இதயப் பூவும் இளமை வண்டும் – 115

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

Jacket Kalattum Kathai கவிதாயினியின் திருமணம்.. விமரிசையாக நடந்து முடிந்தது. தன்னால் ஆனா..எல்லா வேலைகளையும் மிகவும் மகிழ்ச்சியாகவே செய்தான் சசி.!

அவளது திருமணம் அவன் வீட்டுத் திருமணம் போலவே.. அவனுக்கு ஒரு உணர்வைத் தோற்றுவித்தது.!!

கவியின் திருமணம்.. சசியையும்.. புவியாழினியையும் மீண்டும் நெருக்கமாக்கியது. அவன் கண்டுகொள்ளாமல் இருந்தால்கூட அவளாகவே.. வந்து அவனிடம் வழிய வழியப் பேசிச் சிரிப்பாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவாள். சில நேரத்தில் அவனைத் தொட்டுப் பேசுவது.. அவனைக் கிண்டல் செய்வது என.. மீண்டும்.. பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டாள்..!

அவளோடு பேசாமல் இருந்த போது மிகவும் கட்டுப்பாடாக இருந்த.. சசியின் மனம்.. மீண்டும் தடுமாற்றத்தை அடைந்தது. அவன் உளமாற விரும்பிய.. அவளின் அழகுப் பெண்மையும்.. அந்த எளிய முகமும்.. அவனுக்குள் புதைந்து கிடந்த காதல் உணர்வை.. தட்டி எழுப்பியது போல் இருந்தது. அந்த விசயத்தில் அவன் மீண்டும் தன் மனதைத் தொலைக்க விரும்பவில்லை. அவளிடம் எச்சரிக்கையாகவே நடந்து கொண்டான்.! மற்ற பெண்களைப் போல்..இவளிடம் அவனால் நெருங்கிப் பழக முடியாது. அப்படி பழகினால்… அவனால் மீண்டும் அவளைவிட்டு விலக முடியாது..!!

இப்போதும்கூட.. அவள் கண்களைப் பார்த்துப் பேசும் அந்தத் தருணங்களில்.. அவனது இதயத்தில் ஏதோ ஒன்று.. உடைவது போலவே.. அவனுக்குத் தோண்றும்..!! அதனால் பெரும்பாலும் அவள் கண்களைச் சந்தித்துப் பேசுவதைத் தவிர்க்கவே செய்தான் சசி..!!

மறு அழைப்பிற்கு வந்திருந்தாள் கவி. அவளது வீட்டில் உறவினர்களுக்கெல்லாம் விருந்து நடந்தது. சசியும்.. புவியும்தான்.. அனைவருக்கும் உணவும் பறிமாறினார்கள்..!!

அவர்களது ஒற்றுமையையும் நெருக்கத்தையும் கவனித்த கவி.. தனியாக இருக்கும் போது சசியிடம் சொன்னாள். ”தேங்க்ஸ் டா.. மாமு..”

”எதுக்கு.. மச்சி..?”

”என் பேச்ச மதிச்சு.. புவிகூட.. மறுபடி.. பிரெண்டானதுக்கு..!”

”ஓ..!! அதவிடு..! உன் மொத ராத்திரி எப்படி இருந்துச்சு..?”

”ச்சீ.. போடா…” என்று சிரித்தாள்.

”ஹேய்.. இதெல்லாம் உனக்கே.. கொஞ்சம் ஓவரா தெரியல..?” என அவன் கேட்க…

உதட்டில் லேசான புன்னகை தவழ.. ”ம்..ம்ம்..! சூப்பர்.. டா..!!”

”சூப்பர்.. னா..?” கண்ணடித்தான் ”ஹவ்..?”

அவன் பக்கத்தில் நெருங்கிச் சொன்னாள் ”முத்தமோ.. முந்தானை சுகமோ.. எனக்கு ஒன்னும்.. புதுசில்லயே..”

”அது சரி..! உன் ஹஸ்.. எப்படி..?”

”நைஸ்..டா..!!”

”ம்..ம்ம்..!! வாழ்த்துக்கள்..!!”

”தேங்க்ஸ்டா…” என்றாள்..!!

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து..ஒரு காலை நேரம்.. சாப்பிட்டுவிட்டு டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி. அம்மா வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.

நேராக அவனிடம் வந்தாள் புவியாழினி. ”தோட்டத்துக்கு போகலயா.?” எனக் கேட்டாள்.

அவளைப் பார்த்தான். காட்டன் நைட் ட்ரஸ் போட்டிருந்தாள். அவளது வலது கையை.. நைட் ட்ரஸ்ஸின் பாக்கெட்டில் விட்டிருந்தாள். இரண்டு கால்களையும்.. நிலத்தில் சமமாக ஊன்றி.. நேராக நின்றிருந்தாள். அவளது சின்னக் கொங்கைகள்.. சற்று உள் அமுங்கி.. அவளது அழகின் எழிலைக் காட்ட… அதைக் கண்ட சசியின் மனம்.. சஞ்சலப் படத் தொடங்கியது.

‘ம்.. சூப்பர் ட்ரக்சர்..!’

”நீ காலேஜ் போகல..?” என அவளைக் கேட்டான்.

”இன்னிக்கு போகல..! நீங்க.. தோட்டம் போகலயா..?”

”ஏன்..?”

”சொல்லுங்க…”

”அதான்.. ஏன்..?”

வெளியே திரும்பி பார்த்துவிட்டு.. அவனைப் பார்த்தாள். ”எனக்கு கொஞ்சம்…மனசு செரியில்ல..”

”சரி…?”

” நா.. உங்ககிட்ட கொஞ்சம்.. பேசனும்..”

”ஓ..!!”

” என்ன.. ஓ..?”

”என்கிட்ட பேசினா.. செரியாகிருமா.. உன் மனசு..?” அவன் கிண்டல் செய்வதாக நினைத்து.. அவனை லேசான முறைப்புடன் பார்த்தாள்.

அவள் அமைதியாக நிற்க… சசி மெதுவாகக் கேட்டான். ”என்ன.. பேசனும்..?”

”பர்ஸ்னல்..”

”ஓ..!!”

”கொஞ்சம்.. தனியா பேசனும்..”

”பேசு…”

”இங்க வேண்டாம்.. தனியா..”

”நீ மட்டுமா..?”

”என்ன.. நெக்கலா..?”

”பின்ன..? நாம தனியாதான இருக்கோம்..? சொல்ல வேண்டியது தான..?”

”உங்கம்மா இருக்கு..”

”அம்மா வெளில இருக்கு..”

”பேசினா கேக்கும்..”

”அப்படி என்ன பேசப்போற..?”

”பர்ஸனல்…”

அவள் கண்களை உற்றுப் பார்த்தான். அவளது கண்கள் அவனைத் திண்றது. அவன் மனதில் தோண்றிய உணர்ச்சியை என்னவென்று சொல்வது..? அவள் மீது தோண்றுவது.. சபலமா.? காதலா..?

”எங்க வீட்ல யாருமில்ல.. வாங்களேன்..!” என்றாள்.

ஒரு கணம் யோசித்தான். தன் வாழ்வை நிர்மூலமாககியவள் எனத் தோண்றியது. இப்போதும் ஆபத்தானவள்தான்..! ”பரவால்ல.. இங்கயே சொல்லு..” என்றான்.

”இங்க வேண்டாம்..கொஞ்சம் மனசு விட்டு பேசினும்..! ஒரு பத்து நிமிசம் வாங்களேன்.. ப்ளீஸ்…”

பாவமாகத் தோண்றியது. ஆனாலும் உடனே இறங்கிப் போய்விடக் கூடாது. அவளையே பார்த்தான்.

”ஒரு பத்து நிமிசம்.. எனக்காக.. ஸ்பெண்ட் பண்ண மாட்டிங்களா..?” கொஞ்சம் அடிபட்ட குரலில் கேட்டாள்.

லேசான புன்னகையுடன் மறுப்பாகத் தலையை ஆட்டினான். அவனையே வெறித்துப் பார்த்தாள். பின்.. நெஞ்சைப் பிளந்து கொண்டு ஆழமான ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள். அவமானத்தால் அவளது முகம் சூம்பிப் போனது. சட்டென அங்கிருந்து திரும்பிப் போனாள் புவி.!!

அதன் பிறகு… இரண்டு நாள் அவள் அவனுடன் பேசவே இல்லை. அவனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். அது சசிக்கு வேடிக்கையாக இருந்தது. ‘நீ பேசாமல் போவதால்.. எனக்கென்ன நட்டம்.? நீ முகம் திருப்பிக் கொண்டு போனால்.. நான்.. உன்னுடன் வழிய வந்து பேசுவேன் என்று எதிர் பார்க்கிறாயோ? முட்டாள் பெண்ணே.. அந்த சசி எப்போதே செத்துப் போனான். உன் ஒரு பார்வைக்காக ஏங்கியதும்.. உன் சிறு புன்னகைக்காகக் கெஞ்சியதும்… ஹா.. அது ஒரு காலம்.! அப்போது இருந்த சசி வேறு..அவனுக்கு நீ என்றால் உயிர்.. உன் மேல் கொள்ளை ஆசை… கட்டுக்கடங்காத காதல் எல்லாம் இருந்தது..! சூரியன் உதித்தால் அதைக்கண்டு மலரும்.. சூரிய காந்தி போல.. உன் பூ முகம் கண்டே.. என் இதயம் மலரும் காலம் அது..! அந்த சசி எப்போதோ செத்துப் போனான்.! இவன்.. வேறு.! இவன் மனதில் இனி நீ எள்ளளவும் இடம் பிடிக்க முடியாது. ! நீ பேசாமல் போவாதால்.. துளிகூட நான் வருந்தப் போவதில்லை..!’ அவன் பட்ட அடியின் வலி.. சசியை.. ஆவேசமாகவே.. எண்ண வைத்தது..!!

ஆனால் அடுத்த நாள்.. அவனைப் பார்த்தபோது புன்னகைத்தாள் புவி. அவள் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம்.. தோற்றத்தில் கூட ஒரு மாறுதல் இருப்பதைக் கவனித்தான். அவன் பைக்கைக் கிளப்ப..

”கெளம்பிட்டாப்ல இருக்கு..?” எனக் கேட்டாள்.

அவன் பேசவில்லை.

”அலோ.. உங்களத்தான்..” என்றாள் சத்தமாக.

அவளைப் பார்த்தான். ”ம்..ம்ம்..!!”

”எங்க..?”

”ஜாலியா..”

”குடுத்து வெச்சவங்க..”

”யாருகிட்ட..?”

சிரித்தாள். ”எப்ப வருவீங்க..?”

”ஏன்..?”

”வீட்ல.. எனக்கு செமையா.. போர் அடிக்குது..”

”செரி..”

”நானும் வரட்டுமா..?”

”எங்க..?”

” எங்காவது போலாம்.. ஜாலியா..? ஏன் சினிமாகூட போலாம்..!”

”அது..சரி..”கிண்டலாகப் புன்னகைத்தான் ”ஆனா.. எனக்கு இப்ப சினிமா பாக்ற மூடு இல்ல..” என்றுவிட்டு.. அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் பைக்கைக் கிளப்பிவிட்டான்..!!

அவளால வலிய வந்து.. அவனுடன் இவ்வளவு தூரம் உறவாட முயல்கிறாளே… இது நல்லதற்கா..????

-வளரும்……!!!!!!

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், என்னுடன் விவாதிக்க விரும்பினால், இந்த email ID [email protected] அல்லது hangout மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.