்றதுனு தெரியல..மா..!”

”நீங்க எப்படி சொன்னாலும் பரவால்ல..! சொல்லுங்க..!”

”நா மட்டும் விரும்பினேன்.. அதுவும் ஒரு மோசடியா முடிஞ்சுருச்சு..! ஸோ.. லவ்வுன்னால ரொம்ப கசப்பா இருக்கு..!” என்றான்.

”ஓ.. எதிர் பாத்தேன்..! அது.. எப்படி..?”

”தெரிஞ்ச பொண்ணு.. ரொம்ப நல்லா பழகினா.. ஆனா அது…. விடு..! அதப்பத்தி பேசினா நா.. இப்பகூட அப்செட்டாகிருவேன்.. இன்னொரு நாள் பேசிக்கலாம்.. ஓகே..?” என்றான்.

”ஓகே.. ஓகே.. கூல்..” என அவன் நெஞசைத் தொட்டாள் ”சரி விடுங்க..!”

அப்படியே சிறிது நேரம் அமைதியாக நின்றனர். எந்தவித தயக்கமும் இல்லாமல்.. சசியின் நெஞ்சை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள் இருதயா.

சசி பேச்சை மாற்ற விரும்பினான். ”ஆமா.. தலைல என்ன பூ வெச்சிருக்க..?”

பெருமூச்செறிந்தாள். ”ஏன்..?”

”கமகமனு.. மணக்குது..” அவள் உச்சந்தலையில் மெதுவாக முத்தம் கொடுத்தான்.

”ஆஹா.. என்ன.. சாருக்கு ரொமான்ஸ் மூடு போலருக்கு..?” எனப் புன்னகைத்தாள்.

”ம்.. ம்ம்..! உன்ன மாதிரி ஒரு க்யூட்டான பொண்ணு.. இவ்ளோ.. கிட்ட.. இப்படி தோளோட தோள் உரசி நின்னும்.. எனக்கு ரொமான்ஸ் மூடு வரலேன்னா.. அப்றம்.. நான்….”

”போதும். . போதும்..” என சட்டென விலகினாள்.

”ஹேய்.. என்னாச்சு..?”

”ஒன்னுல்ல..” சற்று விலகி நின்றாள்.

”சரி.. என் லவ் பத்திலாம் கேட்டியே.. நீ எப்படி.. இதுக்கு முன்ன..?” என சிரித்தவாறு கேட்டான்.

”நோ.. நோ..! அதெல்லாம் எதுவும் இல்ல..!!” என்றாள்.

”ஸ்கூல் லைஃப்ல..?”

” ஹைய்யோ.. இல்ல..!!”

”இருந்தா மட்டும் சொல்லிடவா போற..? பொதுவா பொண்ணுங்களே.. இந்த விஷயத்துல.. அடக்கம்தான்..!!”

”ஜீஸஸ்..! ப்ளீஸ் நம்புங்க.. அப்படி எதுவும் இல்ல..!” என்றாள்.

”ஓகே.. கூல்..!!” என்றான் சசி.

அவள் மெதுவாக நகர்ந்து மொட்டை மாடியின் மறுபக்கத்தில் போய் நின்றாள். எட்டி கீழே பார்த்துவிட்டு அவனிடம் சொன்னாள் ”இந்த பக்கம் வாங்க..!!”

”ஏன்..?” எனக் கேட்டவாறு போனான்.

”நாம.. அங்க நிக்கறது.. ரோட்லருந்து பாத்தாக்கூட நல்லா தெரியும்..” என்றாள்.

”ஓ..!!” மறுபக்கம் நின்றால் அவர்கள் நிற்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவள் பக்கத்தில் போய்..நின்றான். ”ஸாரி.. பட்.. எனக்கு உன்ன கிஸ் பண்ணனும் போலருக்கு..”

”இப்ப.. வேனாமே.. ப்ளீஸ். .” என்றாள்

”ஏன்..?”

”எனக்கு ஒரு மாதிரி.. இதா இருக்கு.. ப்ளீஸ்..”

”ம்.. ஓகே.. உன் கன்னத்துல மட்டும் ஒன்னு குடுத்துக்கட்டுமா.. ப்ளீஸ்..” அவள் கைகளைப் பிடித்தான்.

”ஹைய்ய்ய்யோ….” எனச் சிணுங்கினாள். அவள் வெடகப்படுகிறாள் என்பது புரிந்தது.

”ப்ளீஸ்..!!” மெதுவாக அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் ”தேங்க்ஸ்..!!”

அவளே அடுத்த கன்னத்தையும் காண்பித்தாள்.

அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. புன்னகையுடன் அவளின் அடுத்த கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

சசி முத்தம் கொடுத்து முடிக்க.. சட்டென அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவளை அப்படியே நெஞ்சோடு சேர்த்து இருக்கி அணைத்துக் கொண்டு அவள் உச்சியில் முத்தம் கொடுத்தான் சசி.

அவள் மெதுவாக முகம் நிமிர.. சசி.. அவளின் மெல்லிய சிவந்த அதரங்களில் அவன் உதடுகளைப் பதித்தான். இருதயா கண்களை மூடிக்கொள்ள.. சசி அவளது உதடுகளைக் கவ்வி.. உறிஞ்சித் தொடங்கினான்..!!

இருதயாவின்.. ரோஜா இதழ்போண்ற.. மெல்லிய உதடுகளை உறிஞ்சி.. அதில் இருந்த தேன்துளிகளைச் சுவைக்க.. சசி இன்று எந்த அவசரமும் காட்டவில்லை..! பூப்போண்ற.. அவளது மெண்மையான உதடுகளை நிறுத்தி நிதானமாகச் சுவைத்தான்..!

இதுபோண்ற ஒரு ஆழமுத்தத்தை உணர்ந்தறியாத இருதயா.. அவனிடம் தன் கள்ளூரிய இதழ்களைக் கொடுத்துவிட்டு அதில் கிறங்கிப் போய்.. அவனை நெஞ்சில் இருக்கிக்கொண்டு நின்றாள்..!!

அவள் இதழ்களில் தேன் உறிஞ்சிய சசி.. அவள் முதுகை வளைத்து அணைத்து.. அவளது முதுகைத் தடவினான்.! அவள் உதடுகளை விட்டு.. தன் உதடுகளைப் பிரித்தவன்.. சில நொடிகள்.. லைட் வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்த்தான். அவள் மூடிய இமைகளைப் பிரிக்கவே இல்லை.

மெல்லிய புன்னகையுடன் அவளது மூடிய இமைகளின் மேல் முத்தம் கொடுத்தான்.!

கண்களைத் திறந்து.. அவனைப் பார்த்தாள் இருதயா. மீண்டும் அவனை சட்டென நெஞ்சில் இருக்கினாள்.

அவளை அணைத்து.. அவள் கழுத்தை வருடினான் சசி. ”ஹேய்..”

”ம்..ம்ம்..?”

”தேங்க்ஸ்..!”

”ம்..ம்ம்..!!”

சசிக்கு மீண்டும் அவள் உதடுகள் தேவைப்பட்டது. அவள் முகத்தை நிமிர்த்தி.. அவளது உதடுகளை மறுபடியும் கவ்வினான். அவளது உதடுகளை உறிஞ்சிவிட்டு.. மிக மெதுவாக.. அவன் நாக்கை அவள் வாய்க்குள் விட்டு துலாவினான்.!

அதேநேரம்.. மாடிப்படிகளில் யாரோ ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. அதை உணர்ந்த சசி சட்டென அவளை விலக்கி.. தள்ளி நின்றான். ”யாரோ வராங்க..!!”

அவளும் விலகி நின்றாள். இருதயாவின் தம்பி மேலே வந்தான். இருதயாவைப் பார்த்து ”மம்மி கூப்பிடுது.. வாடீ..” என்றான்.

”போடா.. வர்றேன்..!!”

அவன் நகரவில்லை.

”சாப்பிட்டாச்சாடா..?” என சசி அவனிடம் கேட்டான்.

”ம்..” என தலையாட்டினான்.

இருதயா ”சரி.. நா போறேன்..” என்றாள்.

”ஓகே..” என்றான் சசி.

”குட்நைட்…”

”குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான் சசி.

அவள் தன் தம்பியுடன் கீழெ இறங்கிப் போக… அவளையே பார்த்தவாறு நின்றான் சசி..!!

அவன் இதயத்தில் காதல் தளும்பி வழிந்தது….!!!!!

-வளரும்….!!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000